29 ஜூலை 2015

அப்துல் கலாம்!



நல்லவேளை, இதுவரையிலும் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. வீரமும், விவேகமும் இல்லாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதை மேதகு அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்கு பின்னால் நாம் உணர முடிகிறது. பதவிக்காவும், பணத்துக்காகவும், தங்களின் புகழ் அனுதாபத்திற்காகவும் அரசியல்வாதிகளுக்காக தற்கொலை நாடகத்தை அரங்கேற்றிய கும்பல்கள், பெருந்தமிழர் கலாம் விசயத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றன என்பது மட்டுமே சற்று ஆறுதலான விசயம்.

எண்ணங்கள் தான் பிரபஞ்சத்தை நிர்ணயிக்கின்றன என்ற மாபெரும் தத்துவத்தை, ”கனவு” என்ற பெயரில் ஆழமாக அனைவரது மனதிலும் பதிய வைத்து, அறிவை விசாலப்படுத்த கற்றல் பண்பை வளர்க்க உத்வேகம் தந்து கொண்டிருந்த, முனைவர் கலாமுடைய இழப்பு வருத்தமாய் அமைந்தாலும், அவரது கருத்துகளை தாங்கி பயணிக்கும் அனைவரும் நிச்சயமொரு நாள் இந்த பிரபஞ்சத்தையே தன் வசப்படுத்துவார்கள் என்பதில் மாற்றுகருத்தே இல்லை என்பதும் மகிழ்வான நிகழ்வு. ஏனெனில், கலாம் இனி எக்காலத்திலும் புறக்கணிப்பட முடியாத சக்தி!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக