06 ஆகஸ்ட் 2009





இன்று முதல்....

வணக்கம்.

இந்த வலைப்பதிவை யாருமே கண்டுக்கிறதே இல்லைனாலும் நான் ஒரு முடிவு பண்ணிட்டேங்க.என்ன முடிவுன்னு கேக்குறீங்களா...?
(நீங்க ஒன்னும் கேட்க்காட்டினாலும்...நான் அந்த உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடிச்சி.என்னை யாரும் தடுக்காதீங்க...) 

ஆமாங்க, அதை தான் நானும் சொல்ல வரேன்.கொஞ்சம் என்னான்னு கேட்டுட்டு போங்க..

இன்னைக்கு காலைல மின்னரட்டை (அதாங்க chat) ல ,என் உடன்பிறவா அண்ணன் பாலகேசன்தேவர் அண்ணா கிட்ட ரொம்பநாள் கழிச்சு பேசிட்டு இருந்தேன்.அண்ணன் US ல (US ன்னா உழவர்சந்தை இல்லைங்க அமெரிக்கா) இருக்காரு.சரி அதுகிடக்கட்டும் அவர்கிட்ட அப்போ பேசும்போது நான் சொன்னேன் "அண்ணா நானும் ஒரு வலைப்பதிவை வச்சிருக்கேன்...முடிஞ்சா பாருங்க" ன்னு சொல்லிட்டு தமிழ்வாசல் சுட்டியை அனுப்பினேன் அவருக்கு.

அண்ணாவும் பார்த்துட்டு "நல்லா எழுத ஆரம்பிச்சிருக்க...ஆனா ஒன்னு...நீ உன்னோட சொந்த படைப்புகளை மட்டும் எழுது.மத்தவங்க எழுதுனத உன் வலைபதிவுல சுட்டு போடுறதுனால உனக்கென்ன பயன்...? நீ என்ன பண்ற...? (நான் என் அலுவலகத்தில் சும்மா தான் இருக்கறேன்னு எப்படி அவருக்கு தெரியும்னு தெரியல.ஆனா சரியா சொல்லிவிட்டு ) நீயே சொந்தமா எழுது ன்னு அன்பு கட்டளையிட்டார்.

நான் உடனே "எதபத்தி ண்ணா எழுதுறதுன்னு? " கேட்டேன்....
"உனக்கு என்னவெல்லாம் தோணுதோ எழுது " ன்னு சொல்லிட்டு 
அப்பறம் அவர் சில உக்திகளை தந்தார்....
  • உன் வேலை பற்றி...
  • உன் பெற்றோர்களை பற்றி...
  • சமீபத்துல வந்துள்ள தமிழ் சினிமா (உம்.கந்தசாமி) பற்றி...
  • உன் பார்வையில் பொண்ணுங்கள பற்றி...
  • உன்னை போல் திருமணமாகாத ஆண்களின் வாழ்க்கை கடினத்தை பற்றி...
  • உன் குலதெய்வத்தை பற்றி...
  • பணம்,வசதிவாய்ப்பை பற்றி... 
  • உன் திருமண விருப்பம் பற்றி...
இப்படி நிறையா விசயம் சொன்னாரு.அப்பறம் முக்கியமா, இவையெல்லாம் உன் எழுத்து நடையிலேயே,உன் தனித்துவம் மாறாமல் எழுதனும்னு கண்டிப்பா சொல்லி முடிச்சாரு.இப்படி நிறைய வியூகங்களை எனக்களித்து என்னை ஊக்கபடுத்திய என் அண்ணனுக்கு நன்றிய இங்க சொல்லிக்கிறேன்.அதுனால இன்னைலேர்ந்து  மத்தவங்க ஆக்கங்களை சுட்டு போடுறதை நிறுத்திட்டு என் சொந்த சோக,சந்தோஷ,வெறுப்பு,விருப்பு தருணங்களை தமிழ்வாசல் ல இடுகை இட்டிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். 
(ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்கமாட்டேன்... )

இது முதல் தடவை என்பதால் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்.வரும் நாட்களில்  கொஞ்சம்,கொஞ்சம் என்னை மாத்திக்கிறேன்.
(எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா என்ன?) 

"மாற்றம் ஒன்று தானே எப்போதும் மாறாத ஒன்று ...."

வரட்டா...அதுவரைக்கும் டாட்டா
நன்றி

(இது எதுக்குடான்னு கேக்குறீங்களா, வணக்கம்னு ஆரம்பத்துல பழக்கதோசத்துல போட்டு தொலைஞ்சிட்டேன்.அதுக்காதான் முடிவுல  நன்றி.அப்பறம் முக்கியமா என் மொக்கையையும் இவ்வளவு நேரம் படிச்சி இருக்கீங்களே அதுக்கும் சேர்த்துத்தான் இந்த நன்றி.என்னடா இவன் நன்றிக்கே இவ்வளவு நேரம் மொக்கை போடுறேன்னு நினைக்காதிங்க...எத பத்தி வேணும்னாலும் எழுதுன்னு என் குரு,என் அண்ணனே சொல்லிட்டாரே...அதுனாலதான்)

எப்பூடீ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக