09 ஜூன் 2021

PhD பரிதாபங்கள்!


#ஒன்றிய_உயிரினங்கள் என ட்விட்டரில் இருநாட்களாக ட்ரெண்டிங்கான பல பதிவுகள் சுவாரசியமாக இருந்தன.
என் கடந்த கால பணியின் அனுபவங்களில் #முனைவர்_உயிரனங்கள் பலரை நெருங்கி கவனித்திருக்கிறேன். பழகிருக்கிறேன். அவர்களின் உண்மை முகத்தை கண்டிருக்கிறேன்.
கிணற்று தவளை,
கண்ணை மூடிய பூனை,
செம்மாறியாடு,
கூண்டுக்கிளி,
அட்டைப்பூச்சி,
எருமைமாடு
என பல PhDக்களில், போலிகளும், வெற்று பிம்பங்களுமே இருந்தன. 'தான்' என்ற பெருங்கூச்சல்கள் மட்டுமே அங்கே தென்பட்டன. வாட்சப் குரூப்பில் ஆங்கிலத்தில் எழுதுவதாக நினைத்து அடிப்படை வார்த்தைகளில் கூட ஆறேழு பிழைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். வேர்ட் ஃபைல்லோ, எக்‌ஸல் ஃபைலோ கூட ஒழுங்காக உருவாக்க தெரியாமல் முழி பிதுங்கியதை பார்த்திருக்கிறேன். அடிப்படை ஸ்போக்கன் இங்லீஷ் கூட தெரியாமல் தங்லீஷில் மேடையேறி ஒப்பேற்றியதை கவனித்திருக்கிறேன்.
கணினித்துறையில் பிஎச்.டி பெற்றவர்களுக்கு, அப்ளிகேசன் தொடர்பான சர்வர்களுக்கும், ஆப்ரேட்டிங் சிஸ்டம் தொடர்பான சர்வர்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாததை பார்த்து வியப்படைந்திருக்கிறேன். நெட்வொர்க்கிங் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாதவர்கள், அதே கணினித்துறையில் பிஎச்.டி பெற்றிருந்ததை விட, அது தொடர்பாக மாணவர்களிடம் பாடமெடுப்பதற்காக Non Teaching ஊழியர்களிடம் பாடம் கேட்டு ஓடிக் கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறேன்.
இதுபோல சொல்ல ஆயிரம் நிகழ்வுகள் உண்டு. 'பல' வகைகளில் கெயிடை கரெக்ட் செய்து முனைவர் ஆனவர்களே அதிகம் இருப்பதையும் பல ஆதாரங்களின் அடிப்படையில் மெய்ப்பொருள் கண்டறிந்த பிறகே, கல்லூரிகளின் கல்வித்தரத்தை எடைபோட முடிந்தது. விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. நான் பேசுவது பெரும்பான்மைகளை பற்றி.
எனவே, பிஎச்.டி முடித்த முனைவர்கள் அனைவருமே அதிமேதாவிகளோ, அதிபுத்திசாலிகளோ அல்ல. அவர்களுக்கு எல்லாவித துறைசார் அறிவும் இருப்பதில்லை என்ற எதார்த்தத்தையும் ஒத்துக்கொள்ள பழகுங்கள். ஏனெனில் அவரவர் துறையிலேயே பதில் சொல்ல முடியாத விசயங்கள் ஆயிரமுண்டு. மீண்டும் சொல்கிறேன், இங்கே விதிவிலக்குகளை பேசவே இல்லை. ஆனால், கூத்தாடும் குறைகுடங்களையே சுட்டிக்காட்டிருக்கிறேன்.
- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக