31 டிசம்பர் 2013

புது ஆண்டு புகுதல்

2013 ம் ஆண்டு எத்தனையோ சுக துக்கங்களை கலவையாக தந்தாலும், இயற்கை வேளாண் ஞானி தெய்வத்திரு. கோ. நம்மாழ்வார் அவர்களின் மரணம், கொஞ்சம் அதிகமான வலியையே தருகிறது.

எனக்கு ஏற்கனவே மது - புகை பழக்கம் இல்லாததால் எதையும் கைவிட வேண்டிய அவசியமில்லை என்பதால், இணைய செயல்பாடுகளில் வருகின்ற ஆண்டும், வழக்கம் போல யாருக்காகவும் சுயத்தை இழக்காமல் இருப்பதே சரியானதென்று, புதுவருட கொள்கையாக முடிவெடுத்துள்ளேன். மேலும், வருகின்ற ஆண்டில் செய்ய வேண்டியவைகளென, இன்னும் பலவற்றை மனதிற்குள்ளாக பட்டியலிட்டு வைத்திருக்கின்றேன். அதை இப்போதே பொதுவில் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். மற்றபடி ஜோதிட கணிப்பீடின் படி, வரும் ஆண்டு முதல் இன்னும் 15 ஆண்டுகள் எனக்கு சிறப்பாக இருக்கும் என்பதால், இந்த புத்தாண்டை மகிழ்வோடும் - எதிர்பார்ப்போடும் வரவேற்கிறேன்!


என்னதான் தமிழனாக இருந்தாலும், ஹிந்து கலாச்சார விழாக்களை தவிர்த்து, ஏனைய (குறிப்பாக, அரசாங்க பதிவேடுகள், சம்பளம், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட) பல செயல்பாடுகளுக்கு ஆங்கில தேதியைதான் நாம் பயன்படுத்துகிறோம். அதனாலேயே, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

12 டிசம்பர் 2013

பிரபலங்களின் பிறந்த வாழ்த்துகள்!

கல்லூரி காலம் தொட்டு சுமார் 10 வருடங்களாக என் நண்பனாக இருக்கும் சிவநேசனுக்கு போன டிசம்பர் 8ம் தேதி அன்று பிறந்தநாள். போன மாதம் தான் அவனுக்கு கல்யாணம் நடைப்பெற்றது என்பதால் அவனது மனைவியான என் உடன்பிறவா தங்கைக்கும் என்னைப்பற்றி தெரியும். ஏனெனில், பெண் பார்க்க போனதிலிருந்து, மாப்பிள்ளை தோழனாக இருந்தது வரை அப்போதே எங்களின் நட்பை சிவநேசனின் மனைவியான என் உடன்பிறவா தங்கையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனாலும், அவனது பிறந்த தேதியன்று ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியாமல் போனதை பற்றித்தான் இங்கே சொல்ல வருகிறேன்.

தொடர்ச்சியாக பயணத்திலும், மற்ற வேலைப்பளுக்களும் இருந்ததால் வாழ்த்துகள் சொல்லவே மறந்துட்டேன். டிசம்பர் 8ம் தேதி சாயுங்காலம் சிவநேசனை பார்க்க அவனது வீட்டுக்கு சென்றேன். புதுமண தம்பதிகளால் நல்ல உபசைப்பு எனக்கு கிடைத்தது. கொஞ்ச பேசிக்கொண்டிருக்கும் போதுதான் கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னான். எனக்கு சரியா புரியல. என்ன திடீர்ன்னு கோவிலுக்கு போகணும்ன்னு கூப்பிடுறான்னு யோசிச்சேன். உடனேயே, அவனது மனைவி சொன்னச்சு,

அண்ணா! "உங்க பிறந்தநாளுக்கு அந்த அண்ணன் ஒரு விஷ் கூட பண்ணலயா? காலைலர்ந்து அந்த அண்ணன் விஷ் பண்ணுனாங்களா?ன்னு உங்கள பத்தி கேட்டுக்கிட்டே இருந்தேன்"ன்னு சொன்னுச்சு.

உடனே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... ஒருவழியா "அப்படியில்லம்மா, எங்க ஃப்ரெண்ட்ஷிப்க்குள்ள எந்த ஃபார்மாலிட்டியும் கிடையாது..." அப்படி இப்படின்னு சொல்லி சமாளிச்சிட்டேன்.

இதை ஏன் இங்கே சொல்றேன்ன்னா, பிரபலங்களின் பிறந்தநாளை தேடிப்பிடிச்சு, போட்டிப்போட்டுக்கொண்டு வாழ்த்துகள் சொல்வதை விட, கூட இருக்கிறவங்களோட - கூட பழகுறவங்களோட - கூட பிறந்தவங்களோட - தன்னை உருவாக்கி பெத்தவங்களோட பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொல்ல முதலில் பழகிக்குங்க. அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு. மற்றபடி இந்த பிரபலங்களுக்கு வாழ்த்து சொல்வது என்பது சில சமயம்தான் ஒத்துவரும். மீதி எல்லா நேரங்களிலும் அது வெறும் விளம்பர நோக்கில்தான் அமையும். புகழ் வெளிச்சத்தில் இருப்பவனை பாராட்ட வேண்டிய அவசியமே இல்லை. புகழ் கிடைக்காமல் இருட்டில இருக்கிறவனை அங்கீகரிக்க இந்த வாழ்த்துகளும் பாராட்டுகளுமே புது உந்துதலை கொடுக்கும் ஊக்க மருந்தாக அமையும்.

எனிவே, இன்னைக்கு பிறந்த அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவென மனமகிழ்வோடு வாழ்த்துகிறேன். குறிப்பாக என் ப்ரெண்ட் லிஸ்டில் உள்ள என் நண்பன் திரைப்பட துணை இயக்குனர் Jai Ganeshக்கும், Ragu Ammu, Rock Jaisankar, Govan Thevan, Muthu Pandian, Rajamanickam Raja, Jai Sankar, Thirumagan Anand AP, Sugumaran Muthusamy மற்றும் எங்க சோழமண்டலத்து காரர் இரா. பாலமுருகன்க்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

முக்கியமா, என் நண்பன் Siva Nesanக்கு Belated Wishes!

- இரா.ச.இமலாதித்தன்

09 டிசம்பர் 2013

வாழ்த்துகள்!

விஜய்டிவி ஜூனியர் சூப்பர் சிங்கரில் அறிமுகமான சோழநாட்டு பொண்ணு மன்னார்குடி அனு ஆனந்த் பாடியுள்ள "பண்ணையாரும் பத்மினியும்" படத்துல வர 'எனக்காக பொறந்தாயே' யென்ற பாட்டுதான் என்னோட லேட்டஸ்ட் ஃபேவரைட். அந்த அனுவோட ஹஸ்கி வாய்ஸ் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கும். இந்த பாட்டுல மெட்சூர் ஃபிமேல் சிங்கரா அந்த புள்ள பாடியிருக்குறதான் ஹைலைட்டே!

பொண்ணுங்க குரலுக்கு வயசு வித்தியாசமே இல்ல. ஆனால் ஆம்பள பசங்களுக்குதான் குறிப்பிட்ட வயசு வரைக்கும் மெட்சூர் வாய்ஸ் வரவே மாட்டுது.

ஏய் புள்ள எட்டாங்கிளாஸ் படிக்கிற அனு, வாழ்த்துகள்!

------------------------------------------------------------------------------------------
அட்ரஸ் / ரூட் சொல்றதுல தமிழனை அடிச்சிக்க முடியாது போல. நாலஞ்சு பேரு நிக்கிற இடத்துல பைக்கை நிப்பாடி தெரியாத ஊருக்கு வழி கேட்டால், அடிச்சு பிடிச்சு போட்டிப் போட்டுக்கிட்டு சொல்றாய்ங்க.

உங்கள மாதிரியான ஆளுங்களாலதான் அடிக்கடி புயலும் - மழையும் நம்ம நாகப்பட்டினம் பக்கமே வருது. நீடுழி வாழ்க!

சாதிய ஊடகமும் எதிவிர்வினையும்!

பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த கொலைகார கும்பலில் ஒருவன் கொல்லப்பட்டதற்காக, அரசாங்கம் சார்பில் அவசரகதியில் ஐந்து லட்சங்கள் கொடுப்பதன் உள்நோக்கம் என்ன? அன்றே தீர்க்கதர்சி திரு. சு.ப.வீரபாண்டியன் சொன்னது போல இது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினை தானே? தமிழ்நாட்டில் சராசரியாக மாதம் 20 எதிர்வினைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு எதிர்வினைக்கும் லட்சகணக்கில் அரசாங்க பணத்தையா வீணடிக்க முடியும்? குடிமக்களின் வரிப்பணமான அரசாங்க பணத்தை எடுத்து, இந்தமாதிரியான எதிர்வினைக்காக பல லட்சங்கள் செலவழிக்க காத்திருக்கும் அரசாங்கத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

#எதிர்வினை


---------------------------------------------------------------------------------------------------

ஐந்து லட்சங்கள் கொடுத்து உயிர் பறிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வாயைத்தான் அடைக்கலாம். ஆனால், அந்த உயிரிழப்பு காரணம் எதுவென்பதை ஆராய்ந்தால்...

ஏன் அந்த உயிர் பறிக்கப்பட்டது?
எதனால் இந்த எதிர்வினை?
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் எப்படி இருக்கிறது?
144 தடையால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா?
அரசியல் எதிரிகளை ஒடுக்க மட்டும்தான் காவல்துறை இருக்கிறதா?

இப்படி பல கேள்விகள் எழும்.

#எதிர்வினை

 ---------------------------------------------------------------------------------------------------

அஞ்சு லட்சம் பத்தாது. அஞ்சு கோடி கொடுங்க!ன்னு உண்மை அறியும் குழுன்னு ஒரு சாதிவெறி கும்பல் கூப்பாடு போடும்ன்னு எதிர்பார்க்கிறேன்.

ஏய் யாரங்கே, மதுரைக்கு ஒரு 144 பார்சல்!

#எதிர்வினை


 
---------------------------------------------------------------------------------------------------

இன்று பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா உத்தரவு
- செய்தி

போன வருடம் பெட்ரோல் குண்டு வீசினப்போ, உங்க சட்டம் எவன் கூட ஓடி போனுச்சு?

#எதிர்வினை


---------------------------------------------------------------------------------------------------

ஏழுக்கு ஒன்று ஈடாக முடியாது.

சற்று ஆறுதலோடும் - நிறைய நம்பிக்கையோடும் காத்திருப்பேன்...

#எதிர்வினை
 
---------------------------------------------------------------------------------------------------

சிறையில் இல்லாத நாட்கள் தவிர மற்ற வருடங்களில் நடைப்பெற்ற அனைத்து தேவர்ஜெயந்தியை தரிசிக்க பசும்பொன் வருவேன்னு வாய்கிழிய அடிக்கடி பேசும் திரு வைகோவிற்கு, 2012ல் தேவர்ஜெயந்தியின் போது பெட்ரோல் குண்டுவீசியும், கல்லால் அடித்தும், ஒளிந்திருந்து தாக்கி பசும்பொன்னுக்கு சென்ற அப்பாவி இளைஞர்களை கொன்ற தலித் பயங்காரவாதிகளை கண்டித்து வாய் உள்பட எந்தவொரு துவாரத்தையும் திறக்காத நீங்கள், இப்போது மட்டும் திறப்பதன் உள்நோக்கம் என்ன? ஒருநாள் கலிங்கப்பட்டிக்கும் இதே பாதிப்பு அவர்களால் வரலாம். அப்போது துணை நிற்க நாங்கள் மட்டும்தான் இருப்போம். ஏனெனில், பசும்பொன் தேவரை வணங்கும் அனைவருக்கும் நாங்கள் அரணாய் இருப்போம். துரோகம் செய்ய வைகோ அல்ல நாங்கள்!

--------------------------------------------------------------------------------------------------- 
நாமயெல்லாம் ஒன்றே!ன்னு சொல்லிக்கிட்டே, கூட இருக்கிறவனை அழிக்க பணத்தையும் - நேரத்தையும் செலவழித்து உள்ளடி வேலைகள் செய்யும் துரோகிகள், ஊடகத்துறையை கைப்பற்றும் முயற்சியில் இறங்கலாம்.

ஏனென்றால் யாரை வீழ்த்தவும் ஊடக பலம் தேவை.


--------------------------------------------------------------------------------------------------- 
பரம எதிரிகளான தலித்தியமும் - பார்பனீயமும் ஊடகத்துறையில் ஒன்று சேர்ந்து நம்மை அழிக்க போராடிக் கொண்டிருக்கின்றன.

களம் காண வலுவான ஓர் ஊடகம் நமக்கில்லை
 
 


- இரா.ச.இமலாதித்தன்

அரசியல் பதிவுகளில் சில

ஜெயாடிவியில், வட மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததுன்னு மட்டும்தான் சொல்றாய்ங்களே தவிர, தப்பிதவறி கூட பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியதுன்னு சொல்ல மாட்றாய்ங்க.

நல்லா வருவீங்கடே

தாமரை மலர்வது நிச்சயம், தேசியம் காப்பது அவசியம்!

--------------------------------------------------------------------------------------------------

காவி ஆண்டால் உனக்கென்ன? மோடி ஆண்டால் உனக்கென்ன? அந்நியர் பிடியில் சிக்கி தவிக்கும் இந்நாட்டை இம்மண்ணின் மைந்தன் ஆளட்டுமே!

தேசியத்தையும் - தெய்வீகத்தையும் காக்கும் தகுதியுள்ள பா.ஜ.க. தான் மத்திய சர்க்காரை ஆள வேண்டும் என்பதே அடியேன் விருப்பம்.

--------------------------------------------------------------------------------------------------

டெல்லி தேர்தலில் தேமுதிக மொத்தம் 493 வாக்குகள் வாங்கிருப்பதை ஜெயாடிவி உள்பட இங்குள்ளவர்களும் ஏளனம் செய்து பதிவிடுகின்றார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள 39 எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற திராணி இல்லாதபோதே, பிரதமர் கனவு காணும் ஜெயலலிதாவை விட விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை. ஏனெனில், அவர் டெல்லி முதல்வராக கனவு கண்டு தேர்தல் களம் காணவில்லை. மேலும், வெற்றியை தான் இழந்துள்ளார், களத்தை அல்ல!

தோற்போம் என தெரிந்த பின்பும், தனது கட்சியையும், கட்சி சின்னத்தையும், தன்னையும் டெல்லியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்த திரு. விஜய்காந்தின் துணிச்சலை பாராட்டுகிறேன்.


--------------------------------------------------------------------------------------------------தேசத்தந்தை நேதாஜி போன்ற உண்மையான சுதந்திர போராட்ட மாவீரர்களுக்கு உரிய அங்கீகாரமும் - மரியாதையும் - கெளரவமும் வழங்க வக்கற்ற இந்திய (காங்கிரஸ்) அரசாங்கம், இன்னொரு நாட்டின் இன போராளியான நெல்சன் மண்டேலாவுக்காக ஐந்து நாள் துக்கம் அனுசரிப்பு யென்ற போலியான விளம்பரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இங்குள்ள திடீர் சாதி ஒழிப்பு போராளிகளுக்கு சேகுவேராவை தெரிந்த அளவுக்கு கூட, நேதாஜியின் உண்மையான வரலாறு தெரியாது என்பதுதான் வெட்கக்கேடு.


--------------------------------------------------------------------------------------------------

திசம்பர் 6: தலித் - இசுலாமியர் எழுச்சிநாள்! ன்னு ஊரு முழுக்க திருமாவளவன் கட்சியினரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் என்னய்யா சம்பந்தம்? அம்பேத்கார் பிறந்த தேதியும், பாபர் மசூதி இடிப்பு நாளும் ஒரே தேதியில் வந்தால் அந்தநாள் எழுச்சி நாளாக ஆகிவிடுமா? விடுதலைப்புலிகள் அமைப்பால் வரையறுக்கப்பட்ட தேசியவிலங்கான சிறுத்தையின் பெயரை வைத்து ஈழம் என்ற போர்வையில் சாதி அரசியல் செய்யும் உங்களது லட்சணம் ஊருக்கே தெரியும் போது, ஏனோ புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மட்டும் இன்னும் தெளிவாக தெரியவில்லையே.

அங்கே ஈழத்தில் பலநூறு இந்து கோவில்களையும், கிருஸ்துவ தேவலாயங்களையும் தரைமட்டமாக இடித்தொழித்தார்களே, அந்த சிங்களவனின் எழுச்சியை அடக்க என்ன செய்தீர்கள் என்பதை சற்று சுயநினைவோடு சிந்தித்துவிட்டு, இந்த எழுச்சி என்பதை பற்றி இங்கே பேசலாமே!

- இரா.ச.இமலாதித்தன்

21 நவம்பர் 2013

மூவேந்தரும் அகமுடையாரே!


மூவேந்தர்ன்னு சொல்லிக்கொள்ளும் தகுதி, மற்ற சாதிகளை விட அகமுடையாருக்கு அதிகம் உண்டு. ஏனெனில், ஓவ்வொரு நாட்டிலும் படையமைத்து அரசாண்ட இனத்தின் வம்சவாளிகள் அந்தெந்த ஊரிலேயே பல அடையாளங்களை மறைத்தும் தொலைத்தும் வாழ்வதுதான் நியதி. அப்படிப்பார்த்தால், சோழநாடு - பாண்டிய நாடு - சேரகொங்கு நாடு என எல்லா நாட்டிலும் (ஊரு விட்டு ஊரு இடம்பெயராமல்) பூர்வக்குடியாய் - சமூகத்தில் மேல்தட்டு மக்களாய் - வீரம்செறிந்த மக்களாய் - மற்றவர்கள் மதிக்கும்படி அந்தஸ்துமிக்க பெரிய கூட்டமாய், அப்போது முதல் இந்நாள் வரை இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பது அகமுடையார் இனம் மட்டுமே. தெற்கு மட்டுமல்ல, வடக்கு - மேற்கு - கிழக்கு - நடு யென்று எல்லா திசையிலும் அகமுடையார் மட்டுமே பூர்வக்குடி மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் கூட சிந்திக்க கூடிய விசயமே...
(பிரபு - பாரதி - குமார் என்கவுண்டர் கொலையை எதிர்த்து) அகமுடையார்களுக்கு என்று தனி அமைப்பு பேரவை இருக்கிறதே அவர்கள் போராடினார்களா? யென்று முக்குலத்து உறவு ஒருவர் கேட்கிறார்.

ஓ! அப்போ அகமுடையாருக்கு அமைப்பு இருந்தால், அகமுடையார் மட்டும் தான் போரடணுமா என்ன? அப்பறம் ஏன் முக்குலத்து அமைப்புகள் எல்லாம்? செத்தவன் அகமுடையனாக இருந்தால், அகமுடையார் அமைப்பு மட்டும்தான் போராடணும்ன்னு நினைக்கிறப்பவே உங்க நோக்கம் புரியுது.
காளையார்கோவிலில் நடைப்பெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலில் நடைப்பெற்ற கசப்பான ஒரு நிகழ்வால், பிரபு - பாரதி - குமார் யென்ற மூன்று இளைஞர்களை காவல்துறையே என்கவுண்டர் மூலம் கொலை செய்ததை எதிர்த்து இதுவரை யாராவது குரல் கொடுத்திருக்கிறார்களா? அப்போ, உனக்கு வந்தால் மட்டும்தான் ரத்தம்... எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. நல்லாருக்கு உங்க நியாயம். அகமுடையார் என்னைக்குமே ஒன்றாக இணைந்துவிட கூடாதுன்னு முனைப்பில் இருக்கும் எவனுக்கும் உட்பிரிவுன்னு பேச தகுதியே கிடையாது. இந்நேரம் அகமுடையாருக்குன்னு ஒரு தனிப்பெரும் அமைப்பு இருந்திருந்தால், அந்த மூவரின் குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடாவது கிடைத்திருக்கும். அந்த என்கவுண்டரை நடத்திய மறவரான வெள்ளைத்துரையை பற்றி பேசவிரும்பவில்லை; ஏனெனில், வெள்ளைத்துரை வெறும் அம்புதான் என்பதால். இங்க அகமுடையார் மட்டும்தான் உட்பிரிவு பார்க்கிறது போல, மாயையை உருவாக்க முயலும் எல்லோருக்குள்ளும் உட்பிரிவு பாசம் இருக்கத்தான் செய்கிறது. தேவைப்பட்டால், அதை நிரூபிக்கவும் முடியும். தேவையில்லாமல், மேலும் மேலும் எங்களை பேச வைக்க வேண்டாம். நீங்க என்ன எங்கள ஒதுக்குறது? எங்க ஊருல டெல்டா மாவட்டத்துல தேவன்னா யாருன்னு விசாரிச்சா தெரியும் அது அகமுடையார் தான்னு.

வருகின்ற 30ம் தேதி பிரபு - பாரதி கொல்லப்பட்ட தினம்
மூன்று கொலைகளைப் பற்றி மூச்சு பேச்சு இல்லாமல் முடங்கி கிடந்த கூட்டமெல்லாம், இன்றைக்கு மூன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது. மூன்று மூன்றுன்னு பேசுற எவனாவது இதுவரைக்கும் அந்த கொலைகளுக்காக போராடி இருக்கானா? இல்லையே! ஏன்னா, அவனுக்கு இவன் கூட்டம் காமிக்க மட்டும்தான் தேவைப்படுறான். அந்த மூன்று கொலைகளுக்காக போராட கூட ஒருத்தன் வரமாட்றான். ஒருவேளை அப்படி அந்த மூன்று பேருக்காக சம்பந்தப்பட்ட ஒருத்தனான இவன் போராட முன்வந்தாலும் அவனை பிரிவினைவாதி யென்ற பட்டம் கொடுத்து ஒதுக்கிவிட நினைக்கிறதே ஒரு கூட்டம். அந்த மூன்று கொலைகளுக்கு எதிராக எந்த முன்முயற்சியும் எடுக்காத மற்ற இரண்டும், பிரிவினை பற்றி பேச அறுகதை அற்ற ஜெனமங்களே!


தன்னை தரக்குறைவாக பேசி கேவலப்படுத்த நினைக்கின்ற மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை விட, தன்னைப்பற்றிய உயர்வான விசயங்களை முன்வைத்து பேசுவதுதான் நம்மை பக்குவப்படுத்தும். அப்போது எதிரிகளைவிட துரோகிகளுக்கு தான் அதிகமாக கோபம் வரும்! தனித்துவமானவர்களை என்றைக்குமே தனிமைப்படுத்த முடியாது!

நான் அகமுடையார்ன்னு சொல்வதலோ, அகமுடையார் பற்றிய பதிவை பதிவதலோ, உங்களுக்குள் ஏற்படும் மனச்சங்கடங்களை பற்றி எனக்கு கவலையில்லை. மரியாதைக் குறைவான சில பதிவுகளால் அகமுடையார்களை கேவலப்படுத்த முயலும் துரோகிகளுக்கு, பதிலுக்கு பதில் கேவலமாக எழுத எனக்கு மனமில்லை. ஆனால், அகமுடையார் சார்ந்த விசயங்களையும், எனக்கு தெரிந்தவற்றையும் இங்கே நேரம் கிடைக்கும் போது பகிரலாமென்று இருக்கிறேன். அகமுடையார் பற்றிய பதிவுகளையே சகித்துக்கொள்ள முடியாதவன் முக்குலத்தோர் என்று சொல்லவே அறுகதை அற்றவன்! உட்பிரிவுன்னு ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு தனிமைப்படுத்த முயலும் சில சுயசாதிப்பிரிவு பற்றுள்ளவர்களையும் பற்றி எனக்கு கவலையில்லை.

ஏனெனில், நான் அகமுடையாராக இருப்பதால் தான், தேவனாகவும் இருக்க முடிகிறது. இதை புரிந்துகொள்ளாத குறைகுடமெல்லாம், உட்பிரிவுயென்று சொல்லிக்கொண்டு போகலாம். எதுவுமிங்கே நிரந்தரமில்லை.

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!

இன்னைக்கு பலபேரு இங்கே இணையத்தில் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை பிரிவினைவாதியென்று சொல்லி மகிழ்ச்சியடைகிறார்கள். களத்திலும் சரி, இணையத்திலும் சரி நான் செயல்பாட்டில் இருந்தவன்; இருக்கின்றவன் தான். அதைப்பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளவோ, மிகைப்படுத்தி பகிரவோ எனக்கு விருப்பமில்லை. ஆனால் இன்று இதை சொல்வதால் எனக்கு யாரும் விருது கொடுக்க போவதில்லை. ஆனால், என் பங்களிப்பை பற்றி இங்கே தெளிவாக்க விரும்புகிறேன்.

மேலும் இங்கு சிலர்... போற இடங்களையெல்லாம் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து கொண்டு செயல்வீரர்கள் போல காட்டிக்கொள்ள முனைகிறார்கள்.அவர்களை போல பெருமை பட்டுக்கொள்ள முடியாவிட்டாலும், என் பங்குக்கு இணையத்தில் இதுவரை நான் செய்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

01. இணையத்த்தை பொருத்தவரை ஆரம்பத்தில் தேவரினத்தை அடையாளப்படுத்திய ஒரே இணையம்: www.thevar.co.in என்பதே ஆகும். அப்போது அந்த இணையதளத்தில் கட்டுரை எழுதி பரமரித்தவர்களான திரு வெயிலணன், திரு. ஜெ.முத்துராமலிங்கம், திரு.முகுந்தன் உள்பட அனைவருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றபோதும், சிறியவனான எனக்கும் அவர்களுக்கு இணையான இடமளித்து என்னையும் எழுதவும் - அந்த இணைய தளத்தை பராமரிக்கவும் முழுசுதந்திரம் அளித்தனர். அப்போது முதல் இணைய செயல்பாட்டில் இருக்கின்றவன்.

02. இப்போதுள்ள ஃபேஸ்புக் - ட்விட்டர் போன்ற சமூகதளங்களுக்கு முன்னோடியாக இருந்த ஆர்குட் - கூகிள் பஸ் என்ற சமூக வலைதளங்களில் தேவரினம் சார்பாகவும், தேவரினத்திற்கு எதிரான ஆர்குட் கம்யூனிட்டிகளில் நடக்கும் விவாதங்களிலும் இரவு பகல் பாராமல் விவாதம் செய்தவன். அப்போது மிகபிரபலாக இருந்த வால்பையன் - ஆல் இன் ஆல் அழகுராஜா போன்றவர்களோடு தொலைபேசியின் வாயிலாக நேரடியாக தனி ஆளாக சண்டையிட்டவன்.

03. ஆர்குட் குழுமத்தில் அப்போதே 4000க்கும் மேற்பட்ட உறவுகளை உள்டக்கிய தேவர் குழும விவாதங்களில் பங்கெடுத்தவன். அந்த குழும உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு, 2009ம் ஆண்டு வாக்கிலேயே உடையாளூர் ராஜராஜ சோழன் சமாதிக்கு சென்று வணங்கி வந்த அணியில் இடம்பெற்று அதை இணையத்திலும் - யூட்யூபிலும் பகிர்ந்தவன். அப்போது இங்குள்ள பலருக்கு ராஜராஜன் யாரென்றும் தெரியாது. அவரது சமாதி எங்கிருக்கிறது என்பதும் தெரியாது.

04. பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால், www.thevar.co.in யென்ற இணையமும் அதிலுள்ள பதிவுகளும் முற்றிலுமாக இழந்தபின்னால், பேக்-அப் தேவைக்காக அனைத்து முக்கிய பதிவுகளையும் www.thevarthalam.blogspot.com வலைதளத்தில் சேகரித்து வைத்தவன். அந்த பதிவுகளே மீண்டுமொரு இணையதளத்தை உருவாக்கும்போது தேவைப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

05. அதன் பிறகு, திரு குவைத் பாண்டியன் பங்காளியின் பண உதவியோடு www.thevarthalam.com இந்த இணையதளத்தை உருவாக்க காரணமாக இருந்தவன். இன்று தேவருக்கான ஒரே இணையதளமாக இருக்கக்கூடிய தேவர்தளத்தின் பெயரை வைத்தவன். சிலர் மீதான மனக்கசப்பால் இப்போது தேவர்தளத்தின் செயல்பாட்டில் இல்லாதவன்.

06. தமிழ் விக்கிபீடியாவில் கள்ளர் - மறவர் களுக்கு தனித்தனி பக்கம் இருந்தபோதும், அகமுடையார்களுக்கு யென்று எந்த பக்கமும் அதுவரை இருக்கவே இல்லை என்ற ஆதங்கத்தோடு தனியாக http://ta.wikipedia.org/wiki/அகமுடையார் யென்ற பக்கத்தை உருவாக்கியவன். இன்றைக்கு அகமுடையாருக்கு என்று ஒரு பக்கம் இருக்கிறதென்றால் அதை உருவாக்கியவன் என்ற ஒற்றை சந்தோசமே எனக்கு போதும். ஏனெனில், அப்போதும் கள்ளருக்கும் - மறவருக்கும் தனித்தனி விக்கிப்பீடியா பக்கம் இருந்தது. ஆனால், அகமுடையாருக்கு யென்று ஒருபக்கத்தை உருவாக்க கூட மற்ற யாருக்கும் மனமில்லை.

07.. ஃபேஸ்புக்கில் Thevar-Mukkulathor யென்ற பக்கத்தை முதலில் உருவாக்கியவன். இதை தவிர இன்றும் ஃபேஸ்புக்கில் பல உறுப்பினர்களை கொண்ட பல ஃபேஸ்புக் ஃபேஜ்களான முகநூல் பக்கங்களை உருவாக்கி அதை செயல்பாட்டிலும் வைத்திருப்பவன்.

08. தேவர் ஜெயந்தி தடையை உடைப்போம் , திராவிடத்தை ஒழிப்போம் என்ற ஃபேஸ்புக் ஃபேஜ்களை உருவாக்கியவன். அந்த பக்கங்களை உருவாக்கியதோடு நின்றுவிடாமல், அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பல உறவுகளை அட்மினாக நியமித்தி அதிக உயிரோட்டத்துடன் தடைப்பற்றிய செய்திகளை பகிர காரணமாக இருந்தவன்.

09. இதைத்தவிர www.nochchi.com யென்ற இணையத்தை உருவாக்கி, அதை தலித் அல்லாத தமிழ்சமுதாயத்திற்கான பொதுதளமாக பாவிக்க முயற்சி எடுத்து சில கட்டுரைகளை எழுதியவன்.

10. இணையத்தில் நுழைந்த நாள் முதல் வினவு - கீற்று உள்ளிட்ட பல தலித் சார்புள்ள இணையதளங்களில், தேவரினத்திற்கு எதிரான பதிவுகளுக்கு கண்டனத்தையும், தேவரினம் சார்பான என்னாலான கருத்துகளை பகிர்ந்து கொண்டிருப்பவன்.

11. இதைத்தவிர களப்பணியை விவரித்து சொல்ல விரும்பவில்லை. திருக்காட்டுப்பள்ளியில் - ஒன்பத்துவேலி கிராமத்தில் எரிக்கப்பட்ட தேவரின (கள்ளர்) வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் சொல்லப்போனவன். தடைப்போட பட்ட இந்த தேவர்ஜெயந்தியை பசும்பொன்னில் கொண்டாட நினைத்து ஸ்ரீதேவரை வணங்கி வந்தவன். என் உணர்வின் அடிப்படையில் அங்கே பசும்பொன்னில் களமாடிய செய்திகளை மற்றவர்கள் போல போட்டோ எடுத்து போட்டு பெருமைத்தேடிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், எனது உணர்வை என்னோடு பசும்பொன்னுக்கு வந்திருந்த முரளிநடராஜன், கணேசமூர்த்தி, ஜாக் துரைப்பாண்டியன் போன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.

12. பொதுவில் சொல்ல முடியாத இன்னும் பல விசயங்களை இணையத்திலும், வெளியிலும் களப்பணி ஆற்றிய என்னை, சிலர் திரைமறைவு வேலைகள் செய்து உட்பிரிவுவாதி யென்று பட்டம் கொடுக்கின்றனர். ஒரு வருடத்திற்கு உள்ளாக இணையத்தில் செயல்படும் பலர் போராளியாக உருவெடுத்துவிட்டதால், அவர்களுக்கு இந்த இமலாதித்தன் ஏளனமாக தெரியலாம். உட்பிரிவு பாசத்தோடு தனித்தனியாக குருப்பாக பேசி முடிவெடுத்து இணையத்தில் செயல்படும் அனைவரை பற்றியும் எனக்கு தெரியும். அவர்களால், நான் உட்பிரிவுவாதி என்று அவதூறு பரப்பப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. அவர்களை போன்ற இரட்டைவேடம் போடும் விலாங்கு மீன்களுக்காக என்றும் என் சுயத்தை இழக்கமாட்டேன்.

நான் முதலில் அகமுடையார். அதன்பிறகு தேவர். ஏனெனில், நான் அகமுடையாராக இருக்க முடிவாதலேயே தேவராகவும் இருக்க முடிகிறது.

- இரா.ச.இமலாதித்தன்.