01 ஏப்ரல் 2015

மக்கள் முதல்வரால் மக்கள் தொலைக்காட்சி தடையா?

மக்கள் தொலைக்காட்சியை தமிழகமெங்கும் தடை செய்திருக்கும் சர்வாதிகார அதிமுக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும். இல்லையெனில், நாளை கேப்டன் டிவி முதல் கலைஞர் டிவி வரை ஏதோவொரு சந்தர்பத்தில் தடை செய்யப்படும் நிலை வந்தால், அதை தட்டிக்கேட்க நாதியற்று போய்விடும். 66ஏ சட்டத்தை இணையத்திற்கு மட்டும் கொண்டுவராமல், ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள தொலைக்காட்சி தொடர்பகங்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்பதை தான் இதுபோன்ற சம்பவங்கள நமக்கெல்லாம் நினைவூட்டுகின்றன. தமிழ் சேனல்களில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே தமிழரின் பண்பாட்டை வெளிக்காட்டும் ஒரே தொலைக்காட்சி. இங்கே, எந்த கவர்ச்சி ஆட்டத்திற்கும் கிழி கிழின்னு கண்டபடி எந்த நாலாந்தர நடிகையும் மார்க் போடவில்லை. பால் மணம் மாறாத பால்ய சிறார்களை, அரைகுறை ஆடை உடுத்தி காமரசம் சொட்ட பாடல் பாடச்சொல்லி கமகம், பொடி பொடி சங்கதி பற்றி அவா யாரும் பேசவில்லை. முக்கிய செய்திகள் என்பதை கூட முதன்மை செய்திகளென, வேட்டி, சட்டை, துண்டு, புடவையென தமிழர் உடையில் தமிழை தமிழாகவே செய்திகள் மூலம் வழங்கும் மக்கள் தொலைக்காட்சியை தடை செய்திருப்பதன் உள்நோக்கம் மிக கேவலமாக இருக்கின்றது. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது போல, இதற்கான பின்விளைவுகளையும் மோசமாகவே இருக்க போகிறது என்பதையும் அதிமுக உணரத்தான் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக