14 டிசம்பர் 2017

சாதி மறுப்பு திருமணத்தின் மறுபக்கம்!

இந்த அரச கொலைக்கு எதிராக பதிவிட அவர்கள் குடும்பம் சார்ந்த குறிப்பிட்ட சாதியான கள்ளர் என்பது காரணமில்லை. பக்கத்து வீடு தீப்பற்றி கொண்டால் நம் வீடும் நாளை பற்றிக்கொள்ளும் என்ற அடிப்படையில் தான் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். இதில் அகமுடையார் மட்டுமல்ல; திருமணம் என்பதே குடும்ப கெளரவம் சார்ந்தது என்ற அடிப்படையில் வாழும் அனைத்து இனக்குழுக்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். குடும்பமென்ற உயரிய அமைப்பின் கெளரவத்தை பாதிக்கும் பிரச்சனையாக பார்க்கும் பெற்றோர்களின் ஆதரவு இல்லாத சாதி மறுப்பு திருமணங்களை எதிர்க்கும் அனைவருமே இந்த நீதிமன்ற கொலையை எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள். இதில் முக்குலமும் இல்லை; அதில் அகமுடையாரும் இல்லை.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்ற கணக்கீடெல்லாம் இதற்கு ஒத்து போகாது. அப்படி பார்த்தால், இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் வன்னியரும், நாடாரும் கூட இருக்கின்றனர். அவர்களுக்கும் கள்ளருக்கும் என்ன சதை உறவு இருக்கிறது? இதை குறிப்பிட்ட சாதியின் பிரச்சனையாகவோ, சில சாதி கூட்டமைப்புகளின் பிரச்சனையாகவோ பார்க்க வேண்டியதில்லை.
எல்லா சாதிகளிலும் பெரும்பான்மையானோர் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய சாதியை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்வதற்கே இங்கு எதிர்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதில் சாதி மட்டும் பிரச்சனை இல்லை; சாதியோடு சேர்ந்த பொருளாதார நிலையும் தான் ஒவ்வொரு திருமணங்களையும் முடிவு செய்கின்றன. இந்த விசயத்தில் சாதிக்கும் சதைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. ஏனெனில் ஒரே இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ள அதே சாதியில் காதலித்து திருமணம் செய்வதும் கூட இப்போதெல்லாம் எளிதல்ல.

13 டிசம்பர் 2017

பிளாஸ்டிக் வணிகம்!

No automatic alt text available.



பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், மரமும் - சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருக்குமென சொல்லிருக்கும் அந்த நாலாவது பாயிண்ட்டை நம்ம எடப்பாடியார் பாசறையை சேர்ந்த எவனோ ஒருத்தன் தான் சிந்திச்சிருப்பான்னு நினைக்கிறேன்.

12 டிசம்பர் 2017

கெளசல்யா!

தன்னை பின்னாலிருந்து இயக்குபவர்களை பற்றி தன் வாயாலேயே இதே ஊடகங்கள் முன்பாக பச்சை பச்சையாக கிழித்தெறியும் நாளும் தொலைவில் இல்லை. அப்போ வந்து, ”பார்த்தீங்களா வீரத்தை; இவள் எங்க குல நாச்சியார்டா!”ன்னு எவனும் கம்பு சுத்திடாதீங்க.

சாதி மறுப்பு திருமணங்கள் தோல்வியே!

Image may contain: 2 people, text



சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொண்ட 99% பெண்கள், தங்களது பெற்றோர்களின் அருமை பெருமைகளை திருமணமாகி சரியாக ஆறு மாதத்திற்குள்ளாகவே தெரிந்து கொள்கிறார்கள். எத்தனையோ பெண்கள், வெளியே சொல்ல முடியாமலும் - வேற வழியில்லாமலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறன்றனர் என்பதே எதார்த்த கள நிலவரம். இது நாமாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கை; அதனால் நடப்பவைகளை வெளியே சொன்னால் நம்மளோட முடிவை எல்லாரும் ஏளனம் செய்வார்களென்ற எண்ணத்தாலே போலியாக வாழும் பெண்களே இங்கு அதிகம். இந்த சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக இவ்வளவு பேச வேண்டியதே இல்லை. ஓர் ஆய்வுக்காக, சாதி மறுப்பு செய்த பெண்களின் தங்கைக்கோ - நெருங்கிய தோழிகளுக்கோ, தன்னைப்போலவே சாதி மறுப்பு திருமணத்தை செய்ய அறிவுரை கூற சொல்லுங்கள் பார்ப்போம்; கண்டிப்பாக ஒருபோதும் அப்படியோர் அறிவுரையை கூற மாட்டார்கள்.
குடும்ப கெளரவத்தை மீறி, தங்களின் சம்மதமின்றி சங்கரை திருமணம் செய்து கொண்டதை கேள்விபட்ட போதே கெளசல்யாவின் தந்தை இறந்திருப்பார்; இப்போது விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையானது அவரது உடலுக்கு மட்டும் தான். என்னை பொறுத்தவரை, சங்கரை இவர்கள் ஒன்றும் செய்யாமல் விட்டிருந்தாலேயே, கெளசல்யாவே கதறிக்கொண்டு இவர்களை தேடி ஆறு மாதத்திற்குள் வந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இப்போதோ, மனம்பிறழ்ந்த நிலையில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொல்ல வேண்டுமென்ற மூளை சலவை செய்யப்பட்டவராக உருவாக இவர்களே ஒருவகையில் காரணமாகி விட்டனர்.
ஐந்து வயது கூட நிரம்பாத விழுப்புரம் நந்தினியை பாலியல் கொலை செய்த ஜெயபிரகாஷிற்கு மரண தண்டனை கொடுத்தாகி விட்டதா? சமீபத்தில், கடலூர் ஆனந்தனை தீயிட்டு கொளுத்திய சாதிவெறி கும்பல்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாகி விட்டதா? சென்னையில் ஹாசினி என்ற பச்சிளங்குழந்தையை பாலியல் கொலை செய்து ஜாமீனில் வெளிவந்து, தான் பெத்தெடுத்த தாயையும் கொன்று விட்டு மும்பையில் கைதான பின், தன் தந்தையையும் கொல்லத்தான் திட்டமிட்டிருந்தேனென கெளரமாக சொன்ன ஆணவ கொலையாளி தஷ்வந்த் போன்றவர்கள் தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை காறி உமிழ சரியான நபர்கள். ஒரு கொலைக்காக, ஆறு கொலைகளை திட்டமிட்டு செய்ய தீர்ப்பு வழங்கிய சட்டமும் தீர்ப்புகளும் வாழும் இம்மண்ணில், இனி பல பாலியல் கொலைகளும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்க போகிறது... த்தூ

சட்டம் ஒரு சார்பானது!

"பொம்பள புள்ளைகள ஆசையாசையா பெத்தெடுத்து வளர்த்தவனெல்லாம், இனிமே பேசாம எவன் கூட வேணும்னாலும் கூட்டி கொடுத்துட்டு போய்டுங்க!"ன்னு இதன் மூலம் புரிஞ்சிக்கலாமா?
இப்படித்தான் பாமரனின் கேள்விகளும் இருக்கும். நான் அப்படியல்ல; ஒரு கொலைக்கு எதிர்வினையாக ஆறு பேரையல்ல, ஆயிரம் பேரை கூட கொலை செய்யலாமென்று நீதிமன்றம் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களில் நானும் ஒருவன். காலம் முழுக்க பொய்யையே முதலீடாக்கி வாதாடிய வக்கீல் திடீரென கணம் நீதிபதியாகும் உயரிய நடைமுறை பற்றி எம்.ஆர்.ராதா அன்று சொன்ன வார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும், இவ்வேளையில் நினைவுக்கு வருவது 'கடுப்பேத்துறார் மை லார்ட்' என்ற வார்த்தைகள் மட்டும் தான்!
(இதுபோன்ற எக்கசக்கமான காமெடி வார்த்தைகள் கொண்ட பல மீம்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதற்கான காரணமே கீழே படத்திலுள்ள இருவரின் மோதல்களால் தான்)

11 டிசம்பர் 2017

குறியீடு!

பார்வையின் கோணத்தை விரிவாக்கினால், பல கேள்விகளுக்கான பதில்களை இந்த கண்களே தந்து விடும்!




இன்னுமா இந்த 'கன்னித்தீவு'க்கு ஒரு முடிவு வரல?! கதையை எப்படி முடிக்கிறதுன்னு முழி பிதுங்கி, வேற வழியே இல்லாம கடைசியா 'கருடன் - பாம்பு' வரைக்கும் வந்துட்டாய்ங்க. இன்னும் என்ன மாதிரி பில்டப்பெல்லாம் கொடுத்து பீதியை கிளப்ப போறாய்ங்களோ முருகா!? என் தாத்தா காலத்தில் ஆரம்பிச்ச கதையை, என் பேரன் காலம் வரைக்கும் கொண்டு போவாய்ங்க போல; சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்கய்யா... 

10 டிசம்பர் 2017

மார்க் ஜூகர்பர்க்கின் மன்னிப்பு!

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இணைய ஊடகமான இந்த முகநூலும் கூட அவர்களின் மற்றுமோர் ஆயுதம் தான். அதையும் நமதாக்கி கொண்டதற்கு தைப்புரட்சியும் ஒரு சின்ன எடுத்துக்காட்டே! இங்கே நடப்பவையெல்லாம் நிகழ்காலமோ - எதிர்காலமோ சம்பந்தப்பட்டதல்ல; கடந்தகால தொடர்புள்ளது. அதனால் தான் இத்தனை ஆண்டுகளாக முயற்சித்தும் இவ்வினத்தை யாராலும் வெற்றிப்பெற முடியவில்லை. கடைசியில் வெளிப்படையாக யாரிடமோ மன்னிப்பெல்லாம் கேட்டு, தோல்வியை மறைமுகமாக ஒத்துக்கொண்டார் மார்க் ஜூகர்பர்க்.