16 நவம்பர் 2016

ஜல்லிக்கட்டு தடை... அதை உடை!

அரசியல்வாதிகளை நம்பி பலனில்லை; நம் பாரம்பரியத்தை அழிக்க நினைக்கும் பீட்டா போன்ற இல்லுமினாட்டி கும்பலின் எச்சில் பணத்தை நக்கி பிழைக்கும் அரசியல்வாதிகளை நம்பி இனி எந்தவித பலனுமில்லை. காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கன்னடன் மதித்தானா? கன்னடனும் ஹிந்தியாவில் தானே குடிமகனாக இருக்கிறான்? ஆதித்தமிழிடமிருந்து மொழிவாரியாக பிரிந்து போன அவனுக்கே சட்டத்தை மதிக்க தோன்றவில்லை? நமக்கென்ன தயக்கம்?

தெலுங்கனும், கன்னடனும், மலையாளியும் 'திராவிடன்' என சொல்லி தமிழனிடம் அரசியல் செய்யும் எந்த திராவிட அமைப்பாவது இதுபற்றி உணர்வோடு வாயை திறந்ததா? திராவிடம் என்பதன் அர்த்தமே தென்னக பிராமணருக்கான அடையாளச்சொல் மட்டுமே. ஆனால் சம்பந்தமேயின்றி தமிழனும் திராவிடனாக்கப்பட்டான், இல்லுமினாட்டி ஏஜென்ட்டான ஈ.வெ.ரா.வால்...

குமரிலபட்டர் உருவாக்கிய திராவிடம் என்ற இச்சொல்லை, ஒப்பிலக்கணம் என்ற நூலால் ஆங்கிலப்படுத்திய ஆய்வாளர் கால்வெல்டினால் தமிழன் திராவிடனாக்கப்பட்டு விட்டான். இந்த திராவிடம் என்ற வகைபடுத்தப்பட்ட மொழிக்குடும்பத்திற்கு விதை மட்டுமே தமிழனுடையது. ஆனால் தமிழன், என்றைக்குமே திராவிடன் இல்லை. அப்படி பார்த்தால், வட திராவிட மொழியென வகைபடுத்தப்பட்ட பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாண மக்கள் பேசும் 'பிராகுயி' என்பது கூட தமிழ்மொழியின் விழுதுகளே.

பாகிஸ்தான் - குஜராத்துக்கு இடைப்பட்ட ஹரப்பா - மொகஞ்சதாரோவிலேயே ஏறுதழுவலுக்கான சான்றுகள் உண்டு. அங்கே கூட 'காளிபாங்கன்' என்ற பண்டைய துறைமுகம் உண்டு. பாங்கன் / பங்கன் - என்ற இந்த இரண்டும் தமிழ்சொற்களே. பாங்கன் என்றால் தோழன்; பங்கன் என்றால் உடைமையுடையவன் என்று பொருள். பாகிஸ்தான் பலுசிஸ்தான் ஹரப்பா மொகஞ்சதாரோ என சம்பந்தமே இல்லாமல் சொல்வது போல் தோன்றினாலும், எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு உண்டு.

உலகின் பழைமையான எல்லா நாகரீகமும் அழித்தொழிக்கப்பட்டது. அவற்றுள் இடம்பெயர்ந்து உயிர் பிழைத்து மீண்டும் இழந்தவற்றை மீட்டெடுத்து வாழும் ஓர் ஆதிநாகரிகம் தமிழருடையது. ஆனால், அந்த ஆதி நாகரிகத்தின் மீட்சியான பாரம்பரிய கூறுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு மீது தடை விதித்து இறக்குமதி செய்யப்பட்ட சட்டம் மூலம் அழித்தொழிக்கிறது இல்லுமினாட்டி கும்பல். கடந்த கால வரலாற்றின் மூலம் ஒன்றுதான் இங்கே நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எல்லா நாகரிகமும் அழித்தொழித்தது யாரோ ஒரு படையெடுப்பு கும்பலால் தான்... இப்போதும் கூட, மிச்சமிருக்கும் தமிழ் என்ற ஆதி நாகரிகத்தை அழித்தொழிக்க நவீன படையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இல்லுமினாட்டிகள் என்பதை புரிந்து நம் பாரம்பரியத்தை அழியவிடாமல் மீட்போம்.

ஜல்லிக்கட்டு தடையை உடைப்போம்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக