17 ஜூலை 2015

யார் கடவுள்?

கடவுளிடம் சில கேள்விகள்:

1.கடவுள் உலகத்தை படைத்தார் என்றால் அவர் படைக்கும் முன் இங்கேஎன்ன இருந்தது? எதை பார்த்து இந்த உலகை படைத்தார் ஏனென்றால் நாம் ஏதோ ஒரு பொருளை உருவாக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு மூலக்கூறு நமக்கு தேவை? ஆகவே கட வுள் உலகத்தை படைக்க பயன்படுத்திய மூலக்கூறு எது? இல்லை அவரின் கற்பனையில் உருவாக்கினாரா? அவ்வளவு பெரிய ஞானத்தை அவருக்கு யார் கற்றுத்தந்தது இல்லை அவரே ஒரு கற்பனையா?

2.கடவுள் கற்ச்சிலைகளில் இருக்கிறார் என்றால் அந்த சிலைவடிக்கும் கலையை மனிதன் கற்றுக்குகொள்ளும் வரை கடவுள் ஏங்கு ஒளிந்திருந்தார்? எப்படி சிலை வடிக்க தெரியாத மனிதனுக்கு அருள் புரிந்தார்? அப்படி கற்ச்சிலையே இல்லாத அந்தக்காலத்திலேயே கடவுளை மனிதன் உணர்ந்தான் என்றால் கற்ச்சிலை வடிப்பதின் அவசியம் என்ன?

3.கடவுள் என்பவர் ஒருவர்தான் என்றால் அவர் படைத்தது சூரியன் சந்திரன் இரவு பகல் நன்மை தீமை ஆண் பெண் இப்படி இருவகையாய் இருப்பதின் காரணம் என்ன?

4.கடவுள் ஒளி வடிவானவர் என்றால் அவர் படைத்த பொருட்களிலெல்லாம் இருளும் (நிழல்)சேர்ந்து ஏன் வந்தது?

5.கடவுள் அன்பானவர் என்றால் அன்பை போலவே கோபம் சோகம் திருட்டு பொய் போன்ற இன்னூம் சில பல உணர்வுகளையும் ஏன் தந்தார் இல்லை இதுபோன்ற உணர்விலும் அவர் இருக்கிறாரா?

6.கடவுள் உருவம் இல்லாதவர் என்றால் நாம் இறந்த பின்பு நல்லவர்களை வலது புறமாகவும் தீயவர்களை இடது புறமாகவும் எப்படி நிற்க சொல்லமுடியும்?

7.கடவுள் எல்லோருக்கும் சமமானவர் நல்லவர் என்றால் நல்லவர்களை சொர்க்கத்திலும் தீயவர்களை நரகத்திலும் ஏன் பிரித்து பார்க்கிறார்?

இப்படி நீள்கிறது இன்னும் பல கேள்விக்குறிகள்....??

இப்படிக்கு கடவுள் பக்தன்
தினேஷ்
----------------------------------------------------------------------------
- இது நண்பர் தினேஷ் (Dinesh Wave) அவர்களுடைய பதிவு. அவரது கேள்விகளுக்கு அடியேனின் பதில்கள்:-
--------------------------------------------------------------------------

1.கடவுள் எதையும் படைக்கவில்லை. மாறாக படைக்கப்பட்டதாக நம்ப படுவதை கடவுளின் கருணையென நம்புகிறோம்.

2.கடவுள் கற்ச்சிலைகளில் இருக்கிறார் என யாரும் சொல்லவில்லை. ஆனால் கற்சிலையை ஒரு எண்ணக்குவியலுக்கான ஒரு கருவியாக பார்க்கலாம். மேலும் கலை என்பதே அறிவு சம்பந்தப்பட்டது. அந்த அறிவால் விளைந்த கலையை மனிதன் கற்று கொண்ட பிறகு அந்த அறிவுக்கு அடையாளமாக கடவுளை அடையாளப்படுத்தினர். இங்கே அருள் என்பது வெளியிலிருந்து கடவுள் போல யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. அது உள்ளுக்குள்ளாகவே இருந்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானதொரு குறிப்பிட்ட காலத்தில் வெளிப்படுகிறது.

3.உட்சபட்ச அறிவே கடவுள். ஒரேவோர் அறிவால் நன்மையும் தீமையும் செயல்படுத்த முடியும் போது சூரியன் சந்திரன் இரவு பகல் ஆண் பெண் இப்படி இருவகையாய் இருப்பதில் தவறேதுமில்லை.

4. இருள் இருப்பதால் தானே ஒளிக்கு தேவை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனாலும் இருளும், ஒளியும் வேறுவேறல்ல. இரண்டிற்குள்ளும் இரண்டு தன்மைகளும் இருக்கின்றன. அதனால் கடவுள் ஒளி மட்டும் பொருந்தியவர் அல்ல. இருள் சூழ்ந்தும் கடவுள் இருக்கலாம்.

5. கடவுள் அன்பானவர் மட்டுமல்ல. நாம் உணர்ந்தால் தான் கடவுளே. அதனால் எல்லா உணர்விலும் கடவுள் தன்மை இருக்கின்றது.

6. ஒளிக்கு உருவமுண்டு. அதனால் வலதும் இடதும் இருக்கலாம்.

7. கடவுள் சமமானவர். அதனாலேயே சமவிகிதத்தில் பலன்களை தருகிறார். சொர்க்கம் நரகம் என்பது போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருப்பது சரிதான். ஆனால் நாம் கற்பனை செய்துள்ளது போன்ற சொர்க்கமும், நரகமும் இருப்பதில்லை. மாறாக, தனித்தனி நிலைகளாக வகைபடுத்தப்பட்டிருப்பார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது குறள். நாம் புனிதனாக வாழ்ந்து முடித்தால் தெய்வமாகவே வைக்கப்படுவோம்.

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக