25 மார்ச் 2018

எம்.ஜி.ஆர் - சான்டோ சின்னப்பாதேவர் - அகமுடையார் வரலாற்று தொடர்பு!



எம்.ஜி.ஆருக்கும் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவருக்கும் பல ஒற்றுமை உண்டு. அவற்றுள் ஒன்று, மருதூர்.

எம்.ஜி.ஆரின் முழுப்பெயர்:மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்.

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரின் முழுப்பெயர்:மருதூர் மருதாசலமூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்.

அகமுடையார்களில் பலருக்கு இன்றைய கேரளத்தில் குலதெய்வ கோவிலும், திருமண உறவும் உண்டு. போக்குவரத்து சிரமங்களுக்காக கேரளாவிலிருந்து பிடிமண் எடுத்து வந்து அதே பெயரில் தங்களது பகுதியிலேயே குலசாமி கோவிலை கட்டியெழுப்பினார்கள். சேரநாடு என்ற பெயரில் ஆதித்தமிழகமாக இருந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட இராஜகுல அகமுடையார்களுக்கு பாத்தியபட்ட விருதுநகர் மாவட்டத்திலுள்ள மருதூர் ஐயனார் கோவில் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்த மருதூர் ஐயனார் கோவிலானது கேரளாவில் உள்ள கோவில்; இந்த ஐயனார் தான் எம்.ஜி.ஆரின் குலசாமி; இதே மருதூர் தான் எம்.ஜி.ஆரின் பூர்வீக ஊர்; இவையெல்லாம் கவனிக்கதக்க விசயம். கேரளாவிலுள்ள நாயர் சாதி என்பது பல இனக்குழுக்களின் கூட்டமைக்காகவே பிற்காலங்களில் உருவெடுத்தது. 13ம் நூற்றாண்டில் சேரநாடான கேராளவில் ஏற்பட்ட எழுச்சியில் அகம்படியர் மற்றும் வேளாளர் (நாயர்) என்போர் ஈடுபட்டதாக வரலாற்று குறிப்புகளை நோக்கும் போது, அகமுடையார்களின் கிளைக்குடிகளாக மேனன் பட்டமுள்ளோர் இருந்திருக்க கூடும்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் தாய் தந்தை வழி குலசாமிகளான, மருதங்குடி மருதாருடையாரும், வாணியங்குடி மருதப்ப ஐயனாரும் கூட ஒருங்கிணைந்த இராமநாதபுரத்திற்கு (விருதுநகர், சிவகங்கை) அருகிலுள்ள ஊர்கள் என்பதும், அங்கெல்லாம் அகமுடையார்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதும், மருது என்பது இயல்பாக இவர்களுக்கு சூட்டும் பெயராகவும் இருப்பதை கவனித்தாலே பல வரலாற்று உண்மைகள் புரியும். வாணியங்குடி மருதப்ப ஐயனார் மற்றும் மருதங்குடி மருதாருடையார் என்பதன் நினைவாகவே மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு, வெள்ளை மருது - சின்ன மருது என்ற பெயர்கள் அவர்களுக்கு வைக்கப்பட்டது.
இதுபோலவே கோயம்புத்தூரிலும் ஒரு மருதூர் உண்டு; அவ்வூரிலும் அகமுடையார்களே பெரும்பான்மை. கோவை - திருச்சி சாலையிலிருந்து சிக்னலில் தெற்கு நோக்கி நஞ்சுண்டாபுரம் சாலையின் கிழக்கு பகுதி மருதூர், மேற்கு பகுதி இராமநாதபுரம், (ஸ்டாக் மார்க்கெட்டிலிருந்து சிக்னல் வரை உள்ள பகுதி மருதூர்) பொதுவாக கிழக்கால ஊர், மேற்கால ஊர் என அழைப்பார்கள், இரட்டை கிராமம்.

சோழநாடான டெல்டா பகுதியிலுள்ள அகமுடையார்களுக்கு தேவர் பட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல விருதுநகர் மாவட்டத்திலும் அகமுடையாருக்கு தேவர் பட்டமென்பதை பார்வார்ட் ப்ளாக் தேசியத்தலைவராக இருந்த ஏ.ஆர்.பெருமாள் தேவர் மூலமாகவும், இராஜகுல அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்ட மருதூர் ஐயனார் கோவிலிலுள்ள பங்காளிகளின் பெயர் அச்சிடபட்டுள்ள அழைப்பிதழிலும், பெயர் பலகையிலும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யத்திற்கு அருகேயுள்ள மருதூரிலும் அகமுடையார்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்த மருதூருக்கு அருகிலுள்ள ’கடிநெல்வயல்’ வேம்படி ஐயனார் / வேம்புடையார் கோவில் தான் எங்களுக்கு குலசாமி.

இதே வேம்புடையார் என்ற பெயர்கொண்ட ஐயனார் சிவகங்கை அருகிலுள்ள பில்லூரிலுள்ள முத்தையா கோவிலில் வீற்றிருக்கிறார்; அவ்வூருக்கு ஓரிருமைல் தொலைவில் தான் வேம்பத்தூர் என்ற ஊரும் இருக்கிறது. இந்த வேம்பத்தூரும், வேம்புடையாரும் தொடர்புடையதாக இருக்கலாம். இன்றைக்கு அந்த வேம்புடையார் என்ற பெயர், வேகமுடையார் என மாற்றமடைந்திருந்தாலும் வேம்புடையாராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். மேலும், அவ்வூரில் அகமுடையாரே பெரும்பான்மை என்பதும், பில்லூர் அகமுடையார் என்ற தனித்த அடையாளமும் அவர்களுக்கு உண்டு என்பது கூடுதல் தகவல். வேதாரண்யம் அருகிலுள்ள இந்த மருதூர் ஐயனார் கோவிலின் பெயரிலும் ’வாணர்’ என்ற பெயர் உள்ளீடாக இருக்கின்ற ‘துயில் வாண ஐயனார்’ என்பதை கவனித்தால் மாவலி பூமியின் வரலாற்று தொடர்பு எளிதில் விளங்கும்.

#சின்னப்பாதேவர் #எம்ஜிஆர் #மேனன் #ஐயனார் #தேவர் #அகமுடையார்#வாணியங்குடி #மருதங்குடி #மருதூர் #கடிநெல்வயல் #வேம்புடையார்#பில்லூர் #விருதுநகர் #இராஜகுலம் #வாணர் #மாவலி #கோவை #ஏஆர்பெருமாள்தேவர் #மருதாருடையார் #மருதப்பஐயனார்


(இந்த பதிவோடு தொடர்புடைய படங்களெல்லாம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆருக்கும் அகமுடையாருக்கும் தொடர்புள்ள செய்திகளை பகிர்ந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர் எஸ்.இராமச்சந்திரன் ஐயாவுக்கும், அகமுடையார் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளரான நண்பர் சோ.பாலமுருகனுக்கும், கோவை மருதூர் பற்றிய தகவல்களை தந்த பழ.செல்வராஜூ அண்ணனுக்கும் நன்றி.)

01 ஜனவரி 2018

தமிழ்நாட்டை தமிழன் ஆளக்கூடாது!

Image may contain: 1 person, smiling

இதையே நாங்க சொன்னால், கண்டவனுக்கு பிறந்தவனெல்லாம் தமிழனை கன்னடனோ - தெலுங்கனோ - மலையாளியோ - மரட்டியனோ தான் ஆள வேண்டுமென அவனின் காலை நக்குவார்கள். ஆன்மீக அரசியலென்ற வேதம் சொல்லி ஆளத்துடிக்கும் பூதங்களின் கனவை கலைத்து, ஆண்மையான அரசியலை - ஆளுமையான அரசியலை நாம் தமிழராக எழுந்து செய்ய வேண்டும். "நல்லவன் வாழ்வதும், வல்லவன் ஆள்வதும் தான்!" காலம் நமக்கும் உணர்த்தும் உண்மை. காலம் நம் பக்கம் சிறகுகளை விரித்து காத்துக் கொண்டிருக்கிறது; இம்மண்ணை நாமே ஆள்வோம்!

ஆங்கில புத்தாண்டு 2018!

முப்பது ஆண்டுகள் பிழைப்பிற்காக இங்கே வாழ்ந்தவனெல்லாம் 'பச்சை தமிழன்' என்றால், முந்நூறு ஆண்டுகள் ஆள்வதற்காக இங்கே வாழ்ந்தவனும் 'ப்ரோ ஹிந்தியன்' தானே? அப்போ அவனோட புத்தாண்டான ஜனவரி 1ம் தேதியை கொண்டாட மட்டும் ஏன் எதிர்க்கிறீங்க? முதலாவது சரியென்றால், இரண்டாவதும் சரி தானே? உலகத்தாருக்கு உண்மையான புத்தாண்டெனில் பூமியின் நகர்வான அது 'வடவோட்டம் - தென்னோட்டம்' தான். அப்படியெல்லாம் கணக்கீடு செய்து யாருமிங்கே கொண்டாடவில்லை; ஏனெனில் நாளும் தேதியும் நாமளாக வைத்து கொண்டதுதான்; கொண்டாடக்கூடிய எல்லாவற்றையும் ரிஷிமூலமெல்லாம் பார்க்காமல் மகிழ்வோடு கொண்டாடுங்கள். வாழ்க்கைல ஷந்தோஷம்தாங்க முக்யம்; ஜெய்ஹிந்த்!

ஆங்கில புத்தாண்டை எதிர்ப்பவர்களெல்லாம், ஏன் புதுக்காலண்டர் வாங்க துடியாய் துடிக்கிறீர்கள்? மாத சம்பளம் போன்ற பொருளாதார வருமானம் முதல் அனைத்து கணக்கு வழக்குகளும் ஆங்கிலத்தேதியோடு தான் பின்னிக்கிடக்கிறது என்பதை உணருங்கள். இங்குள்ளவர்களில், உங்களுடைய பிறந்த தேதி எதுவென கேட்டால், 99.9% பேர் ஆங்கிலத்தேதியை தான் சொல்கிறார்கள்; அதோடு அவர்களின் பிறந்த வருடம் எதுமென கேட்டால், 100% பேர் இதே ஆங்கில ஆண்டை மட்டும் தான் சொல்கிறார்கள். இப்படியான எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மதம் சார்ந்தே எல்லாவற்றையும் பார்க்கும் அணுகுமுறையை இந்த ஆண்டாவது மாற்ற முயலுங்கள்.

Image may contain: 3 people, people smiling, text


ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேண்டாமென இங்குள்ள எல்லாருக்கும் பாடமெடுக்கும் பாஜகவினர், நரேந்திர மோடிக்கும் பாடமெடுப்பார்களென நம்புகிறோம்.

31 டிசம்பர் 2017

ரஜினியின் ஆன்மீக அரசியல்!

சாதி; மதமெல்லாம் இருக்கட்டும். முதலில், தன்னை சுற்றிக்கொண்டிருக்கும் பார்பனீய பாம்பை விட்டு வெளிய வர முடியுமா?

Image may contain: one or more people and text
'ஆன்மீக அரசியல்' என சொன்னதும், ஆரியமும் - திராவிடமும் குழப்பத்தில் மூழ்கிருக்கிறது. இத்தனை வருடங்களாக ஆன்மீகம் என்ற பெயரில் வெறியேற்றி அரசியல் செய்தவர்களின் நிலைதான் கவலைக்கிடமாக கிடக்கிறது; இருக்கிற நாலு பேரும் ரஜினி பின்னாடி போய்டுவாங்களோன்னு பயப்பட வைத்த ரஜினிக்கு வாழ்த்துகள்!


கொள்கைகள் என்னவென்று கேட்டவுடன் தலையே சுற்றி விட்டது.
- ரஜினி.
அப்படியெனில் தமிழக அரசியலுக்கு வருவதற்கான முழுதகுதியும் இருக்கிறது; இனிமே இங்கே நல்ல எண்டர்டெயின்மெண்ட்டும் இருக்கு; வரவேற்கிறோம்.
Image may contain: 2 people, people smiling, people standing, beard and sunglasses


வருங்கால துணை முதலமைச்சரும், இளைஞரணி தலைவருமான தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்!

30 டிசம்பர் 2017

'அகமுடையார் குலத்தோன்றல்' மருத்துவர் ந.சேதுராமன் அவர்களுக்கு பவளவிழா பிறந்தநாள் வாழ்த்துகள்!

Image may contain: 1 person, smiling, closeup

'மீனாட்சி மிஷன்' மருத்துவமனையின் நிறுவனரும், 'மகாசேமம்' என்ற சுயநிதி உதவிக்குழுமத்தின் நிறுவனரும், 'அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக'த்தின் நிறுவனத்தலைவருமான வாராப்பூர் ஜமீன்கோட்டை பெற்றெடுத்த 'அகமுடையார் குலத்தோன்றல்' மருத்துவர் ந.சேதுராமன் அவர்களுக்கு பவளவிழா பிறந்தநாள் வாழ்த்துகள்!

29 டிசம்பர் 2017

சொர்க்க வாசல் (8+2=10)

No automatic alt text available.


எண்களின் தோற்றம் என்பது எண்ணங்களின் பரிணாமத்தில் தான் உருவாகிருக்கிறது. எண்களுக்கும் எண்ணங்களுக்குமான நீண்டவொரு தொடர்பு இருக்கின்றது; அத்தொடர்பை கண்கள் தான் தீர்மானிக்கின்றன. எண்களில் சுழியம் என்பது நம்முடைய கண்டுபிடிப்பென பெருமை பேசிக்கொள்கிறோம். சுழியம் மட்டுமல்ல மீதமுள்ள ஒன்பது எண்களின் வேர்களுமே நம்முடைய கண்டுபிடிப்புகள் தான். சுழியம் என்பதன் அர்த்தம் புரிந்து, அது எதனுளிருந்து உருபெற்றிருக்கும் என்பதை கவனித்தாலே அதன் உள்ளார்ந்த அர்த்தமும் விளங்கும். பொதுவாக ஒவ்வோர் எண்களுக்கும் பின்புலமாக நீண்ட விளக்கங்களும், மறைபொருள் அர்த்தங்களும் அதனுள் கலந்திருக்கின்றன. இப்படியான பல ரகசியங்களை உள்ளுக்குள் வைத்திருக்கும் எண்களில் ஒன்றான எட்டு என்பதை முடிவிலியின் அடையாளமாக எடுத்துக்கொண்டால், இரு சுழியங்களின் கலவையாக அது உருமாறக்கூடும். இவற்றிற்கும் வைகுந்த ஏகாதசிக்கும் என்ன தொடர்பென்று நினைக்க கூடும். இங்கே எதுவுமே தனித்தில்லை; ஒன்றுக்கொன்று தொடர்பிலேயே தான் இருக்கின்றன. அவ்வாறாக எண்களுக்கான தொடர்பை வைகுந்த ஏகாதசியிலும் பார்க்க முடியும்.
பொதுவாக, மார்கழி மாத வளர்பிறை பத்து நாட்களை 'பகல் பத்து' என்றும், அதன் அடுத்த நாள் 'வைகுந்த ஏகாதசி' என்றும், அதனை தொடர்ந்த தேய்பிறை பத்து நாட்களை 'இராப் பத்து' என்றும் வகைபடுத்தி வைத்திருக்கின்றனர். ஏகாதசி என்பதன் பொருள் பதினொன்றாம் நாள் என்பதாகும். ஏனெனில் இரு பத்துகளுக்கும் இடைப்பட்ட நாள் இது என்பதுதான் இங்கு சிறப்பாக போற்றப்படுகிறது. பத்து என்பதை எட்டும் இரண்டுமாக பிரித்து பார்க்க தொடங்கினால் சொர்க்க வாசலின் உண்மைப்பொருள் புரிந்து விடும். உயிரும் உடலுமாக இரண்டற கலந்து இருக்கின்ற தனக்குள்ளேயே மூடிக்கிடக்கும் பத்தாம் வாசலை திறக்க வக்கற்றவர்கள் தான், வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசலைத்தேடி கோவிலெங்கும் வரிசை கட்டி நிற்கின்றனர். இங்கே வைகுண்டம், வைகுந்தம் என இருவாறாக சொல்லப்பட்டாலும் 'வை' என்பதற்கான அர்த்தம் கூர்மை என்பதாகும்; அடுத்து இந்த சங்கு, சக்கரம், நாமம் என்பதெல்லாமும் கூட எண்களின் வெளிப்பாடே. அதை கண்டபடி திரித்து எழுதி குளிர்காய்வதெல்லாம் எண்ணங்களை சிதறடிக்க செய்யும் செயலாகவே பார்க்கிறேன். தேவையானவற்றை தவிர்த்து, எண்ணங்களை கூர்மையாக்கி உங்களின் பார்வையை விரிவிடைய செய்யுங்கள்; எண்ணற்ற உண்மைகள் உங்களுக்குள்ளாகவே புலப்படும்.
சொர்க்க வாசல் திறக்கும் திருநாளாக கொண்டாடப்படும் இந்நாளுக்கு இடைபட்ட இந்த இரு பத்து நாட்களும், 'திருமொழித் திருநாள் - திருவாய்மொழித் திருநாள்' என உயிரெழுத்தும் - மெய்யெழுத்தும் கலந்துருவான எம்மொழி தமிழை கொண்டாடும் விதமாகவும் இணைத்து வழிபாட்டு முறை அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தவர்கள் வெகுசிலராகத்தான் இருக்கக்கூடும். வழிபடும் விதம் வேறுபட்டாலும் பரம்பொருள் ஒன்றாகவே இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து, பெரியத்திருவடிகள் துணையிருக்க, பத்தாம் வாசலின் புதுவெளிச்சம் எல்லாருக்கும் கிடைக்க பிரபஞ்சம் பேரருள் புரியட்டும்.