05 அக்டோபர் 2013

முற்போக்குவாதி வள்ளலார்!





" நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
குருவை வணங்கக் கூசி நிற்காதே.
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே."

 - திருவருட்பிரகாச வள்ளலார்

 எனக்கு வள்ளலார் பற்றி நினைக்கும் போது நினைவில் வருவது அவர் ஆரம்பித்த சுத்த சன்மார்க்க சங்கம் தான். மேலும், வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் காலம் தொட்டு இன்றுவரை வடலூரில் கருவறையில் அணையா தீபமும், சமையலறையில் அணையா அடுப்பும் உயிர்ப்புடனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். என் குடும்பத்தினரும், அம்மா வழி உறவுகளும் தீவிர சன்மார்க்க வாதிகள். அசைவம் (புலால்) உண்ண மாட்டார்கள். 

"ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்"
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்"

வள்ளாலரை நினைக்கும்போது இந்த இரண்டும்தான் சட்டென்று நினைவில் வரும். வள்ளலார் தனது பெயரை அவர் பிறந்த ஊரான சிதம்பரம் என்பதை சேர்த்து சிதம்பரம் இராமலிங்கம் யென்றுதான் கையொப்பமிடுவார். அவர் முதலில் எம்பெருமான் முருக பக்தனாகவும், பிறகு ஈசன் சிவனை வணங்கி சிவனடியாராகவும் விளங்கினார்.

அவரை பின்பற்றும் சன்மார்க்க வாதிகள் அனைவருமே, "அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை" யென்ற இருவரிகளை உச்சரிக்காமல் இருக்கமாட்டார்கள்.

அப்படிப்பட்ட மகான் வள்ளலார் அவதரித்த தினம் (புரட்டாசி19) இன்று!

அடியேனும் அவர் அவதரித்த புண்ணிய புரட்டாசி மாதத்தில்தான் பிறந்தேன் என்பதில் மகிழ்ச்சியே...

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக