09 மே 2014

+2 முதல் வேலை வரை!

2002ம் வருசம் +2 எக்ஸாம் எழுதிட்டு எப்படியாவது பாஸ் ஆகிடணும்ன்னு, குலதெய்வம் கோவிலான வேதாரண்யம் - கருப்பம்புலம் அருகிலுள்ள கடிநெல்வயல் வேம்புடையார் என்ற வேம்படி ஐயனார்கிட்ட எப்படியெல்லாம் வேண்டிக்கிட்டேன் என்பதை இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பாதான் இருக்கு. எப்படியோ என்குலசாமி ஐயனார் என்னை பாஸ் பண்ண வச்சிட்டாரு.

பள்ளி, கல்லூரிகளில் நன்றாக படித்த பலர் வாழ்க்கையில் வெற்றியடைந்திருக்கின்றார்கள். ஆனால், அவர்களை விட சுமாராக படித்து வருடமொருமுறை வகுப்பறைகளை சம்பிரதாயத்திற்காக கடந்த பலரே வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றார்கள். அதனால், படிக்கும் காலத்தில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே, யாருடைய வருங்கால வெற்றிகளையும் கணித்துவிட முடியாது. எனவே, +2ல் ஜஸ்ட் பார்டர்ல பாஸ் ஆன அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

10ல 348
12ல 677
இதுதான் அடியேனின் பள்ளிக்கால பொதுத்தேர்வு வரலாறு!


+2 தேர்வு முடிவுகள் வந்ததிலிருந்து மாணவர்களை கவர அனைத்து நாளிதழ்களும் கல்லூரி சேர்க்கை விளம்பரத்தையே முன்னிறுத்தி கொண்டிருக்கின்றன. ஆனால், மூன்று - நான்கு வருடங்களுக்கு முன்பாக இதே மாதிரியான விளம்பரத்தை பார்த்து ஏதோவொரு கல்லூரியில் இன்றைக்கு படிப்பை முடித்த பலரும், அதே நாளிதழின் ஏதாவதொரு மூலையில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புக்கான விளம்பரத்தை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த எதார்த்தம் புரியாத, பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர செம்மறிஆட்டு கூட்டம் போல அருகிலுள்ள கல்லூரிவாசலில் தவமிருக்கின்றனர்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக