31 மார்ச் 2015

கொம்பனுக்கு பின்னாலுள்ள அரசியல்!



 -001-

கருணாநிதியின் பேரனான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்(?) உருவாகியுள்ள "நண்பேன்டா" திரைப்படம், ஏப்ரல் 2ம் தேதி வெளிவருகிறது. அதற்காக தமிழ்நாடெங்கும் கட்சி மாநாட்டு அழைப்பு போல சுவர் விளம்பரங்களெல்லாம் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரும் பார்த்திருக்க கூடும். அதே ஏப்ரல் 2ம் நாளில், கார்த்தி நடிப்பில் தெற்கத்தி மண் சார்ந்த கதைக்களத்தோடு ”கொம்பன்” திரைப்படமும் திரையரங்குகளுக்கு வருகிறது. தென்னாட்டு மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை பதிவு செய்த எந்த திரைப்படமும் இதுவரை மோசமாக தோல்வி அடைந்ததாக வரலாறில்லை. அந்த வகையில் நிச்சயம் கொம்பனும் ஹிட் தான். இவ்வேளையில், தலித் கோட்டா அடிப்படையில் திருமாவளவனுக்கு மாற்றாக, தற்போது மீண்டும் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் கிருஷ்ணசாமியின் தொடர் முயற்சியால், கொம்பன் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டிகள் ஏதுமின்றி, உன்னத கருத்துகளை உலகிற்கு சொல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள "நண்பேன்டா" திரைக்காவியம் வெற்றிப்பெற கிருஷ்ணசாமி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள்!

-002-
ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவிருக்கும் நண்பேன்டா படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலினின் அப்பாவும், திரைப்பட தணிக்கை குழுவின் உறுப்பினராக இருக்கும் எஸ்.வீ.சேகரும் நல்ல நண்பர்கள்ன்னு ஊருக்கே தெரியும். அதிமுகவுல இருக்கும் போதே, திமுகவை பாராட்டியவர். அடுத்து பிஜேபில் இணைந்த பிறகு, இம்முறை புதிய தலைமுறையின் விவாதத்தில் பிஜேபியில் இருந்து யாரும் கலந்து கொள்ள கூடாதுன்னு சொன்ன பிறகும் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக கலந்து கொண்ட அஞ்சா நெஞ்சனான எஸ்.வீ.சேகர், கொம்பன் படத்தை பற்றி ஊடகங்களுக்கு ஏன் பேட்டி கொடுக்கிறாருன்னு தான் புரிய மாட்டுது. எது எப்படியோ, நண்பேன்டா படம் மிகப்பெரிய வெற்றி பெற ஸ்டாலினின் நண்பனான எஸ்.வீ.சேகர் சார்பாக வாழ்த்துகள்!

-003-

பீட்டர் ரமேஷ்குமார்ன்னு ஒருத்தரு, தந்தி டிவியின் விவாதத்தில் கிருஷ்ணசாமியின் வழக்குரைஞராக கலந்து கொண்டு கொம்பன் படவிவகாரம் தொடர்பாக ஒன்றரை மணி நேரம் விவாதத்தில் பேசினார். பேச்சு முழுக்க முக்குலத்தோர், கவுண்டர் மீதான வக்கிரமும், காழ்ப்புணர்ச்ச்சியும் தான் தெள்ளத்தெள்வாக தெரிந்தது. நீதிபதியையே சந்தேகிக்கும் இவரை போன்ற வழக்குரைஞரை தான் முதலில் தடை செய்ய வேண்டும். கொம்பன் பட பாடலின் வரியையெல்லாம் படிச்சு காட்டினாரு. அதுலயும் அவ்வளவு சாதிவெறி தெரிந்தது. பாலுத்தேவர் கதாப்பாத்திரம், தெய்வத்திருமகன் படத்தின் பெயரை தெய்வமகள் என பெயர் மாற்றம் செய்தது, மருதநாயகம் வெளிவராமல் இருப்பதற்கு பூலித்தேவரின் வீழ்ச்சியை சொல்லிவிடும் என்பதால் தான் என்ற பிதற்றல், என அவர் சொன்ன எல்லாமும் தேவர் சாதிக்கு எதிராகவே முழுக்க முழுக்க இருந்தது. ஒரு சாதி மக்கள் மீது இவ்வளவு வன்மத்தை கக்கும் இது போன்ற நபர்களின் பேச்சை, அந்த வன்மத்திற்கு உள்ளாகும் சாதியை சார்ந்த ஒருவன் கேட்பதும் ஒருவகையில் நல்லது தான்ன்னு நினைக்கிறேன். இதுனால இன்னைக்கு ஒரு கூடுதல் இலக்கும் எனக்குள் சேர்ந்திருக்கு. கண்டிப்பா ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும், அப்போது இதை விட வேறொரு மிகப்பெரிய பொதுவெளியில் வீரியமாய் பதிவு செய்வேன். நன்றி பீட்டர் ரமேஷ்குமார்!

-004-
கிருஷ்ண சாமிக்களே, கும்புடுறேன் சாமிக்களே அந்த சாமி மேல சத்தியமா இன்னமும் எனக்கு புரியல... சண்டியர், கொம்பன், குட்டிபுலி, சண்டக்கோழி இதெல்லாம் தேவர் சாதியை தான் குறிக்கிறதுன்னு நீங்களே ஏன்யா நம்புறீங்க? நாங்களே அதை நம்புறது இல்ல...

-005-

எங்கப்பன் சாமி மாதிரின்னு பெருமையா உண்மையை சொன்னால் மத்தவனுக்கு ஏன் எரியணும்? அவன் அப்பன் பொம்பள பொறுக்கியா இருக்கிறதுக்கு நான் என்னய்யா பண்ண முடியும்? வக்கிருந்தா உன் அப்பன் பெருமையா ஊர கூட்டி சொல்லு. அதவிட்டுட்டு என் அப்பனை பத்தி பேசாதன்னு பஞ்சாயத்தை கூட்டுறதெல்லாம் கேவலமா இருக்கு. என்னைக்குமே என் அப்பன் கொம்பன்யா...

-006-

சிவக்குமார், ஸ்டாலின், விஜயகாந்த் என்ற இந்த மூவருடைய வாரிசுகளின் படமும் நாளைக்கு வருது. சேர,சோழ,பாண்டிய தேசம் தான் இம்மூவரும் பிறந்து வளர்ந்தது என்பதும் குறிப்பிடதக்கது. சகாப்தம் படத்துல கூட தான், குறிப்பிட்ட அந்தவொரு சாதியினை பற்றிய காட்சி இருக்குன்னு சொல்றாங்க. கொம்பன் பிரச்சனையில விஜயகாந்துக்கும் ஒரு வகையில் ஆதாயம் இருக்கிறதுனால தான், முன்னாள் நடிகர் சங்க தலைவர், சமகால எதிர்க்கட்சி தலைவர், ஓர் அரசியல்வாதி, சக நடிகன் என எந்த முறையிலும் கூட இதுவரை வாயையே திறக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

- இரா.ச.இமலாதித்தன்

27 மார்ச் 2015

ஹாரிஸ் ஜெயராஜ் - காப்பிகேட் ரசிகன்!

'நண்பேன்டா' படத்துல க்ளாசிக்கல் சாயலில் "ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா?" என்ற பாட்டு கேட்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. காப்பியடிச்சாலும் கேட்டு ரசிக்கிற மாதிரி ட்யூன் போடுறதுல, ஹாரிஸ் ஜெயராஜை அடிச்சிக்க இங்கே ஆளே கிடையாது. மியூசிக் காப்பிக்கேட் விசயத்துல தேவா தொடங்கி அனிருத் வரை ஒரு ஆளு கூட ஹாரிஸ் பக்கதுல கூட வரவே முடியாது. அதுக்கெல்லாம் ஒரு சின்ன உதாரணம் என்னன்னா, ரஹ்மான் எந்த பாட்டு போட்டாலும், அடுத்த சில மாதங்களிலேயே ரஹ்மான் பாட்டுல பாடுன அதே சிங்கரை வைத்து, அதே இன்ஸ்ட்ரூமெண்ட்களை பயன்படுத்தி, அதே மாதிரி ட்யூன் போடுற தைரியம் ஹாரிஸை தவிர வேற யாருக்கும் இங்க இல்லை. திருட்டுத்தனம் பண்ணினாலும் நாலு பேருக்கு தெரியாத மாதிரி நாசூக்கா பண்ணனும்ன்னு வடிவேலு சொல்ற மாதிரியான தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பல பாடல்களுக்கு நான் பெரிய ரசிகன். அதுல சில கீழே:-

12பி - பூவே வாய் பேசும் போது
உள்ளம் கேட்குமே - என்னை பந்தாட பிறந்தவளே, ஓ மனமே
லேசா லேசா - லேசா லேசா
உன்னையறிந்தால் - உனக்கென்ன வேணும் சொல்லு
இரண்டாம் உலகம் - கனிமொழியே, மன்னவனே
என்றென்றும் புன்னகை - என்னை சாய்த்தாளே, வான் எங்கும்
காக்க காக்க - ஒரு ஊரில் அழகே உருவாய்
மின்னலே - வசீகரா
நண்பன் - நல்ல நண்பன்
பச்சைக்கிளி முத்துச்சரம் - காதல் கொஞ்சம், உன் சிரிப்பினில்
சாமுராய் - மூங்கில் காடுகளே, ஆகாய சூரியனை
தொட்டி ஜெயா - உயிரே என்னுயிரே
துப்பாக்கி - போய் வரவா
வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள் பெய்திடும், முன் தினம்
வேட்டையாடு விளையாடு - உயிரிலே
யான் - நெஞ்சே நெஞ்சே
உன்னாலே உன்னாலே - முதல்நாள் இன்று, ஜூன் போனால்

வாழ்த்துகள் ஹாரிஸ் ஜி!

26 மார்ச் 2015

உலக கோப்பை துளிகள்!

-001-

உலக கோப்பைல இந்திய அணி தோற்று போனது கூட கஷ்டமா இல்ல. அதை மத ரீதியாக தங்களின் வெற்றின்னு நினைக்கிற, பாஸ்போர்ட்ல இந்தியன்னு சொல்லிக்கிட்டு வெளிநாட்டுல ஒட்டகம் மேய்ச்சிக்கிட்டு இருக்கிறதுங்கள நினைச்சாதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.


-002-

தோனி ஆஸ்திரேலியாவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, ஒருபய கூட தோனியை மறந்தும் புகழ்ந்துட கூடாதுன்னு, நம்ம கோஹ்லி முத்தரப்பு தொடர் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே மூனு விசயத்தை முடிவு பண்ணி வச்சிருந்தாப்ள. அதுல ரெண்டாவதா தோனி கதையும் ஓகே ஆய்டுச்சு. அல்ரெடி அனுஷ்கா ஷர்மாவும் ஓகே. இப்போ மிச்சம் இருக்கிறது, மூனாவதா கேப்டன் பதவி மட்டும் தான். அதுவும் ஐபிஎல் முடிஞ்ச உடனே அறிவிப்பு வந்துடும். ஓர் அமாவாசை, இனி நாகராஜ சோழனாகிறான்! வாழ்த்துகள்டே... "என்னுடைய சாதனைகளை இன்னொரு இந்தியனே முறியடிக்க ஆசைப்படுறேன்"னு சொன்ன நம்ம சச்சினின் வாக்கை காப்பாற்றக்கூடிய தகுதியுள்ள கோஹ்லி, இனியாவது பிசிசிஐ டீமுக்காக ஆடுவாப்ள நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை! 

-003-

ஒரேவொரு ரன் அடிக்க பதிமூனு பாலை வேஸ்ட் ஆக்கினதை விட, அந்த ஒரு ரன் அடிக்கிற லட்சணத்த பார்க்கிறதுக்காக இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கே பறந்து போன அனுஷ்கா ஷர்மாவை நெனைச்சு தான் துக்கப்படுறேன், துயரப்படுறேன், வெட்கப்படுறேன், வேதனைப்படுறேன், இன்னும் என்னன்னமோ படுறேன்.

-004-

முதலமைச்சர் பதவியை இழந்த பிறகும், 'மக்கள் முதல்வர்'ன்னு வெட்கமில்லாமல் போட்டு கொள்வதை போல, இனி இந்திய கிரிக்கெட் அணியும், 'மக்கள் உலக கோப்பை சாம்பியன்'னு வெட்கமே இல்லாமல் போட்டு கொண்டாலும் தப்பில்லைன்னு தான் தோணுது.

25 மார்ச் 2015

உலகில் மதம் எனும் அரக்கன்!

கொள்ளையடிப்பதற்காக நாடு கடந்து போர் புரியும் இடத்தில், தங்களது மார்க்கத்தை ஏற்காதவர்களை கொலை செய்து, பெண்களை கற்பழித்து தன் கருவை வளர செய்தது ஒரு கூட்டம். ஒருபடி மேலாக, இன்னொரு மதவெறி கூட்டம், நாடு விட்டு நாடு வந்து வியாபாரம் செய்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அங்குள்ள மக்களிடம் தன் மதத்தையும், மொழியையும் அன்பெனும் ஆயுதம் கொண்டு நாகரீகம் என்ற பெயரில் திணித்தது. அந்த மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், அறிவையும் கண்டஞ்சி பூர்வகுடிகளின் வம்சாவழிகளையே கொத்து கொத்தாக நயவஞ்சகத்துடன் இனவழிப்பு செய்தது. இன்றைக்கு உலகளாவிய பிரச்சனைக்கு இந்த இரண்டு மதங்களும் காரணமாக இருந்த போதும், இரண்டாவதாக சொல்லப்பட்ட மதமே எல்லாவற்றுக்கும் ஊன்றுகோலாக இருந்து உலகையே ஆட்டிவிக்கிறது. இந்த மாதிரி அடிக்கிற ஆடி காத்தில், சாதியற்ற ஆதிகுடியான அனைத்து தமிழனும் பாவம் தான்.

தமிழக பட்ஜெட்டும் டாஸ்மாக் தமிழனும்!

நட்ட இடத்திலேயே வருடாவருடம் மரக்கன்றுகளை நடும் சமூக ஆர்வலர்கள் போல, வீழ்ச்சியடைந்த பொருளாதரத்திற்கு நடுவே பட்ஜெட் என்ற பெயரில் வருடாவருடம் அறிவிப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன ஆளும் அரசியல்வாதிகளால். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை 500 ரூபாய் போதும் இந்த இளிச்சவாய வாக்களனுக்கு. எவன் குடி கெட்டால் இவனுக்கு என்ன? சாயுங்காலமானால் மூச்சு முட்ட குடிக்க டாஸ்மாக் வாசலில் தவமிருக்க தான் நேரம் சரியா இருக்கே தவிர, மற்ற சிந்தனையே இவனுக்கு வருவதில்லை. அப்படியொரு சிந்தனையை மழுங்கடிப்பதற்காகவே, டாஸ்மாக் கடைகளை ஊருக்கு ஊரு திறந்து வச்சுருக்கு ஆளும் அரசாங்கம். இந்த சாராயக்கடை வருமானத்தை நம்பித்தானே அரசாங்க பட்ஜெட்டே வருடாவருடம் போடுறாங்க. இவங்க பட்ஜெட்டோ, திட்டமோ எதை போட்டாலும், அது அப்பாவி மக்களின் சோற்றின் மீதுதான் மண்ணை அள்ளி போடுவதாக இருக்கிறது; இதுதான் எதார்த்தம். இங்க பணக்காரன் பணக்காரனாகவே வளருறான். ஏழை பரம ஏழையாகவே தேயுறான். ஆனால், இந்த நடுதரவர்க்கம் தான் நாசமா போய்கிட்டு இருக்கு.

24 மார்ச் 2015

66 ஏ சட்டம் ரத்து!

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தனி நபர்களின் கருத்துகளை வைத்து, கைது - சிறையென அச்சமூட்டி கொண்டிருந்த 66-ஏ சட்டத்தை உச்சநீதிமன்றம் இன்று தடைவிதித்துள்ளது. “தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.” எனவே அதை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளதை வரவேற்றும் அதே சமயம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வரையறையே இல்லாமல் அவதூறு பரப்புவதை நாம் மறுபரிசீலனை செய்து சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியதும் இனி அவசியமாகிறது. ஆதாரமே இல்லாமல், யாரை வேண்டுமானாலும் அவன், இவளென்று ஒருமையில் பேசி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கருத்து சுதந்திரம் என்ற வகையில் வெளிப்படுத்துவதையும் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதந்திரம் என்பதிலும் ஒருவித கட்டுப்பாடு இருக்க வேண்டும். அப்போதுதான் அது நமக்கு நிலையாக கிடைக்கும். தவறு எங்கிருப்பினும் தயக்கமில்லாமல், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது தான் கருத்து சுதந்திரம். ஆனால், நமக்கு வேண்டாதவர்களை அனுமானத்தின் அடிப்படையில் எதை வேண்டுமானாலும் சொல்வது என்பதெல்லாம் கருத்து சுதந்திரம் என்ற வரைவுக்குள் வருவதில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் நாம், நாகரீகமான முறையில் யார் மீதான தவறையும் சரியான வழியில் வெளிப்படுத்துவோம். அதுதான் ஜனநாயக மக்களின் சரியான எதிர்வினையாக அமையக்கூடும்.

ஒருகாலத்தில், நேற்றைய செய்திகளை இன்றைய தேதியில் கொடுத்து கொண்டிருந்த அச்சு ஊடகங்களை, அன்றைய செய்திகளை அன்றைக்கே தந்த தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்கனவே அசைத்து பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால், அதை விட நொடிக்கு நொடி நேரடியாக செய்திகளை சுடச்சுட தரத்துவங்கிய சமூக வலைதளங்களால், தொலைக்காட்சி ஊடகங்களும் தற்பொழுது ஆட்டம் கண்டு கிடக்கின்றன. இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் எந்த தலைப்பு அதிக அளவில் பகிரப்படுகின்றதோ, அதையே தான் தொலைக்காட்சி ஊடகங்களும் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது. நெட் பேக்குடன் கூடிய ஓர் ஆண்ட்ராய்டு செல்போன் இருந்தால் போதும், அனைவருடனும் எல்லாவிதமான செய்திகளையும் உடனுக்குடன் பகிரமுடியுமென்ற நிலை வந்த பின்னால், மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடக சக்தியே ஓரளவுக்கு நம் பின்னால் வந்து விட்டது எனலாம். எனவே, அதன் தன்மையையும் - அத்தியாவசியத்தையும் உணர்ந்து பொறுப்போடு இயங்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்

23 மார்ச் 2015

தமிழனின் அனுதாபம்!



தமிழன் எப்போதுமே, தமக்கு ஆதரவானவர்களையோ, பிடித்தவர்களையோ, அறிவாளிகளையோ, சாதனையாளர்களையோ இதுபோல யாராக இருந்தாலும் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தையும் கொடுக்காமல், அவர்களை பற்றி வாயை கூட திறக்காமல், இறந்த பின்னால் வானளவு புகழ்வான் என்பதற்கு இன்றைக்கு மீண்டும் ஓர் உதாரணம்; சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் தந்தையென்ற போற்றுதலுக்குமுரிய லீ குவான் யூ இன்று மரணத்தை தழுவினார் என்பது தான்.