24 மே 2021

பத்மசேஷாத்ரி பள்ளியில் பாலியல் அத்துமீறல்!


        பி.எஸ்.பி.பி.பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் பொழுது, வெறுமனே தவறு செய்ததன் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்வதால் மட்டுமே எல்லாம் சரியாகி விடாது. பாலியல் சீண்டல்களுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவிகளையும், அவர்களது பெற்றோர்களையும், இந்நேரம் அந்த பள்ளி நிர்வாகம் மிரட்டி இருக்கக்கூடும். அரசுக்கோ, ஊடகங்களுக்கோ நம் பள்ளி ஆசிரியர் பற்றி இனி தகவல்களை கொடுத்தால், உங்கள் கல்வி உள்பட எதிர்காலமே பாதிக்கப்படுமென பாடமெடுத்திருப்பார்கள். எனவே, பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

        ஆன்லைன் வகுப்பிலேயே மாணவிகளை பாலியல் தொந்தரவு கொடுக்கு ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகள், தனி வகுப்புகளென என்னென்ன செய்திருப்பார்களென விசாரணை செய்ய வேண்டும். விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளிவந்த 'ராட்சசன்' படத்தில், மிகத்தெளிவாக இம்மாதிரிதான பாலியல் தொந்தரவு கொடுக்கின்ற ஆசிரியரின் கொடுஞ்செயல்களை விரிவாக காட்சிப்படுத்திருப்பார்கள். பார்க்கவே பதைபதைப்பாக இருக்கும். இந்த பாலியல் சீண்டலுக்கு தனிப்பட்ட ஆசிரியர் மட்டும் பொறுப்பல்ல. இப்படியான வக்கிரபுத்தியுள்ள நபரை பணியில் அமர்த்தி, அவருக்கு கட்டற்ற சுதந்திரம் கொடுத்த, நிர்வாகத்திற்கும் முழு பொறுப்பு உண்டு. எவ்விதமான தண்டனையாக இருந்தாலும் பத்மசேஷாத்திரி பள்ளி நிர்வாகத்திற்கு சமவிகிதத்தில் பகிர்ந்தளிக்க அரசு முன்வர வேண்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

22 மே 2021

அமமுகவினரின் புது அவதாரம்!

        டிடிவி தினகரனிற்கு ஆதரவாக, அதிமுகவை சகட்டுமேனிக்கு எதிர்த்து மூன்று பயர் விட்டவர்களும், டிடிவியை சாதி ரீதியாக ஆதரித்து சக சாதிக்காரரான ஓ.பி.எஸ்ஸை கடுஞ்சொல்லில் விமர்சித்தவர்களும், சின்னம்மா, தியாகத்தலைவி என மூச்சு முன்னூறு தடவை சொல்லி இணையத்தில் அமமுகவிற்காக செயல்பட்டவர்களெல்லாம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திடீரென திமுக பக்கம் செல்வதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

         இதற்கிடையே, எம்.பி.சி உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோமென வன்னியர்களையும், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறோமென கொங்கு வெள்ளாள கவுண்டர்களையும், தென் தமிழகத்தில் பகைமை சக்திக்களாக்கிய சம்பவங்களால் சாதிய மோதலுக்கே கொண்டு செல்லுமளவுக்கு ஒரு கட்டத்தில் நிலைமை சென்றடைந்ததையும் மறக்க முடியாது.
 
        இப்படியான சூழல்களையெல்லாம் தாண்டி, தேர்தல் அரசியலில் அமமுகவின் ஓட்டு சதவீதம் 2%க்கு குறைவான அளவில் பதிவானதால், அமமுகவின் தீவிர ஆதரவாளர்கள், இணைய செயற்பாட்டாளர்கள் என காட்டிக் கொண்டவர்களில் பெரும்பான்மையனோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். ஒருசிலர் வெளிப்படையாகவே, தினகரனுக்கு பதிலாக ஸ்டாலின் படத்தை ப்ரொஃபைல் படமாக மாற்றிக்கொண்டு, 'இனி திமுகவில் பயணிக்கின்றேன்' என சொன்னதையும் பார்க்க முடிந்தது. வேறு சிலரோ, டிடிவி அண்ணனுக்கே நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்களே என விரக்தியில் பேசி, அரசியல் பதிவுகளிலிருந்து ஒதுங்கி நிற்பதையும் காண முடிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ச்சியாக கவனிக்கும் பொழுது, 'அரசியலில் இதெல்லாம் சாதாரணம்' என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

- இரா.ச. இமலாதித்தன்

மெரினாவும், அரசு இல்லமும் - ஓர் அரசியல் மோதல்!

        எம்.எல்.ஏ. ஒருவர் இறந்தாரெனில் அவரது உடலை புதைக்க மெரினாவில் இடம் கொடுக்க வேண்டுமென்பது எந்த சட்டத்திலும், இல்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்பது கேபினெட் தகுதியுடைய பதவி. அமைச்சர்களுக்கு இணையான பதவி. அப்படியான எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவருக்கு அரசு இல்லத்தில் குடியிருக்க அனுமதி உண்டு. இது சட்டத்திற்கு உட்பட்ட மரபு.
 
        இந்த இரண்டையும் குழப்பிக்கொண்டு, என்னென்னமோ எழுதி கொண்டிருக்கின்றனர் மு.க.நூல் மு.க. ரைட்டப் வெறியர்கள். 'இன்னா செய்தாரை ஒறுத்தல்...' என திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழ்ப்பாடங்களும், 'ஆறடி மண் மூன்றடி மண்' என கணித பாடங்களும், 'பெருந்தன்மை, மேன்மக்கள், பாரம்பரியம்' என வரலாற்று பாடங்களும், 'வெட்கமே இல்லாமல் அந்த வீட்டில் எடப்பாடி இருக்கிறார்' என உளவியல் பாடங்களும், இணையமெங்கும் ஆன்லைன் கிளாஸ் போல மு.க. ஊடகவியலாளர்கள் பாடம் எடுத்து கொண்டிருக்கின்றனர்.

        கடந்த கால் நூற்றாண்டு கால அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களில் எடப்பாடி பழனிசாமியை தவிர மற்ற அனைவருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், அரசு ஒதுக்கும் வீடு அவர்களுக்கு தேவைப்படாமல் இருந்திருக்கலாம். அதற்காக, சென்னையை இருப்பிடமாக கொண்டிருக்காத ஒருவருக்கு அரசு மரபின் படி, ஒதுக்கப்பட்டிருக்கும் அரசு இல்லத்தில் தங்கினால், அவருக்கு சூடு சுரணை, வெட்கம், மானமெல்லாம் இருக்காது என எழுதும் மனம்பிறழ்ந்த ஆட்களின் பதிவுகளை பார்க்கும் பொழுது தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எழுதவும் தோன்றுகிறது. கடமை கண்ணியம் கட்டுப்பாடெல்லாம் எழுத்துகளில் கூட இல்லாதவர்கள் எப்படி திமுக காரர் என மார்த்தட்டி கொள்ள முடிகிறது?

        திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினே கடந்த கால கசப்புகளையெல்லாம் மறந்து இனி நாகரீகமான அரசியலை தமிழ்நாட்டில் செய்யலாமென முன்னெடுத்தால் கூட, இந்த மாதிரியான கட்சி ஆட்கள் விடுவதாக தெரியவில்லை.



பின்னிணைப்பு:


        எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் உள்ள ஒருவருக்கு அரசு இல்லம் ஒதுக்குவது அரசாங்க மரபு. அதற்கு பிச்சை என சொல்லுமளவுக்கு இறங்கி பேச ஆரம்பிக்கின்றனர். மு.கருணாநிதியோடு எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட முடியாது தான். ஆனால், அப்படியான ஒப்பீட்டைத்தான் அவர்கள் இன்று செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி இல்லையெனில், எடப்பாடி பழனிசாமியோடு தான் மு.க.ஸ்டாலினை ஒப்பிட்டு கொண்டிருக்கின்றனர் என பொருள் கொள்ள வேண்டும்.

        மெரினா விசயத்தில் ஜெயலலிதாவின் மரணம் வரை திரும்ப தோண்டி எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஒருவேளை ஜெயலலிதா இறந்த பொழுது, அதிமுக ஆட்சியில் இல்லாமல், திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும் நீதிமன்றம் வரை சென்று தான் மெரினாவில் இடம் வாங்கிருப்பார்கள் அதிமுகவினர். உண்மையாகவே இதுதான் நடந்திருக்கும். ஏ1 குற்றவாளிக்கு எப்படி மெரினாவில் இடம் கொடுக்கலாமென அனைத்து சேனல்களும் நேரலை விவாத நிகழ்ச்சிகளை நடத்திருக்கும்.

        இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது ஒன்று புரிகிறது. தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறதென வெகுநாட்களாக கட்டமைக்கப்பட்ட போலி பிம்பமானது, ஸ்டாலினாலும், எடப்பாடி பழனிசாமியாலும் உடைபட்டு இருக்கிறது என்பதும் உண்மையாகிருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்


ஊரடங்கு கோரிக்கை வைக்கும் நபர்கள் யாரார்?

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வேண்டுமென கோரிக்கை வைப்பர்கள் யாராரென பார்த்தால்,

01. கல்வித்துறையில் அரசாங்க பணியிலுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்.

02. பெற்றோரின் அரசு ஓய்வூதியமே மாதம் லட்சக்கணக்கில் வாங்கும் குடும்ப உறுப்பினர்கள்.

03. வெளிநாட்டில் தேவைக்கு அதிகமாக சம்பாரித்து விட்டு, ஊரில் செட்டிலானவர்கள்.

04. வீடுகள், கடைகள் என வாடகைக்கு விட்டு அதில் வருமானம் பார்ப்பவர்கள்.

05. வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வசிக்கும் மகன்/மகளின் வருமானத்தை கொண்டு இங்கே சுகபோகமாய் வாழும் நபர்கள்.

06. தன் மூததையர் சொத்துகளால் குத்தகை மூலம் பலனடைபவர்கள்.

07. வீ.ஆர்.எஸ் வாங்கி கொண்டு, ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து ஆன்லைனிலேயே சம்பாரிக்கும் ஆட்கள்.

08. வொர்க் ஃப்ரெம் ஹோம் என வீட்டிலிருந்து கொண்டே மாதச்சம்பளத்திற்கு இடையூறு இல்லாத அலுவலர்கள்.

        இப்படியாக இன்னும் பல வழிகளில் மாதாமாதம் பல்லாயிரம் ரூபாய்கள் வருமானத்தால் பலனடைந்து கொண்டிருக்கும் நபர்கள் இங்கே பலருண்டு. அவர்களெல்லாம் பால், மருந்து, காய்கறி, இறைச்சி, மளிகை என எதற்குமே வீட்டை விட்டு வெளியவே வராத, ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து படிதாண்டா பணக்காரர்கள். வேலையாட்களை வைத்து கொண்டு அவர்களுக்கான எல்லாவற்றையும் கவனித்து கொண்டு, டிவி முன்பு அமர்ந்து கொண்டே தெருவில் வருவோர்களை அவர்களால் ஏளனம் செய்ய முடியும்.

        மொபைலோ லேப்டாப்போ அதன் மூலம், "ரோட்ல போறவனையெல்லாம் புடிச்சு ஜெயிலுக்குள்ள போடுங்க. கொரானாவை பரப்புறதே இவங்க தான்!" என பதிவுகள் எழுதவோ, கமெண்ட் செய்யவோ, கருத்து கூறவோ அந்த படிதாண்டா பணக்காரர்களால் முடியும். ஆனால் எதார்த்தம் அதுவல்ல.

         கொரொனாவை பரப்புவது வெளியில் திரிவோரின் வேலை. அவனவன் பிழைப்பே வெளியே போனால் தான் நடக்கும் என்பதை மிடில் கிளாஸ் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கே புரியும். இந்த எதார்த்தம் புரியாமல், சுகர், பீ.ப்பி மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டே மாடியிலோ, ட்ரெட் மில்லிலோ வாக்கிங் போகும் ஆட்கள் மனதிற்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
 
        அன்றாடும் மன உளைச்சலில் அல்லற்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் (பொருளாதார பிச்சைக்காரர்களாகி போன, தனியார் தொழிலாளிகள், சிறு தொழில் செய்வோர், தினக்கூலிகள் உள்ளிட்ட) நபர்களையெல்லாம் ஏளனமாக பேசாமல் இருப்பதே படிதாண்டா பணக்காரர்களுக்கு நல்லது. இங்கே, அறிவுரை கூறவது தான் மிக எளிது. அது போல் வாழத்தான் எல்லாருக்கும் வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. வசதிகளும் கிடைப்பதில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

19 மே 2021

தொ.ப.வும், கி.ரா.வும்!

தொ.ப. கோனார்.
கி.ரா. நாயக்கர்.

முன்னவர் இறப்பின் பொழுது, பல தரப்பட்ட விமர்சனங்கள். பின்னவர் இறப்பிற்கு, அரசு மரியாதையோடு அடக்கம் செய்து அவருக்காக சிலை வைக்கவும் ஆணை.

இதற்கு பெயர் தான் #belongstodravidianstock

தொ.பரமசிவனுக்கும், கி.ராஜநாராயணனுக்கும் தனிப்பட்ட வர்க்க/இன/சாதிய பேதமோ, யார் பெரிதென்ற ஈகோவோ இருந்திருக்குமாயென தெரியாது. இருவரும் தங்களை தங்களோடு ஒப்பிட்டு கொண்டார்களா எனவும் தெரியாது. ஆனால், திராவிடம் என பேசும் புலித்தோல் போர்த்திய பன்றிகள் மிகப்பெரும் திட்டமிடலோடு தான் ஒவ்வொரு விசயத்தை அணுகுகின்றனர். கி.ரா.வை எந்த இடத்தில் வைக்க வேண்டும், தொ.ப.வை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்ற தெளிவான திட்டமிடல் அவர்களிடம் இருக்கின்றது. கி.ரா.வா? தொ.ப.வா? எனில் இவர்களில் யாரை பெரும்பிம்பமாக காட்ட வேண்டுமென்ற தெளிவு, திராவிடம் பேசும் தமிழரல்லாத ஆட்களிடம் இருக்கின்றது. இதை தமிழர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

10 மே 2021

ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர மூதாதையர் கிராமத்தில் கொண்டாட்டம்!


ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர மூதாதையர் கிராமத்தில் கொண்டாட்டம்!

- என். மகேஷ் குமார், இந்து தமிழ்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை ஆந்திராவில், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே உள்ள செருவு கொம்மபாளையம் கிராமத்தில் பேனர், தோரணங்கள் கட்டி கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து செருவு கொம்மபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வருலு கூறியதாவது:

ஆந்திரா, தமிழகம் எல்லாம் ஒன்றாக இருந்த சமயத்தில், பல மன்னர்கள் இப்பகுதிகளை ஆண்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூதாதை யர்கள் (தாத்தா) இந்த கால கட்டத்தில் விஜயநகர மன்னர்களின் அரசவையில் வித்வான்களாக பணியாற்றியுள்ளனர்.

அங்கிருந்து ஓங்கோல் அருகே இருந்த பெள்ளூரு சமஸ்தானத்தில் இவர்களது மூதாதையர்கள் நாகஸ்வர வித்வான்களாக வெங்கடகிரி அரசரிடம் பணி யாற்றினர். அப்போது, இவர்களின் வம்சாவளியினருக்கு பெள்ளூரு சமஸ்தானம் சார்பில் 5 குடும்பத் தாருக்கு தலா 30 ஏக்கர் நிலம் என மொத்தம் 150 ஏக்கர் நிலம் மானியமாக வழங்கப்பட்டது. இதில் அவர்கள் விவசாயம் செய்து வந்தனர். வறட்சி நிலவிய போது, நிலங்களை விற்றுவிட்டு இவர்கள் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இப்போதுகூட இவர்களுடைய மூதாதையரின் குடும்பத்தார் இங்கு வசிக்கின்றனர்.

கடந்த 1960-ம் ஆண்டு, கருணாநிதி ஆந்திராவின் ஏலூருக்கு வந்தார். டிடெக்டிவ் நாவலாசிரியர்கள் சங்க கூட்டத்தில் கருணாநிதி தலைமையேற்க வந்தார். அப்போது அவர் தமது மூதாதையர் வாழ்ந்த ஊரான செருவு கொம்மபாளையம் குறித்தும், அங்குள்ள வம்சாவளியினர் குறித்தும், இப்போது வசித்து வருபவர்கள் குறித்தும் ஆர்வத் தோடு கேட்டறிந்தார் என ஜலந்தர் பாலகிருஷ்ணா எனும் நாவலாசிரியர் கூறுவதுண்டு.

திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை உற்சவத் தில் கலந்துகொள்ள இந்த ஊரை சேர்ந்த பல நாகஸ்வர கலைஞர்கள் செல்வது வழக்கம். அப்படியே சென்னையில் கருணாநிதியை சந்தித்து விட்டு வருவதும் வழக்கம்.

எங்களது ஊரை சேர்ந்த ஸ்டாலின் தமிழக முதல்வராகி இருப்பது எங்கள் ஊருக்கே பெருமை. எங்களது கிராம வரலாற்றில் கருணாநிதியின் குடும்பமும் இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வராகி இருப்பது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. விரைவில் நாங்கள் ஸ்டாலினை சந்திப்போம். இவ்வாறு வெங்க டேஸ்வருலு கூறினார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு ஆந்திராவின், ஓங்கோல் அருகே உள்ள செருவு கொம்மபாளையம் கிராம மக்கள் அவருக்கு பேனர் வைத்து சூடம் கொளுத்தி கொண்டாடினர்.

நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்



07 மே 2021

திமுக அமைச்சரவை (குடி ரீதியாக) பட்டியல்:-



மு.க.ஸ்டாலின், முதல்வர் (இசை வேளாளர்)

கொங்கு வேளாள கவுண்டர் :(04)

சக்கரபாணி, உணவுத்துறை
சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை
வெள்ளக்கோவில் சாமிநாதன், செய்தித்துறை
செந்தில்பாலாஜி, மின்சாரத்துறை

கள்ளர் : (03)

ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை
பி.மூர்த்தி, பத்திரப்பதிவு துறை
மகேஷ் பொய்யா மொழி, பள்ளிக்கல்வி துறை

மறவர் : (01)

தங்கம் தென்னரசு, தொழில்துறை

வன்னியர் : (03)

துரைமுருகன், நீர்வளத்துறை
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை துறை
சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

நாயுடு : (03)

வேலு, பொதுப்பணித்துறை
காந்தி, கைத்தறித்துறை
சேகர்பாபு, அறநிலையத்துறை

ரெட்டியார் : (02)

கே.என்.நேரு, நகர்புற வளர்ச்சி துறை
இராமச்சந்திரன், வருவாய்த்துறை

யாதவர் : (02)

இராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை
பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி துறை

இஸ்லாமியர் : (02)

நாசர், பால்வளத்துறை
மஸ்தான், சிறுபான்மையினர் துறை

கிறித்துவ நாடார் : (02)

கீதா ஜீவன், சமுக நலத்துறை
மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப துறை

இந்து நாடார் : (01)

அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை

செட்டியார் : (01)

இரகுபதி, சட்டத்துறை

செங்குந்தர் : (01)

தா.மோ.அன்பரசன், ஊரக தொழிற்துறை

படுகர் : (01)

இராமச்சந்திரன், வனத்துறை

அகமுடையார் : (01)

பொன்முடி, உயர்கல்வித்துறை

சைவ வேளாளர் : (01)

பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை

முத்தரையர் : (01)

மெய்யநாதன், சுற்றுச்சூழல் துறை

மீனவர் : (01)

சுப்பிரமணியன், சுகாதாரத்துறை

தேவேந்திர குல வேளாளர் :

கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை

ஆதிதிராவிடர் : (01)

கணேசன், தொழிற்துறை

அருந்ததியர் : (01)

மதிவேந்தன், சுற்றுலாத்துறை

        டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றியுள்ள பொழுதிலும், இங்குள்ளவர்களுக்கு யாரும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. டெல்டா பகுதியிலிருந்து ஓர் அமைச்சர் கூட இடம்பெறாத புறக்கணிப்புக்கு காரணம் எதுவென உறுதியாக தெரியவில்லை. மன்னார்குடி முனைவர் டி.ஆர்.பி.ராஜாவுக்கும், புதுக்கோட்டை மருத்துவர் முத்துராஜாவுக்கும், அமைச்சர் பதவி கிடைக்குமென பரவலாக பேசப்பட்ட நிலையில் அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. மேலும், டெல்டா உள்ளிட்ட தென் பகுதிகளில் அகமுடையார் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது.