
இத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இன்றைக்கு தனக்கு பின்னால் வைத்திருந்தும் கூட இன்னமும் திரு. விஜய் தரக்குறைவாகவே விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார். அது வெறும் விமர்சனம் மட்டுமல்ல. காரணம் என்னவெனில், தமிழன் இனி தலையெடுத்து விடக்கூடாதென்ற வார்த்தைகளின் விசம் பலருக்கு தெரியாமலேயே அவர்களுக்குள் திணிக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் அள்ளி தெளிக்கப்படுகின்றது. திரு. விஜயை எதிர்ப்பதற்கு பின்னால் ஆரிய சித்தாத்தங்களை கொள்கையாக கொண்ட ஊடகங்களின் பங்கும் பெருமளவு உண்டு என்பதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. சக தமிழனாக திரு. விஜய் அரசியலுக்கு வருவதுதான் சரியானதாக எனக்கு படுகிறது. அரசியலில் தலையெடுப்பதற்கான சரியான நேரமிது. இனியாவது தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளட்டும்!
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக