20 ஆகஸ்ட் 2014

கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்


                      தீவிர முருக பக்தரான சாண்டோ சின்னப்பா தேவர் பற்றியும், மொழி தெரியாதபோதும் ஒட்டுமொத்த இந்தியத் திரைத்துறையில் அவரது ஆளுமை பற்றியும், அவருடைய தயாரிப்பு நிறுவனமான 'தேவர் பிலிம்ஸ்' பற்றியும் படத்தின் ஆரம்பத்திலேயே காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்கும்படியாக இருந்தது. இன்னொரு காட்சியில் காவல் நிலையத்திற்குள் வழக்கமான கோட்-சூட் இல்லாத ஆளுயுர அம்பேத்கர் படம் ஆறடி உயரத்தில் வைத்திருந்ததும் வித்தியாசமாக இருந்தது. படம் நெடுகிலும் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் தம்பி ராமையா & ஜூனியர்ஸ் கூடவே இருப்பது படத்திற்கு ப்ளஸ்.
திரைத்துறையில் எப்படியெல்லாம் / எங்கெல்லாம் சிரமப்பட்டு கதை விவாதம் பண்ணி படம் எடுக்குறாங்கன்னு காட்டினாலும் கூட, உலக சினிமாவை எப்படியெல்லாம் காப்பியடிச்சு படமெடுத்து அதையே உலக சினிமா திருவிழாக்கும் அனுப்பி வைக்கிறாய்ங்க என்பதையும் சொல்ல தவறவில்லை. சினிமாவை பற்றி ஒன்னுமே தெரியாமல் நடிகைகளுக்காகவும், புகழுக்காகவும் படம் தயாரிக்க வரும் போலி செக் / லோன் ஆசாமிகளின் முகத்திரையும் கிழித்தெறிந்திருக்கிறது இந்தப்படம்.

படம் நல்லாருக்கா? நல்லாயில்லையா? என்பதை படம் ரிலீஸ் ஆகி ஃபர்ஸ்ட் ஷோ இண்டர்வர்ல் விடுறதுக்குள்ளயே பேஸ்புக்/ட்விட்டர்ல விமர்சனம் எழுதி படத்தின் வெற்றி தோல்வியை சமூக வலைதளங்கள் தான் தீர்மானிக்குதுன்னு அழுத்தம் திருத்தமா சொல்லிருக்கிற பார்த்திபன், எப்போதுமே வித்தியாசமாய் முயற்சித்தும் பல தோல்விகளை பார்த்திருந்தாலும், நியூமரலாஜி படி இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆன இம்முறை உண்மையாகவே வெற்றி பெற்றிருக்கின்றார். கூட்டம் கம்மியாத்தான் இருக்குறதுனால, இளசுங்க தியேட்டர்ல போய் கூட படம் பார்க்கலாம். "a film without a story"ன்னு டைட்டில்ல டேக்லைன் போட்டிருந்தாலும் கதை இருக்கா? இல்லையா?ன்னு யோசிக்கவே வேணாம். ஏன்னா, இந்த படத்துல பல பேரோட கதை இருக்கு. கண்டிப்பா படம் பார்க்கலாம்.

அன்று புதியபாதையில் ஆரம்பித்த இந்த பயணம் மீண்டுமொரு புதியதொரு பாதையில் இன்றும் நீள்கிறது. வாழ்த்துகள் பார்த்திபன்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக