08 ஏப்ரல் 2015

செம்மர முதலாளிகளுக்கு தண்டனை என்ன?

செம்மரத்தை வெட்டுவது சரி தப்புன்னு விவாதிக்கிறதுக்கு முன்னாடி, அந்த மரத்தை வெட்ட சொல்றவன் யாரு? அதை வைத்து வியாபாரம் செய்து கோடிகளில் புரளுவது யாரு?ன்னு கேட்க நாதியில்ல. ஓர் உயிரை கொல்வதற்கான அதிகாரத்தை காக்கிச்சட்டைக்கு தந்தது யாரு? ஆந்திர என்கவுண்டர் புகைப்படங்களை பார்க்கும் போதும், ஈழம் தான் நினைவுக்கு வருது. எல்லா இடங்களிலும் தமிழனை அடிச்சிக்கிட்டு தான் கிடந்தாய்ங்க. இப்போ கொல்லவும் ஆரம்பிச்சிருக்காய்ங்க. உடனே, அவங்க பண்ணினது தப்பு தானே? அதுனால தான் சுட்டு கொன்னுருக்காய்ங்கன்னு யாராவது நினைச்சீங்கன்னா, நாட்டின் குடிமகனை மரம் வெட்டி பொழப்ப நடத்த வச்சிருக்க அரசாங்கத்தை நினைச்சு தான் முதலில் வருத்தப்படணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக