29 பிப்ரவரி 2016

தமிழன் தொலைத்த ஆதி விளையாட்டு!

உலகின் மூத்த இனமான தமிழர்களின் வீர விளையாட்டுகளில் கபாடியும் ஒன்று. ஆனால் இன்றைக்கு ஹிந்தியர்களின் விளையாட்டாக உலகிற்கு அறியப்படுகிறது. தற்போது சில வாரங்களாக நடைபெற்று வரும் 'ப்ரோ கபாடி' என்ற லீக் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளிலும் ஹிந்தியின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. அநேகமாக பாஸ்கர் என்ற பயிற்சியாளரை தவிர மற்ற அணிகளின் பயிற்சியாளர்களோ, வீரர்களோ தமிழரே இல்லையென்றே நினைக்கிறேன். காலப்போக்கில் கபாடி என்பது ஹிந்தியத்தின் விளையாட்டாக மாறிவிடும். அப்போது நம் தமிழ்நாட்டு திராவிடர்கள் அந்த விளையாட்டை எதிர்ப்பார்கள்.

எப்படி, 'ஆசீவகம்' என்ற நம் ஆதி வழிபாட்டு ஆன்மீக முறைகளையும், 'மாயோன் - சேயோன்' என்ற நம் மொழி சார்ந்த நம்மின கடவுள்களை வந்தேறிய ஆரியர்கள் கைப்பற்றி அவர்களுடைய வழிபாட்டு தெய்வமாக்கி கொண்ட போது, அதை கைப்பற்ற வக்கில்லாமல், நாத்திகம் என்ற பெயரில் தமிழர்களின் ஆதி ஆன்மீகத்தை எதிர்க்கும் திராவிடர்கள் போல, கபாடியும் நிலையும் மாறிப்போகலாம்.

இப்படியாக ஆரிய வந்தேறிகளாலும், திராவிட துரோகிகளாலும் நம்மை விட்டு நம் பாரம்பரியக்கூறுகள் ஒவ்வொன்றாய் கூறுபோட்டு களவாடப்படுகிறது, நமக்கே தெரியாமல். இதுபோல தமிழர் இழந்ததையெல்லாம், ஒவ்வொன்றாய் மீட்டெடுப்போம்; நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்!

- இரா.ச. இமலாதித்தன்

28 பிப்ரவரி 2016

குரூப் தேர்வுகள் எழுதுவதை விட கொத்தனராகி விடலாம்!


நான் டிப்ளமோ படித்த அதே வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2004க்கு பிறகு தேர்வு எழுத இன்று சென்றிருந்தேன். வழக்கம்போல மீண்டுமொரு டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்ப பைக்கை எடுத்தேன். பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் லிப்ட் கேட்ட இன்னொருவரையும் ஏற்றி கொண்டு பயணிக்கும் போது, சில நிமிடங்கள் பேசி வந்தேன்.

'எக்ஸாம் எப்படி இருந்துச்சுண்ணே? ஈசியா?'ன்னு கேட்டாப்ள. நான் பதிலுக்கு, 'படிச்சிட்டு எழுதுற பழக்கமில்ல; ஃபார்மாலிட்டிக்கு ஏ பி சி டி யில் ஏதோ ஒன்ன டிக் பண்ணிட்டு வந்திருக்கேன்!'ன்னு சொன்னேன். கலகலப்பாக பேசிக்கொண்டே, 'என்ன பண்றீங்க?'ன்னு கேட்டேன். 'பி.எட் முடிச்சிட்டு கொத்தனார் வேலைக்கு போறேன்!'ன்னு சொன்னாப்ள. 'அப்படியா?' என ஆச்சர்யத்தோடு கேட்கையிலேயே, 'இப்போ கரஸ்ல எம்.எஸ்.சி படிச்சிக்கிட்டு இருக்கேன்ணே'ன்னு சொன்னாப்ள. 'ஏன் பி.எட் படிச்சிட்டு கொத்தனாரா இருக்கணும்? கவர்மெண்ட் ஜாப் கிடைக்கிற வரைக்கும் பிரைவேட் ஸ்கூல்ல வேலை பார்க்கலாமே?'ன்னு கேட்டேன். 'இல்லைண்ணே, அங்க 2000, 3000 ரூபாய்தான் சம்பளம் தராங்க; நான் இப்போ ஒரு நாளைக்கு 650 ரூபாய் சம்பாரிக்கிறேன். நாலு நாளு வேலைக்கு போனாலே அங்க வாங்குற சம்பளத்தை சம்பாரிச்சிடுவேன்!'னு சொன்னாப்ள.

'என்ன ஊரு?'ன்னு கேட்டேன். 'தாமரைப்புலம்!'என சொன்னாப்ள. அதுபோக, அவரின் பக்கத்து ஊரான புஷ்வனம் நண்பர் ஒருவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் சென்ற முறை செலக்ட் ஆனாராம். 'நம்மள போலயே குத்து மதிப்பாக டிக் அடிச்சு படிக்காமலே லக்குல பாஸ் ஆகி, கவர்மெண்ட் போஸ்டிங்கே வாங்கிடாரு!'ன்னு சொன்னாப்ள. 'அப்படியா! கேட்கவே ஆச்சர்யமாத்தான் இருக்கு; உங்களுக்கும் அதே லக் கிடைச்சு கண்டிப்பா போஸ்டிங் வாங்கவீங்க; வாழ்த்துகள்!'ன்னு சொல்லி கைகொடுத்து நாகை பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்தேன், முருகா!ன்னு...

- இரா.ச. இமலாதித்தன்

27 பிப்ரவரி 2016

தருமபுரி பஸ் எரிப்பு - வாக்குமூலம்!


பஸ் எரிப்பதெல்லாம் பெருமைன்னு நினைச்சு உண்மை தொண்டர்கள் ப்ளக்ஸ் அடிக்கிறாங்க. விசுவாசம் என்றாலே உண்மையாக இருப்பது தானே? அதென்ன அதிமுகவில் மட்டும் உண்மை தொண்டன்; உண்மை விசுவாசிகள்; என தனித்தனியாக போட்டுக்கொள்கிறார்கள்? ஒருவேளை மாமன் மச்சான் அண்ணன் தம்பி என யாருக்காகவாவது பொய்யான தொண்டனாகவும் கட்சியில் இருக்கிறார்களோ?!

அகமுடையாரின் கலகக்குரல்!



கலகக்குரல் தான் என்றைக்குமே அகமுடையாரின் தனித்தன்மை. இனியாவது, அரசியலில் அகமுடையாருக்கென புது விடியல் பிறக்கட்டும்!

25 பிப்ரவரி 2016

தடம் புரளும் நடிகர் கருணாஸ் அகமுடையார்!


கடந்த 21-02-2016 அன்று மதுரை, காந்தி மியூசிய அரங்கில் நடிகர் கருணாஸ் அகமுடையாரின் பிறந்தநாள் விழா, ”முக்குலத்தோர் முகவரி” என்ற இதழ் வெளியீட்டு விழா, சாதனையாளர் விருது வழங்கும் விழா என முப்பெரும்விழா முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்றது.
நடிகர் கருணாஸ் அகமுடையார், முக்குலத்தோரே இல்லை என்று சொல்லி அவர் வீட்டு முன்பாக “தமிழ்நாடு தேவர்பேரவை” என்ற அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு சிலர் கைதாகிய பழைய சம்பவங்களை நடிகர் கருணாஸ் அகமுடையார் மறந்துவிட்டதாக இந்த விழாவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும், முகநூலிலும் இந்த சர்ச்சை கள்ளர் – மறவர்களால் எழுப்பப்பட்டு, அவருடைய சாதிச்சான்றிதழை அவர் சார்ந்த அகமுடையார் சமுதாய உறவுகளான எங்களை போன்றவர்களால் வெளியிடப்பட்டு, இவருக்காக மல்லுக்கு நின்ற வரலாறையும் நடிகர் கருணாஸ் அகமுடையார் வெகு எளிதாக மறந்துவிட்டதாகவும் தெரிகிறது.

விழாவை பார்வையாளர் முதல் வரிசையிலிருந்து இயக்கிக்கொண்டிருந்த எவரும் நடிகர் கருணாஸ் அகமுடையாரை, “முக்குலத்தோரே இல்லை” என்ற பிரச்சனை வந்தபோது வாய்மூடி மௌனம் காத்தவர்கள் மட்டுமல்ல; ”அவர் அகமுடையார் என்றாலும் கூட இன்னொரு சாதியில் கல்யாணம் பண்ணியவர் தானே” என்று நடிகர் கருணாஸ் அகமுடையாரை இளக்காரம் பேசியவர்களும் தான். மேலும், கருணாஸ் அகமுடையார் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆலோசனை சொன்னவர்களின் வழிகாட்டுதலில் தான் அந்த விழா நடந்தேறியது.

இதெல்லாம் நடிகர் கருணாஸ் அகமுடையாருக்கு தெரியுமா?
நடிகர் கருணாஸ் அகமுடையார் சாதனையாளர் விருது வாங்கியவர்களில் ஒருவர், ”நடிகர் கருணாஸ் பின்னால் முக்குலமும் அணிவகுத்து வரவேண்டும் என்றும், கருணாஸ் மற்ற தலைவர்களைப்போல் போய்விடமாட்டார், நிற்பார்” என்று பேசியதை தன் பேச்சில் குறிப்பிட்டு பெருமை பேசிய கருணாஸ் அகமுடையாருக்கு, அந்த விருதுபெற்றவர் முக்குலத்தோர் அமைப்புக்கள் அத்தனையிலும் மாறி மாறி, தாவித்தாவி சலுகை அனுபவித்து விட்டு, இருந்த அமைப்பின் தலைமையை புறம்பேசித் திரிபவர் என்பதும் நடிகர் கருணாஸ் அகமுடையாருக்குத் தெரியுமா? அவர் தான், மாமன்னர் மருதுபாண்டியரை இழிவுபடுத்தி தொடர்ச்சியாக சாதியக்கூட்டங்களில் பேசிவருபவர் என்பதும் கருணாஸ் அகமுடையாருக்கு தெரியுமா?என்று கூட தெரியவில்லை.

முக்குலத்தோரில் கள்ளர் - மறவர் என தனியாக அமைப்பு நடத்தி வருபவர்களுக்கு கூட அவ்விழாவில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆனால் அகமுடையார் என அமைப்பு நடத்திய யாருக்கும் எந்தவொரு விருதும் வழங்கப்படவில்லை. ஒப்புக்காக, முக்குலத்தோர் அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் அகமுடையார்களில் இருவருக்கு பெயரளவுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆனால் மாமன்னர் மருதுபாண்டியர் பெயரிலோ, அகமுடையார் என்ற பெயரிலோ தனி அமைப்பாக நடத்திவரும் எந்தவொரு அமைப்பினைச் சேர்ந்தவர்களும் விருது வழங்கும் இப்பட்டியலில் இல்லை என்பது திட்டமிட்ட ஒதுக்கல் என்பது கருணாஸ் அகமுடையாருக்குத் தெரியுமா?

மொத்தத்தில் நடிகர் கருணாஸ் அகமுடையார் தன்னை சாதியத்தலைவனாக அடையாளப்படுத்தி முக்குலத்தோர் அரங்கில் பவனிவர பின்புலமாயிருந்த அகமுடையார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் அந்த விழா இருந்தது என்பதை இப்போதைக்கு அவர் உணர வாய்ப்பில்லை.
இப்படி தொடர்ச்ச்சியாக நடிகர் கருணாஸ் அகமுடையார் அவர்கள், ஒட்டுமொத்த அகமுடையார்களை புறக்கணித்தாலும் கூட, எந்தவொரு பிரச்சனையோ, அரசியல் சறுக்கல்களோ இக்கட்டான சூழல்களோ அவருக்கு ஏற்படும்போதெல்லாம் அகமுடையாராகிய நாங்கள் அவருக்கு தோள் கொடுப்போம். இதை அவர் இன்று மறந்திருக்கலாம்; ஒருவேளை அப்படியொரு சூழல் உருவாகும் போது, அவருக்காக செயலாற்றி நினைவூட்டுவோம் அகமுடையாராக! என்னதான் எங்களை புறக்கணித்தாலும், நடிகர் கருணாஸ் அகமுடையாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

அதிமுகவில் இருக்கும் அகமுடையாரே!


கள்ளரான சசிகலா, அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதாவோடு நெருக்கமாக இருக்கும் வரை, அதிமுகவில் ஓர் அகமுடையார் கூட தலையெடுக்க முடியாது. என்ன முக்கினாலும் ஒரு மாவட்ட செயலாளராக கூட ஓர் அகமுடையார் வர முடியாது. ஏனெனில் அகமுடையார் என்ற சாதியே ஜெயலலிதாவுக்கு தெரியுமா என தெரியாது. கள்ளர் - மறவரின் உட்பிரிவு தான் அகமுடையார் என்று கூட யாரவது சொல்லிருக்க கூடும்.

முக்குலத்தோரில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும், அதிமுக ஆதரவு அகமுடையார்களே, உங்களால் ஒரு மாவட்ட செயலாளராக கூட வரமுடியவில்லையே! அது ஏன் என சிந்தித்தது உண்டா? ஆனால் முக்குலத்தோரில் இத்தனை பேர் கள்ளரும் - மறவரும் மாவட்ட செயலாளராக இருந்தும் கூட, அந்த தகுதி ஏன் அகமுடையாருக்கு இல்லையென யோசித்தது உண்டா?

23 பிப்ரவரி 2016

என்னமோ ஏதோ!

-01-

இக்கட்டான வேளையிலும் கூட  ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் அடிமைகளை, ஜெயா நியூஸ் அல்லாத மற்ற நியூஸ் சேனல்களில் மக்கள் புலம்புவதை மட்டும் பார்க்க சொல்லுங்க. அவர்களின் வலியும், வேதனையும் புரியக்கூடும்.

-02-

மூச்சுக்கு முன்னூறு தடவ கூறு போட்டு விஜய் டிவியில வித்துக்கிட்டு இருந்த அந்த ஹைடெக் சிட்டி 'அருண் எக்ஸல்லோ' இருந்த இடத்த, இப்போ போட் ஹவுஸாவா மாத்திட்டாங்க?

-03-

கோவிலெங்கும் வாட்சப்போடு தான், அனைத்து கோவில்களிலும் தரிசனம் செய்து கொண்டிருந்தனர், இளவட்டமெல்லாம்!

-04-

கடவுள் மறுப்பாளராக காட்டிக்கொண்ட வடுகர் ஈ.வெ.ரா.வை இரட்சிக்க வந்த கடவுள் போல அர்சித்த காலமெல்லாம் தலைகீழாய் மாறிபோனது. ஆரியருக்காக ஆங்கிலேயன் சூட்டிய ஹிந்து என்ற மாயை உடைத்து வீரத்தமிழர்களாக முன்னிற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரியனுக்காக திராவிடன் என்ற போர்வையில் வடுகர்களும், திராவிடனுக்கு எதிராக ஆன்மீகம் என்ற பெயரில் பிராமணர்களும், தமிழர் முதுகில் ஏறி பயணித்த பாதையெல்லாம் முடிவுற தொடங்கி இருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் சீமானும் ஒரு காரணம் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. வெற்றியோ தோல்வியோ களத்தில் நிற்பதில் தான் அரசியல் ஆண்மை அடங்கிருக்கிறது. அந்த வகையில், சாதி மத ஆதரவின்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள்!

-05-

கடந்த நாலரை வருடங்களாக பள்ளம் படுகுழிகளோடு நாறிப்போயிருந்த சாலைகள் அனைத்தும், தேர்தலுக்காக அவசரகதியில் அரைவேக்காட்டு தனமாய் தார் பூசப்பட்டு மாறிப்போயிருக்கின்றன. கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகளும் தெளிவாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அதை உணர வக்கற்ற வாக்காளர்களான மக்கள் தான், இலவசங்களுக்காக கையேந்தி மதிமயங்கி கிடக்கின்றனர்; டாஸ்மாக், ரேசன் கடையென!

-06-

எனக்கு தெரிந்து பெரும்பாலானோர் மகாமகத்திற்காக எங்க டெல்டாவின் புண்னியபூமியான கும்பகோணத்திற்கு சென்று வந்து கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் ஆன்மீக நாட்டம் பெருக்கெடுத்து விட்டதா? என தெரியவில்லை. நானும் கூட நேற்றைக்கு முந்தைய நாள் சென்று வந்தேன்.
அண்மைகாலமாக கோவில் வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களும் பக்தி மார்க்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதையும் அறியமுடிகிறது. இந்த மண்ணின் தன்மை படிப்படியாக அதன் பூரணத்தை அனுபவிக்க தொடங்கி இருப்பதாகவே உணர்கிறேன்.

நன்றி இறைவா!


18 பிப்ரவரி 2016

பி.வி.ரமணாவை விமர்சிக்கும் உத்தமன் யார்?

அமைச்சர் பி.வி.ரமணாவும் அவரது மனைவியும் நெருக்கமாக இருக்கும் படங்களை பகிர்ந்து ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை தரம் தாழ்ந்து பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அமைச்சராக இருக்க கூடியவரும் சக மனிதன் தானே? குடும்பம், இல்லற சுகம் எதுவுமற்றவர் தான் அமைச்சராக இருக்க வேண்டுமென்ற ஏதாவது நியதி, தமிழக அரசியலில் இருக்கிறதா? ஒருவேளை பி.வி.ரமணா யாரோவொரு பெண்ணோடு உல்லாசமாகவே இருந்து விட்டு போகட்டுமே. அதனால் மற்றவர்களுக்கு என்ன இழப்பு?

ஒரு பெண்ணின் சம்மதத்தோடு உடலறவு வைத்து கொள்வதே சட்டப்படி நியாயமென உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், விபச்சாரமே அரசாங்க ஒத்துழைப்போடு இந்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போது, ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிட யாருக்குமே உரிமை இல்லை. இன்னொருவனின் படுக்கையறையை எட்டிப்பார்த்து தான் சிலரின் ஒவ்வொரு இரவும் கழிகிறது போல.

காமம் என்பது உடலியல் சார்ந்த இச்சை. அது இல்லாத மனிதனே இல்லை. அதை கடக்க தெரிந்தவன் தான் ஞானியாகிறான்; அடக்க தெரியாதவன் சம்சாரி ஆகிறான். வாய்ப்பு கிடைக்காததால் யோக்கியனாக காலம் கடத்தும் சிலரின் விமர்சனங்களால், தனி மனிதனாக பி.வி.ரமணாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மனரீதியான தாக்குதல் ஏற்படலாம். அதை தாங்கி கொள்வதற்கான வல்லமையை பி.வி.ரமணாவுக்கு இப்பிரபஞ்சம் வழங்கட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

அகமுடையார் குலத்தோன்றல் நடேச முதலியார்!



திராவிட இயக்கத்தின் முன்னோடி நிறுவனர், திரு.நடேச முதலியாரின் நினைவேந்தல் நாளுக்காக அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த "அகில இந்திய அகமுடையார் மகா சபை"க்கு எம் நன்றிகளும் - வாழ்த்துகளும்!
நீதிக்கட்சியை (ஜஸ்டிஸ் பார்டி) துவக்கிய அகமுடையார் குலத்தோன்றல் திரு.சி.நடேச முதலியாரின் நினைவு நாள் - 18 பிப்ரவரி 1937. இவரே சென்னையில் ஏழை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இலவசமாக தங்கிப் படிக்க திராவிடர் இல்லத்தை (இலவச விடுதியை) துவக்கிய பெருமைக்குரியவர்!

15 பிப்ரவரி 2016

முதலியார் அரசியலால் ஏ.சி.எஸ் ஏமாற்றப்படுவார்!

அனைத்து முதலியார் பிள்ளைமார் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், சோழிய வேளாளர் சங்க தலைவர் ஜெயபால், இம்பா நிறுவன தலைவர் ஆர்.அருணாசலம், திரைப்பட டைரக் டர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் துளுவ வேளாளர், சோழிய வேளாளர், செங்குந்தர் உள்பட பல்வேறுபிரிவுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

"தமிழக அரசியலில் ஆண்ட பரம்பரை மீண்டும் எழ வேண்டும் என்ற நோக்கத்தோடு, அனைத்து முதலியார் பிள்ளைமார் கூட்டமைப்பு சார்பில், அமைப்பு ரீதியாக ‘பேரறிஞர் அண்ணாவின் கூட்டமைப்பு’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பிற்கான 9 பேர் கொண்ட குழு விரைவில் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாநாடு நடத்த இருக்கிறோம்.இந்த புதிய குழு தேர்வு செய்யப்பட்ட பிறகு, தமிழக சட்டமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்ற வியூகம் அமைக்கப்படும். புதிய கூட்டமைப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் தழுவிய மாற்றத்தை உருவாக்கும். புதிய நீதி கட்சி வேறு, இந்த புதிய கூட்டமைப்பு என்பது வேறு."

- ஏ.சி. சண்முகம்

முக்குலத்து அரசியலில் இருந்து தெற்கத்திய அகமுடையார்கள் தனித்த அடையாளத்தோடு செயல்படுவது போலவே, முதலியார் அரசியலில் இருந்து வடக்கத்திய அகமுடையார்களும் தனித்து களமிறங்கும் இவ்வேளையில், வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதை போல ஏ.சி.எஸ் செயல்படுவது வேதனையான விசயம். ஏ.சி.எஸ் பின்னால் இன்னமும் அவரை நம்பி நிற்கும் உணர்வுள்ள அகமுடையார்களை இப்படி இழிவுபடுத்துவது பச்சை துரோகம். ஏ.சி.எஸ் போன்றோரின் இச்செயலை அனைத்து அகமுடையார் பேரினமும் கண்டிப்பார்களென நம்புகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

14 பிப்ரவரி 2016

'வேலன்'டைன்ஸ் டே வாழ்த்துகள்!

பூம்புகார் - சாயவனம் சிவாலயத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வில் ஏந்திய எம்பெருமான் திருமுருகனின் உற்சவர் சிலையை வணங்குவது இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த புண்ணியமாக கருதப்படுப்பதால்,

'வேலன்'டைன்ஸ் டே நாளான இன்று வள்ளியின் காதலன் வடி'வேலன்' உடைய தரிசனத்தை தனி ஆளாக தரிசித்து வந்தேன்.

09 பிப்ரவரி 2016

வேதாரண்யம் மகோதய அமாவசையும் - அகமுடையார் நலச்சங்கமும்!


”தை மாதம் - திங்கட்கிழமை - திருவோணம் நட்சத்திரம்” இந்த மூன்றும் கூடி 27 ஆண்டுகளுக்கு பிறகு 2016ல் 28ம் ஆண்டில் வந்து இருக்கும் இந்த அமாவசையே, மகோதய அமாவாசை என்கிறோம்.

நேற்று திருமறைக்காடு என்கிற வேதாரண்யத்தில் மகோதய அமாவாசையை முன்னிட்டு பல லட்சக்கணக்கான ஆன்மீகத்தில் நாட்டமுள்ள கேரளா - கர்நாடகா - ஆந்திரா என பல்வேறு மாவட்டங்களையும் மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். கோடிக்கரை கடலில் மூழ்கி நீத்தார் வழிபாடு செய்துவிட்டு, பிறகு ஐந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வேதாரண்யத்திலுள்ள திருமறைக்காட்டு நாதரையும் வழிபட்டு சென்றனர்.

இத்தனை லட்சம் மக்கள் கூடுங்கிற இடத்தில், ஒரு லட்சம் வாகனங்கள் நிறுத்த இடத்தை பல்வேறு இடங்களில் ஒதுக்கிருந்தது அரசாங்கம். ஆனால், அங்கு வந்தவர்களின் பசியை போக்க, கோவில் நிர்வாகமோ, அரசாங்கமோ, ஆன்மீக அமைப்புகளோ எந்தவித அன்னதான ஏற்பாடுகளை செய்யவில்லை. அப்படி இருந்தும் ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்ட ஆன்மீக பற்றாளர்களுக்கு ”வேதாரண்யம் அகமுடையார் நலச்சங்கம்” சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. பார்க்கவே ரொம்ப பெருமையா இருந்தது. மாமன்னர் மருதுபாண்டியர் படங்களோடு ப்ளக்ஸ்களும், அகமுடையார் சங்கம் என்ர பேட்ஜ் அணிந்த அனைவரும், பல்வேறு மாநிலத்தை சேர்ந்த லட்ச கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கி ஒட்டுமொத்த அகமுடையார்களுக்கும் பெருமை சேர்த்தனர்.

அறநலத்துறையை வைத்திருக்கும் அரசாங்கமே செய்ய மறந்த ஜீவகாருண்யத்தை தன்னலமின்றி செய்த, வேதாரண்யம் அகமுடையார் நலச்சங்கத்திற்கு எம் வாழ்த்துகளும் நன்றிகளும்!

- இரா.ச.இமலாதித்தன்

06 பிப்ரவரி 2016

ஸ்டிக்கர் கல்யாணம்!

ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணவே வக்கில்லாம இன்னொரு கட்சிக்காரன் கிட்ட போய், கண்ட இடத்துல ஸ்டிக்கர் ஒட்டிக்கிற அடிமைகளே உங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? 'கல்யாணம் பண்ண கூட காசு பணம் இல்ல'ன்னு அந்த அடிமைகளுக்கு, அரசியலில் அடிமையாகி போன சிலர் சப்பைக்கட்டு கட்டலாம். அந்த 'சோ கால்டு' ஏழைகளுக்கு திருமணம் செய்ய ஒரு மஞ்சள் கயிறும், கோவில் வளாகமும் போதாதா? 'காசு பணம் இல்லங்கிறதுனால தான் கல்யாணம் பண்ணி வச்சவங்க, கண்ட இடத்துல ஸ்டிக்கர் ஒட்டினா கூட சகிச்சுக்கிட்டோம்' ன்னு சொல்லக்கூடும்.
என் கேள்வி இதுதான், கல்யாணத்துகு பிறகு குடும்பம் நடத்த காசும் பணமும் தேவைப்படுமே? அப்போ எதை சகித்து கொள்வீர்கள்? ஒருவேளை "எதை" வேண்டுமானாலும் சகித்து கொள்வீர்களா?

ஒரு பெண்ணை ஒருநாளில் தாலிக்கட்டிட்டு அந்த பெண்ணுக்கு புருசனாக மாறுவது பெருமை இல்லை. கல்யாணத்துக்கு பிறகும், அந்த பெண்ணை பொருளாதாரத்துக்காக வேறு யாரிடமும் கையேந்த வைக்காத ஆண்மை இருக்கணும். அதுக்கு வக்கற்றவர்கள், கல்யாணமே பண்ணிக்காம தனிக்கட்டையாவே வாழ்ந்துட்டு போய்டணும். த்தூ...





ஸ்டிக்கர் ஒட்டின அடிமைகளை விட, ஓசியில தாலிக்கு ஓடிப்போன இந்த அடிமைகளை தான் காரி துப்பணும்...

05 பிப்ரவரி 2016

அழகிரி கனவும் கலையும் தா.கி. ஆன்மாவால்!

தன் குடும்ப அரசியலின் அதிகார போட்டியில் மேலே எழ தடையாய் இருப்பாரென பயந்து, திரு. தா.கிருட்டிணன் அகமுடையாரை நடைபயிற்சியின் போது வெட்டி கொன்ற அஞ்சாநெஞ்சன் அழகிரியின் பிறந்தநாள் அலப்பறையெல்லாம் இந்த வருடம் அவ்வளவாக ஏதுமில்லை. போக போக நேற்றைக்கு இருந்த கொஞ்சநஞ்ச விளம்பரமும் இல்லாமல் போகும். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கின்றன; ஆனாலும் அழகிரியின் ஆட்சியதிகார கனவோ ஒருபக்கம் காற்றொடு கரைந்து கொண்டிருக்கிறது, ஸ்டாலினால்.

பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி போன்ற படையும் சிதறும். அழகிரியின் கனவு கோட்டையும் தகறும். அப்போது தான் தா.கி. ஆன்மாவும் உறங்கும்.

03 பிப்ரவரி 2016

தமிழனை வஞ்சிக்கும் ஹிந்தியம்!

தேர்தல் நேரத்தில் கூட்டணி பேரத்தில் தமிழக சில்லறை கட்சிகளெல்லாம் மும்முரமாக இருக்கும் நேரத்தில், கேவலமானதொரு ஹிந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்று வெளிவந்துள்ளது. விவசாய குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற பலருக்கு இந்த தீர்ப்பு ஹிந்தியத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வெறுக்கடிக்கும்.

கேரளாவுக்கும் கர்நாடகாவுக்குமான கெயில் பைப் லைன்களை நேரடியாக அந்த இரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதியின் வழியாகவே கொண்டு சொல்வதுதான் எளிதான மற்றும் சரியான வழிமுறை. ஆனால் இவ்விரு மாநிலத்தின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, மலையாளிகளின் சூழ்ச்சியால் தேவையேயில்லாமல் தமிழக எல்லைக்குள் இந்த கெயில் பைப் லைனை பதிக்க திட்டத்தை மாற்றியமைத்தனர். இதனால் பொருட் செலவும் அதிகம்; பயண தூரமும் அதிகம். ஆனாலும் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தர மனமில்லாத காவிரியும் - பெரியார் அணையும் வைத்திருக்கும் கேரள - கர்நாடக மாநிலங்களின் விவசாய நிலமக்கள் பாதிக்காமல் இருக்க தமிழக நிலத்தை கற்பழிக்க நினைத்திருந்தனர்.

அதன்படியே ஹிந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பும் அமைந்து விட்டது.

விவசாயத்தை தமிழனிடமிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்க நினைக்கும் ஆரிய கூட்டமும், அதற்கு துணை போகும் திராவிட கூட்டமும் இங்கு அழித்தொழிக்கப்படாதவரை நாளுக்கு நாள், தமிழனின் ஒவ்வொரு பாரம்பரிய அடையாளமும் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

- இரா.ச. இமலாதித்தன்

02 பிப்ரவரி 2016

அகமுடையாரும் தமிழும்!


ஓம் என்ற பிரணவ மந்திரத்தில் அகரம் - உகரம் - மகரம் என்ற இந்த மூன்றும் அடங்கியுள்ளது.

இதே போல, சேர்வை - முதலியார் - தேவர் என்ற முப்பெரும் பட்டங்களோடு சேர்த்து பல்வேறு பட்டங்களால் அடையாளப்படும் தனிப்பெரும் தமிழ்குடியான அகமுடையார் என்பதற்குள்ளும், அகரம் - உகரம் - மகரம் அடங்கியுள்ளது.

‪#‎அகமுடையார்‬

ஆன்மீகமென்னும் எளிய வழிமுறை!

ஆன்மீகம் கடலெல்லாம் இல்லை. அதை முழுவதுமாக அறிந்து கொண்டால் ஒரு சிறிய குடம் தான்.

என் சிற்றறிவுக்கு எட்டியவரை, ஆன்மீகமும் உணவு கழிவை நீக்கும் காலைக்கடன் போலத்தான். சிலருக்கு பேப்பர் படித்தால் வரும்; சிலருக்கு சிகரெட் பிடித்தால் வரும்; சிலருக்கு தண்ணீர் குடித்தால் வரும்; சிலருக்கு வெற்றிலை பாக்கு போட்டால் வரும்; சிலருக்கு டீ_காபி குடித்தால் வரும். ஆனால் எல்லாருக்குமே வரும்; ஆன்மீகமும் அப்படித்தான்.

அதனால் ஒருவனின் ஆன்மீக அனுபவம் இன்னொருவனுக்கு ஒத்து வரும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கே அனைவரும் தனித்துவமானவர்கள். முதலில் உங்கள் பலம் - பலவீனத்தை அறியுங்கள்; அதுவே ஆன்மீகத்தின் முதல் படி. இறைவனை புகழுங்கள். வழிகாட்டிய குருவிற்கு மரியாதை மட்டும் செலுத்துங்கள்.

- இரா.ச.இமலாதித்தன்