12 மார்ச் 2017

அரசியல் கூத்து!




போராளிகளுக்கான அரசியல் எது?


மணிப்பூரிலுள்ள தோபால் தொகுதியில் மொத்தமாக பதிவான 27271 வாக்குகளில், நோட்டாவிற்கு கூட 143 வாக்குகள் பதிவாகிருக்கிறது. ஆனால் இரோம் ஷர்மிளா என்ற பெண் போராளிக்கு வெறும் 90 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தெரியவருவது என்னவெனில், போராளிகளுக்கு மக்களாட்சியும் கை கொடுப்பதில்லை; அம்மண் சார்ந்த மக்களும் தோள் கொடுப்பதில்லை. ஹிந்தியாவில் அரசியல் செய்து வெற்றிப்பெற வேண்டுமென்றால், ஐஸ்வர்யா தனுஷ் போன்ற சிறுபான்மையினரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் தேசியக்கட்சிகளுக்கான வாய்ப்பு:

ஜெயலலிதாவின் மரணத்தால், கருணாநிதியின் உடல்நலக்குறைவால், வைகோ உள்ளிட்ட மநகூவினர் போன்றவர்களின் செயல்பாட்டால், தமிழ்நாட்டு அரசியலும் உத்திரப்பிரதேச அரசியல் போல குழம்பிய குட்டையாக மாறி இருக்கலாம். ஆனால், அந்த குட்டையில் ஹிந்திய மீனவன் என அடையாளப்படும் யாரும் மீன் பிடிக்க முடியாது. ஏனெனில், அரசியலில் மட்டுமல்ல; அனைத்திலுமே தமிழ்நாடு, தனி நாடு தான்! இத்தனை வருட திராவிட அரசியல் தோற்கும் நேரம், அந்த இடத்தை நிரப்ப தமிழ் தேசிய அரசியலே தன்னெழுச்சியாக மேலெழும். இத்தனை ஆண்டுகால ஹிந்தியத்தின் புறக்கணிப்புகளுக்கு ஆளான இம்மண்ணில், வேறெந்த ஹிந்திய தேசியமும் அவ்வளவு எளிதாக தலையெடுக்க முடியாது.

ஆர்.கே.நகர் அரசியல்:

லெட்டர் பேடு சாதி சங்கங்களெல்லாம் இன்னும் ஓரிரு மாதத்திற்கு செழிப்பாகத்தான் இருப்பார்கள். போஸ்டர், பேட்டி, அறிக்கையென பணத்தை வாங்கிக்கொண்டு கண்ட இடங்களில்லாம் பல்லிளிப்பார்கள். அநேகமாக, அதிமுகவிலுள்ள சசி அணியின் வேட்பாளரான தினகரனுக்கு தான், பல லெட்டர் பேடு அமைப்புகள் ஆதரவு கொடுக்க கூடும். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு, ஆர்.கே.நகர் தொகுதியில் தான், புதிய ஐநூறு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும்.

11 மார்ச் 2017

சினிமாத்துறையில் திராவிடம்!







சங்கத்தின் பெயரில் மட்டும் தான், தமிழ் இருக்கிறது. வேட்பாளர்களில் விஷால், தெலுங்கன்; பிரகாஷ்ராஜ், கன்னடன்; கெளதம் வாசுதேவ் மேனன், மலையாளி.

தமிழன் ரொம்ப பாவம் :(

10 மார்ச் 2017

இசுலாம் என்பது மொழியின் அடையாளமா?




எப்படி பார்த்தாலும் தாய்மொழி தமிழ்தான்; வந்தேறிய தந்தையின் மொழி தான், உருதுவாகவோ - அரபியாகவோ இருக்க முடியும். உண்மையான வரலாற்றை தெரிந்த எவனும் மதத்தை தூக்கி வைத்து கொண்டாடவே முடியாது. இந்த மாதிரியான அரை கிறுக்குகளுக்கு, ஆப் கீ பார் குரூப் தான் லாயக்கு.

09 மார்ச் 2017

ஓர் அரசியல்வாதி உருவாகின்றான்!






கொஞ்சம் கூட கூச்சம், வெட்கம் இதெல்லாம் இருக்காதா? தன்னெழுச்சியாக இளையோர் கையிலெடுத்து வெற்றிக்கண்ட ஜல்லிக்கட்டு போரட்டத்தை, தன்னுடைய சுயலாபத்திற்காகவும், புகழ் போதைக்காகவும் சுய இன்பம் செய்து கொள்வது போல கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கும்மியடித்து விட்டால் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ஆகிவிட முடியுமா? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போல, 'ஒரு கோடி ரூபாய் தரேன்!' என வாயாலேயே வடை சுட்டுவிட்டால் மக்கள் எல்லாரும் நம்பி விடுவார்களா என்ன? சூப்பர் ஸ்டாரென அடையாளப்படும் ரஜினியையே மக்கள் அனைவரும் தற்போதைய சூழலில் ஏற்று கொண்டுள்ளனரா என்பதே கேள்விக்குறி தான். தமிழ்நாட்டை பொறுத்த வரை மக்கள் ஏற்று கொண்டுவிட்டால், மாட்டு சாணம் கூட (பிடி பிள்ளையார்) கடவுள் தான். வக்கிருந்தால், சென்னைக்காரன் என பில்டப் கொடுக்கும் லாரன்ஸ், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மக்கள் சூப்பர் ஸ்டாரென தன்னை நிரூபிக்கட்டும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மானங்கெட்ட பொழப்பு எதற்கு? த்தூ...

08 மார்ச் 2017

கடல் மேல் கசியும் ஓர் இனத்தின் குருதி!

இரு நாடுகளுக்கான கடல் எல்லையை பிரிக்கும் அளவிற்கான தொலைவே இல்லாத பகுதியில் தான் இலங்கை என்ற குட்டித்தீவு இருக்கின்றது. ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது ஏறத்தாழ 12 நாட்டிக்கல் மைல்; அதாவது 22 கி.மீ. அளவுக்கு அந்த நாட்டின் கடல் எல்லையை வகுத்து கொள்ள முடியும். அப்படி பார்த்தால் ஹிந்தியாவிற்கும், ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள கடற்தொலைவை வைத்து கணக்கிட்டால், தமிழர் பெருங்கடலிலுள்ள சில கடலோர பகுதிகளுக்கு எல்லையே பிரிக்க முடியாது. கோடிக்கரை, முத்துப்பேட்டை பக்கமெல்லாம் உள்ள கடலின் இருபக்க கரையோரங்களுக்கு இடைபட்ட தொலைவு மிகக்குறைவு. அந்த பகுதிகளுக்கெல்லாம் சர்வதேச எல்லையே பிரிக்க முடியாது.

2014ம் ஆண்டில் டிசம்பர் 26ம் தேதி எங்கள் நாகப்பட்டினமே கடலுக்குள் மூழ்கி விட்டதாக பரப்புரை செய்தது ஊடகங்களெல்லாம்; இன்றும் அதே பழைய உயிர்ப்போடு தான் நாகை உள்பட தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளெல்லாம் மீனவர்களின் ஒத்தழைப்போடு இயங்குகிறது. சுனாமியென்ற கோரத்தாண்டவத்தின் சோக சுவடுகளை கடந்த பின்னும், தமிழர்கள் மீதான சிங்கள வல்லாதிக்கத்தின் இனவெறி குறைந்தபாடில்லையென்றே தொடர்ச்சியான மீனவ படுகொலைகள் மூலமாக உணர முடிகிறது. பெளத்த-சிங்கள இனவெறியில் ஊறிப்போன ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு, ஆசையை துறக்க சொல்லி அன்பை போதித்த புத்தரின் வாக்கு இன்னும் கேட்கவே இல்லை போல. பாவம் புத்தர்; அவர் பெயரில் நடக்கும் அவலங்களை அறியாமல், கண்களை மூடி புன்னகைத்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டை தனிநாடாக தமிழ் பொறுக்கிகள் ஆளும் நாளில், மீனவன் தான் கடற்புலிகள் என்பதை அரசியல் பொறுக்கிகளும் உணரும் ஒருநாள் நிச்சயம் வரும். தான் யாருக்கு பிறந்தேனென சொல்வதில் கூட குழப்பத்தில் சிக்கிய சுப்ரமணிய சுவாமி மீதெல்லாம் கொஞ்சம் கூட மரியாதையோ, பரிதாபமோ இப்போதெல்லாம் வருவதேயில்லை. "எதிரியை தோற்கடிக்க வேண்டுமே தவிர, சாகடிப்பது வெற்றியல்ல!" என்ற எண்ணமும் கூட சு.சுவாமி விசயத்தில் சுக்குநூறாக உடைந்து போகிறது. அவர் இறந்தால் அந்நாளை கொண்டாட தமிழ்நாடே காத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். மண்டல் கமிஷனை செயல்படுத்திய வி.பி.சிங் என்ற பிராமணரில்லாதவரின் இறப்பை வரவேற்ற இன வெறியர் சோ.ராமசாமி, "ஒரு மனிதரின் இறப்பு குறித்து நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. ஆனால் இவருடைய இறப்பு நாட்டின் நலனுக்கு மிகவும் நல்லது" என துக்ளக்கில் எழுதினார். அதுபோலவே, ஓர் இனமே மகிழ்ச்சியடைய சு.சுவாமி சீக்கிரமாவே இறந்து தொலையட்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

இனிய மகளிர்நாள் வாழ்த்துகள்!

பெண்களை ஆண்கள் அடக்கி ஆள்வது போன்ற மாயையை இன்னும் எத்தனை காலத்திற்கு சொல்லிக்கொண்டே இருக்க போகிறார்களென தெரியவில்லை. யார் அந்த ஆண்கள்? என அவர்களுக்கு இன்னும் தெரியவே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பெரிய வட்டம், ஒரு புள்ளியிலிருந்தே தொடங்குவது போல, அவர்களை அடக்கும் ஆண்களும் கூட தங்கள் குடும்பத்தில் தான் இருக்கிறார்களென்ற உண்மையை ஒத்துக்கொள்ள பழகிக்கொள்வது தான் நேர்மையாகவும் இருக்க முடியும். ஆணாதிக்கம் என்ற போர்வைக்குள், ஒட்டுமொத்த ஆண்களையும் இன்னும் தூற்றிக்கொண்டிருக்காமல்ம், தன் வீட்டிலிருந்தே ஆணாதிக்கம் என்ற அடிமைதனத்தை எதிர்க்கும் சக்தியை எல்லாம்வல்ல அந்த பரம்பொருளின் அம்சமான பராசக்தி அவர்களுக்கு இந்நாளிலாவது அளிக்கட்டும்!

இனிய மகளிர்நாள் வாழ்த்துகள்!

தமிழர் கடலில் செத்து மடியும் மீனவ சமூகம்!





இரு நாடுகளுக்கான கடல் எல்லையை பிரிக்கும் அளவிற்கான தொலைவே இல்லாத பகுதியில் தான் இலங்கை என்ற குட்டித்தீவு இருக்கின்றது. ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது ஏறத்தாழ 12 நாட்டிக்கல் மைல்; அதாவது 22 கி.மீ. அளவுக்கு அந்த நாட்டின் கடல் எல்லையை வகுத்து கொள்ள முடியும். அப்படி பார்த்தால் ஹிந்தியாவிற்கும், ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள கடற்தொலைவை வைத்து கணக்கிட்டால், தமிழர் பெருங்கடலிலுள்ள சில கடலோர பகுதிகளுக்கு எல்லையே பிரிக்க முடியாது. கோடிக்கரை, முத்துப்பேட்டை பக்கமெல்லாம் உள்ள கடலின் இருபக்க கரையோரங்களுக்கு இடைபட்ட தொலைவு மிகக்குறைவு. அந்த பகுதிகளுக்கெல்லாம் சர்வதேச எல்லையே பிரிக்க முடியாது.

2014ம் ஆண்டில் டிசம்பர் 26ம் தேதி எங்கள் நாகப்பட்டினமே கடலுக்குள் மூழ்கி விட்டதாக பரப்புரை செய்தது ஊடகங்களெல்லாம்; இன்றும் அதே பழைய உயிர்ப்போடு தான் நாகை உள்பட தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளெல்லாம் மீனவர்களின் ஒத்தழைப்போடு இயங்குகிறது. சுனாமியென்ற கோரத்தாண்டவத்தின் சோக சுவடுகளை கடந்த பின்னும், தமிழர்கள் மீதான சிங்கள வல்லாதிக்கத்தின் இனவெறி குறைந்தபாடில்லையென்றே தொடர்ச்சியான மீனவ படுகொலைகள் மூலமாக உணர முடிகிறது. பெளத்த-சிங்கள இனவெறியில் ஊறிப்போன ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு, ஆசையை துறக்க சொல்லி அன்பை போதித்த புத்தரின் வாக்கு இன்னும் கேட்கவே இல்லை போல. பாவம் புத்தர்; அவர் பெயரில் நடக்கும் அவலங்களை அறியாமல், கண்களை மூடி புன்னகைத்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டை தனிநாடாக தமிழ் பொறுக்கிகள் ஆளும் நாளில், மீனவன் தான் கடற்புலிகள் என்பதை அரசியல் பொறுக்கிகளும் உணரும் ஒருநாள் நிச்சயம் வரும். தான் யாருக்கு பிறந்தேனென சொல்வதில் கூட குழப்பத்தில் சிக்கிய சுப்ரமணிய சுவாமி மீதெல்லாம் கொஞ்சம் கூட மரியாதையோ, பரிதாபமோ இப்போதெல்லாம் வருவதேயில்லை. "எதிரியை தோற்கடிக்க வேண்டுமே தவிர, சாகடிப்பது வெற்றியல்ல!" என்ற எண்ணமும் கூட சு.சுவாமி விசயத்தில் சுக்குநூறாக உடைந்து போகிறது. அவர் இறந்தால் அந்நாளை கொண்டாட தமிழ்நாடே காத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். மண்டல் கமிஷனை செயல்படுத்திய வி.பி.சிங் என்ற பிராமணரில்லாதவரின் இறப்பை வரவேற்ற இன வெறியர் சோ.ராமசாமி, "ஒரு மனிதரின் இறப்பு குறித்து நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. ஆனால் இவருடைய இறப்பு நாட்டின் நலனுக்கு மிகவும் நல்லது" என துக்ளக்கில் எழுதினார். அதுபோலவே, ஓர் இனமே மகிழ்ச்சியடைய சு.சுவாமி சீக்கிரமாவே இறந்து தொலையட்டும்.