31 அக்டோபர் 2015

கோவன் கைதை கண்டிப்போம்!



தமிழக அரசின் மதுக்கடைகளை எதிர்த்து 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் மூலமாக, “மூடு டாஸ்மாக்கை மூடு", "ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது 124 ஏ - தேசத்துரோக நடவடிக்கை, 153 - சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 - அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரிமை, பேச்சுரிமையை கூட கொடுக்க இயலாத கையாலாகாத மக்களாட்சி அரசின் வெளிப்பாடுதான் இந்த செயல். தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களை கூட ஆதரித்து பேச, எழுத, செயல்பட உரிமை கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வழங்கிய ஜனநாயகத்தின் நேர்மை இதுதானா?
எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும் என்பதை கூட ஆளும் அரசாங்கங்கள் முடிவெடுத்தால், அது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? சர்வாதிகாரத்தின் உட்சம் இது. நாட்டுப்புற பாடகர் தோழர் கோவனை அரசு விடுதலை செய்ய அனைத்து தமிழ் அமைப்புகளும் மிகப்பெரிய அளவிலான போரட்டக்களங்களை உருவாக்க வேண்டும்.

நம்மை அடிமை படுத்திய அந்நியன் அன்று, பேச்சுரிமையை அடக்க பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மீது வாய்ப்பூட்டு சட்டம் தான் போட்டான். இன்று தேவரது ஜெயந்தி நாளில் அவருக்கு போட்ட வாய்பூட்டு சட்டத்தை விட மோசமான கைதை அரங்கேற்றிய அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன? குடிபோதைக்கு அடிமையாகி தமிழன் தன் சுயத்தை இழக்க வேண்டும் என்பது தானா? தமிழனின் சிந்தனையை மழுங்கடித்தால் தானே, அந்நியர்கள் ஆட்சியில் அமர முடியுமென்ற ராஜதந்திரமா? தமிழனே போதையிலிருந்து விழித்தெழுந்து தமிழ் மண்ணை தமிழனே ஆள வழிவகை செய்!

- இரா.ச.இமலாதித்தன்

30 அக்டோபர் 2015

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

பசும்பொன் தேவரை மட்டும் தலைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் வழிகாட்டிய, ஆன்மீக தலைவராக விவேகானந்தரையும், அரசியல் தலைவராக நேதாஜியையும் ஏற்று கொள்ளுங்கள். மற்ற யாரும் உங்களுக்கு தலைவனாக இருக்க முடியாது. அக்டோபர் மாதம் மட்டும் உயிர்த்தெழும் சாதிக்காரனையெல்லாம் தலைவனென நினைக்காதீர்கள். அந்த மாதிரியான நபர்களையெல்லாம் உறவுக்காரனாகவோ, சாதிக்காரனவோ பாருங்கள், தயவு செய்து தலைவனென சொல்லாதீர்கள். அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு சட்டமன்ற தொகுதிகளை யாசகம் கேட்பவன் தலைவனில்லை.
இசுலாம் மார்க்கத்தில் இறைவன் ஒருவனே; ஆனால் இறைத்தூதர்கள் இருப்பது போல, தலைவன் ஒருவனாக பாவியுங்கள். சொந்த பலத்தோடு ஒரு தொகுதியில் சுயேட்சையாக தனித்து நின்று வெற்றி பெற வக்கிலாதவர்களின் பின்னால், மாநில - மாவட்ட - ஒன்றிய பதவிக்காக தயவு செய்து விலை போகாதீர்கள்.

 "அரசியலிலும், ஆன்மீகத்திலும் சாதி பார்க்க கூடாது" என்று சொன்ன பசும்பொன் தேவரையே, சாதி தலைவனாக்கிய பெருமை முழுக்க முழுக்க சாதி அமைப்புகளையே சாரும். "தேசியம் எனது உடல். தெய்வீகம் எனது உயிர்!" என்ற தன் சொல்லுக்கேற்ப வாழ்ந்துகாட்டிய பசும்பொன் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

மனிதர் குல மாணிக்கத்தை, மறவர் குல மாணிக்கம் என்றீர். பொதுவுடைமை சித்தாந்தவாதியை, பெண் பித்தர்களோடு ஒப்பீடு செய்தீர். விவேகமில்லாத வீரம் முரட்டுத்தனம் என்றவரை, கையில் அரிவாள் கொடுத்தீர். பெண்களின் கூந்தல் மீது கால் வைக்கமாட்டேனென்று சொன்னவரை, கால் மேல் கால் போட்டு எடிட் செய்தீர். உடல் முழுக்க திருநீர் சந்தனத்தோடு மாலை அணிவித்து இருந்தவருக்கு, கிலோ கணக்கில் தங்க சங்கிலிகளை கொடுத்தீர். ஆங்கிலேயன் அஞ்சி வாய்பூட்டு சட்டம் போட்டதை, உங்கள் வாயாலே அசிங்க படுத்தினீர். சாதி வேறுபாடின்றி தன் சொத்தான 32 கிராமங்களையே பகிர்ந்த ஈகியை, தன் வாழ்நாளில் பெண் வாசமின்றி வாழ்ந்த யோகியை, உங்கள் செயல்களாலேயே பாவி ஆக்கினீர். அந்நியரிடமிருந்து நாட்டை காக்க இராணுவத்திற்கு ஆட்களை அனுப்பியவரின் படத்தை வைத்து, தமிழர்களுக்குள் சாதி சண்டையை உருவாக்கினீர். உலக அரசியல் பேசியவரை, உள்ளூர் சாதி அரசியலுக்கு பயன்படுத்தினீர். தேசியத்தலைவனை, உங்க அரசியல் போதைக்காக சாதி தலைவனாக்கினீர். இன்னமும் என்ன செய்ய காத்திருக்கிறீர்?! உங்க அரசியல் அரிப்புக்கு தேவரை சொறியாதீர்.

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

27 அக்டோபர் 2015

நாம் தமிழரே மாற்று!



நாம் தமிழர் கட்சியிடமிருந்து அனைத்து கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களில் முதன்மையானது, சுவரொட்டி, பதாகைகளில் தான். யாருக்காக, எந்த நிகழ்வுக்காக பதாகை-சுவரொட்டி வைக்கிறோமென்ற செய்தியே வெளித்தெரியாமல், தலைமையை துதி பாடி, தலைமையின் பெயரும் படமும் மட்டுமே பெரிதாக இருக்கும். அவர் அழைக்கிறார், இவர் அழைக்கிறாரென இருக்குமே தவிர, யார் விழாவிற்கு, எந்த நிகழ்விற்கு என்பதே தெரியாமல் போய்விடும்.

முதலில், ஒரு தலைவனை ரொம்பவே மெனக்கெட்டு பெரிய பிம்பமாய் நிலை நிறுத்துகிறார்கள். பிறகு தங்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் தலைவனென்ற வெறும் பிம்பத்தோடு அருகே நின்று படம் பிடித்து படம் காட்டுகிறார்கள்.

இந்த விதத்தில் நாம் தமிழரே மாற்று.

மருது பாண்டியர் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணி மண்டபம்!

அனைத்து இணையமெங்கும் - இதயமெங்கும் - இவ்வூரெங்கும் - மாமன்னர் மருதுபாண்டியர்களாக தென்படுகின்றனர். தமிழ் தேசியத்தின் முன்னோடிகளை நினைவுபடுத்தும் அனைவருக்கும்,
தமிழ் தேசியத்திருநாள் நல் வாழ்த்துகள்!

 ~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி-முக்குளத்தில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும். அக்டோபர் மாதம் மட்டும் மாலை அணிவித்துவிட்டு போகும் அரசியல்-சாதி கட்சிகள் இதை முன்னெடுக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட விருப்பப்படும் அனைத்து உறவுகளும், கீழே உள்ள கோரிக்கையை காப்பி செய்து, http://www.cmcell.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக முதல்வர் தனிப்பிரிவுக்கு இதை அனுப்பலாம். நாம் அனுப்பும் இந்த கோரிக்கையானது அதிகமானால் மணிமண்டபத்தை அரசங்கமே விரைவாக கட்டி முடிக்க வாய்ப்பு அதிகமுள்ளது.

-------------------------------------------
வணக்கம்!
முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது சகோதரர்களின் நாட்டுப்பற்றையும், தியாகத்தையும் போற்றும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆண்டுதோறும் அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூரில் அரசுவிழா நடைபெற்று வருகிறது. இது தமிழக அரசின் முன்னெடுப்பால் தான் சாத்தியாமானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின / குடியரசு தின உரையில், மாமன்னர் மருதுசகோதரர்களின் சுதந்திர போராட்ட வீரத்தை பறைசாற்றும் வகையில் அவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டி, கூடவே அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஊதியத்தொகையை அதிகரித்து கொடுத்து வரும் தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவிக்க நாங்கள் அனைவருமே கடமைப்பட்டிருக்கின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, உத்ரகாண்ட் நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு. தருண்விஜய் அவர்கள் கூட, ”நாட்டுக்காக உயிர் நீத்த மருது சகோதரர்கள் பற்றிய வரலாற்று செய்தியை நாடு முழுவதுமுள்ள பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்படிப்பட்ட நாடுபோற்றும் சுதந்திர போராட்டவீரகளான மாமன்னர் மருதுசகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி-முக்குளம் என்ற ஊரில் அவர்களது நாட்டுப்பற்றை உலகறிய செய்யும் வகையில் அங்கே ஒரு மணிமண்டபம் கட்டி, அவர்கள் பிறந்த வீட்டை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வருக்கு, ஒட்டுமொத்த இந்திய குடிமக்களின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம். எந்தவிதமான செயற்கரிய கோரிக்கையை கூட செயல்படுத்தும் வல்லமையும், தாயுள்ளமும் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணான நரிக்குடியில் மணிமண்டபத்தை ஏற்படுத்துவார்களென நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
நன்றி.
---------------------------------

26 அக்டோபர் 2015

அதிமுகவும் - ஆட்சித்தலைவரும்!



"ஆட்சித்தலைவர்" என்ற உடன் அதையும் கட்சிப்பதவின்னு நினைச்சிட்டாய்ங்க போல... கலெக்டரையும் கட்சிக்காரனுக்கும் திறமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உண்டு.
சு.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்.,
நாகப்பட்டினம் ஆட்சியர்.

ராஜராஜசோழன் பற்றி தி தமிழ் ஹிந்து!

ராஜராஜ சோழனை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் அடையாளப்படுத்துவது பெரும் தவறு.
- தி தமிழ் இந்து.

ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளைத் தஞ்சையில் ஆண்டுதோறும் தமிழக அரசே நடத்திவருகிறது. அவ்விழாவில் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாளர்களாக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு கவிதை பாடி, பட்டிமன்றம் நடத்தி, பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். ஆனால், சில வருடங்களாக ராஜராஜ சோழன் அரசின் ஆதரவை மட்டுமின்றி மக்களின் ஆதரவையும் பெற ஆரம்பித்திருக்கிறார்.

மாநகரின் சுவர்களில் மட்டுமல்லாது, பிரதான சாலைகளிலிருந்து விலகிக் கிடக்கும் கிராமங்களிலும்கூட ராஜராஜனின் பிறந்த நாளைக் கொண்டாட அழைப்பு விடுத்து விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விளம்பரப் பணிகள் ஒரு மாத காலத்துக்கு முன்ன தாகவே தொடங்கிவிட்டன. அவ்வாறு அழைப்பு விடுப்ப வர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி சாதிய அடிப்படையில் இயங்கும் அமைப்புகள்தான்.

விபரீத நோக்கம்

இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடிச் சூழலில் வறுமைக்கோட்டைத் தொட்டும் தாண்டியும் சடுகுடு விளையாடிக்கொண்டிருக்கும் இடைநிலைச் சாதிகள், தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள வரலாற்று ஆளுமைகளைச் சொந்தம் கொண்டாட ஆரம்பித்திருக் கின்றன. தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மன்னர்களின் பெயர்களைச் சொல்லி விடுதலை உணர்வு ஊட்டப்பட்டது. ஆனால், இன்று ஒவ்வொரு சாதியும் சரித்திரத்தில் தமது கொடிவழியில் ஒரு மன்னனைத் தேடிக்கொண்டிருப்பது விடுதலை உணர்வால் மட்டுமல்ல, அதில் விபரீதமான நோக்கமும் கலந்திருக்கிறது. சாதிய அடிப்படையில் மக்களை ஒருங்கிணைத்து அரசியல் பேரங்களில் லாபம் ஈட்ட விரும்புவோரே இந்த வரலாற்று நாயகர்களை உரிமை கொண்டாட வருகிறார்கள். மேலும், தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கையுடன் இணைந்து செயல்பட முன்வரும் சாதிகளுக்கான வரலாற்றுப் பெருமைகளை ஆராய்ச்சியாளர்கள் என்ற பெயரில் இயங்கும் இந்துத்துவவாதிகளே உருவாக்கியும் கொடுக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர் கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டு, அது தடை செய்யப் படும் நிலைவரைக்கும் வந்தது. அதற்கு மாற்றாக, பாண்டி யர்களை மற்ற சாதிகளோடு இணைத்து அடையாளம் காட்டும் ஆராய்ச்சிகளும் நடந்தவண்ணமே உள்ளன. அரசாண்ட வம்சங்களின் அடிமுடி தேடும் வரிசையில் இப்போது சோழர்களின் முறை வந்திருக்கிறது.

ராஜராஜ சோழன் எந்த இனக் குழு?

ராஜராஜ சோழன் வரலாற்று உணர்வு நிரம்பப் பெற்றவன். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி செய்த ஆண்டு களையும் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற போர்களையும் கால வரிசைப்படி கல்வெட்டுகளில் குறித்துவைக்கும் வழக்கம் ராஜராஜனின் காலத்தில் இருந்தே தொடங்குகிறது.
மேலும், பாண்டிய நாட்டுப் பழைய வட்டெழுத்துப் பாணியைத் தவிர்த்துவிட்டுப் புதிய தமிழ் வடிவத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டதும் அவன் காலத்தில்தான். கல்வெட்டுகளின் மெய்ப்புகழில் போர்களைக் குறித்த ராஜராஜன், தாம் எந்த இனக் குழுவைச் சேர்ந்தவன் என்று குறிக்கவில்லை.
ராஜராஜனுக்கு மிகத் தெளிவான சமய அடையாளம் உண்டு. அவன் சைவ சமயத்தினன். எனினும், அவன் பிற சமயத்தாரையும் ஆதரித்தான். ஆனால், அவனுக்கு சாதி அடையாளம் வெளிப்படையாக இல்லை. ராஜராஜனின் பெயருக்கு முன்னால் உடையார் என்ற சிறப்புப் பெயர் இருக்கிறது.

பெயருக்குப் பின்னால் தேவர் என்ற பட்டப் பெயர் இருக்கிறது. இவை மட்டு மல்லாது, சோழ அரசர்கள் மண உறவு கொண்ட சிற்றரசர்களின் பெயர்களும் ஏதாவது ஒரு இனக் குழுவோடு தொடர்புடையதாய் இருக்கிறது. ராஜராஜனின் மனைவியர் எத்தனை பேர் என்பதும் தெளிவில்லை. கல்வெட்டுகளில் மட்டுமே 15 பெயர்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று துணிந்து ஒரு முடிவுக்கு வரலாம்.

சோழர்கள் தனித்த இனக் குழுவாகத் தம்மைச் சுருக்கிக்கொள்ளாமல், தமக்கு அருகில் இருந்த பிறரோடும் மண உறவு பூண்டு தம்மை வலுப்படுத்திக்கொண்டதாலேயே தென்னிந்தியாவில் பேரரசை உருவாக்கிக் கட்டிக் காக்க முடிந்தது. இந்த மண உறவு முறை ராஜராஜனுக்குப் பல தலைமுறைகள் முன்பே வழக்கத்துக்கு வந்துவிட்டது.

ஆதித்த சோழனின் மனைவியான சோழ மாதேவியின் அன்னை அதாவது அவனது மாமியார் காடுபட்டிகள் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. முதல் பராந்தகச் சோழனின் மகளான அநுபமா என்பவர் கொடும்பாளூர் முத்தரையரை மணந்தார். அதே கொடும்பாளூர் அரச குடும்பத்தில் பிறந்த பூதி ஆதிச்ச பிடாரி என்பவரை முதல் பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தார். அதாவது, இரண்டு குடும்பத்தாரும் பெண் கொடுத்துப் பெண் எடுத்திருக்கிறார்கள். பராந்தகன் இப்படிப் பல்லவர்களோடும் முத்தரையர்களோடும் சேரர் களோடும் கொண்ட மண உறவின் காரணமாகவே பாண்டிய மன்னனை வெற்றி கண்டு இலங்கைக்குத் துரத்தினான் என்பது வரலாறு.

சோழர்களின் வழக்கம்

தாம் வென்ற பகுதிகளில் அங்கு ஏற்கெனவே ஆண்டவர்களை அதிகாரிகளாக நியமிக்கும் வழக்கமும் சோழர்களிடம் இருந்தது. சிற்றரசுகளின் வலுவான கூட்டாட்சியாகவே சோழப் பேரரசு விளங்கியது. சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்கள் பெற்றிருந்த செல்வாக்கும் மதிப்பும் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படிக்கிற ஆரம்பநிலை வாசகர்களுக்கே தெளிவாகப் புரியும். சோழ நாட்டு எல்லைக்குள்ளேயே தனக்கென்று தனிக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்த பழுவேட்ட ரையர்கள் அரச குடும்பத்தோடு மண உறவு கொள்ளும் அளவுக்கு முன்னுரிமை பெற்றிருந்தனர். மேலும், சோழ நாட்டின் வட எல்லையை ஆண்ட சாளுக்கியர்களோடும் சோழர்கள் மண உறவு பூண்டனர். சாளுக்கியர்களுடன் கொண்ட உறவின் காரணமாகவே சோழப் பேரரசு அதன் இறுதிக் காலத்தில் மேலும் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.
வரலாற்றில் யார், எங்கு, எப்போது என்பதெல்லாம் மிகவும் மேலோட்டமான விவரங்கள். அரிச்சுவடிப் பாடம். அவற்றால் யாருக்கும் ஒருபோதும் எந்தப் பயனுமே இல்லை. ஏன் என்ற கேள்வி எழும்போதுதான் வரலாற்றுத் துறை நமக்கு மேலான பாடங்களை வழங்குகிறது. சோழர்கள் யாராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், சோழர்களால் 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஒரு பேரரசை எப்படிக் கட்டியெழுப்ப முடிந்தது?

எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறோமே, அதே வழிமுறையைப் பின்பற்றி தமது அரசாட்சி எல்லைக்குள் வாழ்ந்த அனைத்து இனக் குழுக்களோடும் ஒருங்கி ணைப்பை உண்டாக்கித்தான் இடைக்கால சோழர்களின் சாம்ராஜ்யம் எழுந்தது. அந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றியதால்தான் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கவும் முடிந்தது.

பல்லவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட கோயில் கட்டிடக் கலையை மேலும் செம்மைப்படுத்தியது, சைவத் திருமுறைகளைத் தொகுத்தது, கோயில் நிர்வாகத்தை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்தியது, நெடுங்கடலில் கலம் செலுத்தும் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தது, அதன் துணைகொண்டு வணிகத்தை மேற்கொண்டது என்ற வரலாற்றுப் பெருமைகள் எல்லாம் பல்வேறு இனக் குழுக்களின் கூட்டுறவின் அடிப்படையில் மலர்ந்ததுதான். இந்த வரலாற்றுப் பாடத்தைப் புறந்தள்ளி, ராஜராஜனின் வெற்றியை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் அடையாளப்படுத்துவது தவறு.

செல்வ புவியரசன், வழக்கறிஞர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: selvapuviyarasan@gmail.com

25 அக்டோபர் 2015

ஆளும் வர்க்கத்தை தட்டிக்கேட்போம்!


அதிகாரத்துல இருக்கிறவனெல்லாம், சாவு வீட்டுக்கு போனாலும் பிணத்துக்கு முன்னாடி நின்னு போஸ்தான் கொடுக்குறாய்ங்க; கல்யாண வீட்டு போனாலும் மாப்பிள்ளையை ஓரமா தள்ளிட்டு பொண்ணு பக்கத்துல போஸ்தான் கொடுக்குறாய்ங்க. அதையெல்லாம் விமர்சனம் பண்ணினா, தன்னோட பதவியை பயன்படுத்தி தனிநபர் தாக்குதல் செய்றாய்ங்க.
அதற்கு ஓர் உதாரணம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர் நினைவிடத்தில்... "144 தடையையும் போட்டுக்கிறீங்க, போட்டோவுக்கு போஸூம் கொடுத்துக்குறீங்க?!" என்ற இந்த ஒற்றைக்கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல வக்கில்லை என்பதுதான்.
இக்கேள்வியை துணிச்சலாக கேட்ட காரைக்குடி மாமன்னர் மருதுபாண்டியர் நலச்சங்க செயலாளரான சகோதரர். செந்தில் சேர்வைக்கு எம் நன்றியும் - வாழ்த்துகளும்!

மருதுபாண்டியருக்காக குரல் கொடுத்த தருண்விஜய் எம்.பி!



தமிழரல்லாத உத்ரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு. தருண் விஜய் அவர்கள் சொன்ன மாமன்னர் மருதுபாண்டியர்கள் பற்றிய கோரிக்கையை நினைத்து, இத்தனை வருடங்களாக வாயே திறக்காத தமிழ்நாட்டு மாநிலங்களவை - மக்களவை உறுப்பினரெல்லாம் இனி வெட்கி தலை குனிய வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழனத்தின் சார்பாக நன்றி மாண்புமிகு. தருண் விஜய்க்கு!

வேதாரண்ய கோவில் குடமுழுக்கு!

நாகை மாவட்டம் வேதாரண்யம் (திருமறைக்காடு) பெரிய கோவிலானது ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் மூலவர் மறைக்காட்டு மணாளர், இறைவி யாழைப்பழித்த மொழியாள். இக்கோவிலை அகத்தியர், விசுவாமித்திரர், வசிஷ்டர், கெளதமர், ராமர், முசுகுந்த சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் வழிபட்டு உள்ளனர்.

அகத்தியருக்கு திருமணக்காட்சி அளித்த தலம். இராவணனை கொன்ற பாவம் போக்க வழிபாடு நடத்திய தலம். ஒருமுறை கோவிலுள் அணையும் நிலையிலிருந்த விளக்கு திரியை தூண்டிவிட்ட புண்ணிய பலனால், மறுபிறவியில் அகம்படி குலத்தோன்றல் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பெடுக்க காரணமாக இருந்த தலம்.

திருவிளையாடல் புராணத்தை உருவாக்கிய பரஞ்சோதி முனிவர் அவதரித்த தலம். மரகதலிங்கமுள்ள சப்த விடங்க தலங்களில் இதுவும் ஒன்று. மேலும் நான்கு வேதங்களும் உருவான தலம் என்பதால் தான் வேதபுரீஸ்வரர் என மூலவர் அழைக்கப்படுகிறார்.

இப்படியான பலப்பெருமைகளை பெற்ற எங்கள் திருமறைக்காடு (வேதாரண்யம்) பழம்பெரும் பெரியகோவில் குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை காலை 9.05 முதல் 9.50 க்குள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை நாகப்பட்டினம் முழுதும் உள்ளூர் விடுமுறை! அருகிலுள்ள அனைத்து உறவுகளும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு பலன் பெறுங்கள்.

- இரா.ச.இமலாதித்தன்.

24 அக்டோபர் 2015

இலட்சிய நடிகருக்கு, முதலாம் ஆண்டு நினைவேந்தல்



மாமன்னர் மருதுபாண்டியரின் புகழை உலகறிய செய்யும் விதமாக, ’கவியரசர் கண்ணதாசன்’ தயாரித்த 'சிவகங்கமை சீமை' என்ற திரைக்காவியத்தில் ’முத்தழகு சேர்வை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ’இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ அவர்கள், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 214வது நினைவேந்தலில் நாளான இன்று (24.10.2015) முதலாம் ஆண்டு நினைவேந்தல்.
மேலும், அவருடைய மகன்களில் ஒருவரது பெயர் ”மருதுபாண்டியன்” என்பதும் குறிப்பிடதக்க ஒன்று.

போற்ற வேண்டிய தெய்வங்கள் மருதுபாண்டியர்!


உலகிலேயே முதன்முறையாக ஆங்கில ஏகாபத்தியத்திற்க்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டு, நேரடியாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் புரிய தமிழகத்தை அன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட அனைத்து தரப்பட்ட மன்னர்களையும், சிற்றரசர்களையும், பாளையககாரர்களையும் ஒன்றுபடுத்தி "வீரசங்கம்" என்ற அமைப்பை உருவாக்கிய சிவகெங்கை சீமையின் மன்னர்கள் மருதுசகோதரர்களை இன்றைக்கு சாதீய பின்புலத்தில் அடையாளப்பட வைத்தது வேதனையான விசயம்.

பழந்தமிழர்களின் போர்க்கருவியான பூமாரங் என்ற வளரி பயன்பாட்டை அன்றைய நாட்களில் போர்களங்களிலும், வேட்டையாடும் களங்களிலும் பயன்படுத்தியவர்களில் மிக கைத்தேர்ந்தவர்களாக மருது சகோதரர்கள் மட்டுமே விளங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும், அவர்களது ஒப்பிடமுடியாத வீரத்தை - கடின உழைப்பை - நாட்டுப்பற்றை - தன்னம்பிக்கையை - இறை பக்தியை - அனைத்துதரப்பட்ட மக்களையும் அரவணைத்து சென்ற ஆளுமையை யாராலும் மறக்கடிக்க முடியாது. உலகிலேயே வெள்ளையர்களால் தனது எதிராளியின் பச்சிளங்குழந்தைகள் உள்பட குடிவழி ஆண் சந்ததியினரையும் ஒருவர் விடாமல் ஒட்டுமொத்தமாக கொன்றொழித்த ஒரே சம்பவம் மருதுசகோதரர்களது விசயத்தில் மட்டுமே நடந்தேறியது என்பதை நினைக்கையில் மருதுசகோதரர்களின் வீரத்தையும் ஆளுமையையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

ஆட்சியை பிடிப்பதற்காக துரோகிகளின் தூண்டதலால் மெய்க்காப்பாளன் கருத்தன் மூலமாக காட்டிக்கொடுக்கப்பட்டு மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிடும்போது அவர்களுக்கு ஆதராவாக கடைசிவரை நின்ற அனைத்து தரப்பட்ட மக்களான 500க்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட அதிர்ச்சிகரமான மாபெரும் துயர சம்பவமும் இங்கேதான் அரங்கேறியது.

இன்றைய காலக்கட்டங்களில் விடுதலைப்புலிகள் உள்பட பல இராணுவ இயக்கங்கள் பயன்படுத்தி வருகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கொரில்லா போர்முறையை மிக நேர்த்தியாக அன்றைக்கே பயன்படுத்தி வெற்றிவாகை சூடிய மருதுபாண்டியர்களை வெறும் சாதீய வட்டத்தில் மட்டும் அடைக்க நினைப்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

ஆன்மீகப்பணியில் கிருத்துவம் - இசுலாம் - ஹிந்து என்ற பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களையும் திருப்பணி செய்த மண்ணுரிமை போராளிகளான வெள்ளை மருதுவும் - சின்ன மருதுவும் நாம் போற்றி வணங்க வேண்டிய காவல்தெய்வங்கள் என்பதை நினைவில் கொண்டு எந்நாளும் அவர்களது ஆளுமையையும் வீரத்தையும் விவேகத்தையும் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இன்று 214வது வீரவணக்க நினைவேந்தல் நாள்!

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்.

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?


உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.

எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!
எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி 500 க்கும் மேற்பட்ட மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 214 வது நினைவேந்தல் நாள் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!

- இரா.ச.இமலாதித்தன்

மருது பாண்டியர் நினைவேந்தல்!

உலக வரலாற்றில் சாதி மத வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்டோரை தங்களது மன்னனுக்காக தூக்கிலிடப்பட்ட ரத்த சரித்திரம் 1801ம் ஆண்டு அக்டோபர் 24...

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழ் மண்ணில் அரசாண்ட அனைத்து சிற்றரசர்களையும் சாதி மத வேற்றுமையின்றி தமிழ் இனக்குழுக்களையெல்லாம் ஐரோப்பிய வல்லாதிக்கத்திற்கு எதிராக, "வீரசங்கம்"என்ற பேரமைப்பு மூலம் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியர்கள், தமிழ்தேசியத்தின் முன்னோடி!

‪#‎மருதுபாண்டியர்‬

உலகிலேயே முதன் முறையாக ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக, திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கம் கோவில் வாசலிலும் "ஜம்புத்தீவு" போர் பிரகடனத்தை அறிவித்த முதல் சுதந்திர போரின் மாவீர்களின் வீரம் விதைக்கப்பட்ட நாள் இன்று.

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னோடியாக, "கொரில்லா போர்யுக்தி முறை"யை கையாண்டு வெற்றி கண்ட மாமன்னர்களின் மரணம் முத்தமிட்ட நாள், அக்டோபர் 24.

‪#‎மருதுபாண்டியர்‬

சிவகங்கை சமஸ்தானத்தை 1780 முதல் 1801 வரை ஆட்சி செலுத்தி தமிழ்தேசிய மாமன்னர்களான வெள்ளை மருது - சின்ன மருது இரு மருதரசர்களையும் சூழ்ச்சியின் வலைபின்னி கரடி கருத்தான் மூலமாக துரோகிகளால் காட்டிக்கொடுத்து வரலாற்றில் துயரம் விளைவித்த நாள் இன்று. அக்டோபர் 24...

‪#‎மருதுபாண்டியர்‬

அக்டோபர் 24, கி.பி.1801...
மாமன்னர் மருதுபாண்டியர்களால் எடுப்பித்த காளையார்கோவில் கோபுரங்கள் தகர்க்கப்படுமென்ற ஐரோப்பியர்களின் தந்திரத்தை முறியடித்த ஆன்மீகப்பற்றாளர்களான தீவிர முருக-சிவ பக்தர்களான மருதீசர்களின் 214 வது நினைவேந்தல் இன்று.

‪#‎மருதுபாண்டியர்‬

மறக்க முடியுமா?
மாமன்னர் மருதுபாண்டியர்களை!
அடக்க முடியுமா?
அரசாண்ட அகமுடையார்களை!
அக்டோபர் 24 - அரசு விழா, திருப்பத்தூர்.
அக்டோபர் 27 - அரசியல் விழா, காளையார்கோவில்.

‪#‎மருதுபாண்டியர்‬

தங்கள் மன்னனுக்காக தங்களது உயிரை துச்சமென நினைத்து, சாதி மத வேறுபாடின்றி தங்கள் உயிரை கொடுத்த 500க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீரமும் ஈரமும் உலகிலேயே இதுவரை நடந்ததில்லை; நடக்க போவதுமில்லை.
அது, கி.பி.1780 முதல் கி.பி.1801 வரையிலான மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆட்சிக்காலம்.

‪#‎மருதுபாண்டியர்‬





23 அக்டோபர் 2015

நாகையில்...

( நாகை புதிய பேருந்து நிலையமுள்ள அவுரித்திடலில் வைக்கப்பட்ட பதாகை)


மாமன்னர் மருதுபாண்டியர்களின் 214வது நினைவேந்தலுக்காக, நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகையில் 30 × 10 அடி அளவிலான பதாகையை வைத்தோம்.
இடம்: நாகப்பட்டினம் - புதிய பேருந்து நிலையம், அவரித்திடல்.

21 அக்டோபர் 2015

ஆயுத பூஜை நல் வாழ்த்துகள்!

லேப்டாப், டெக்ஸ்டாப், டேப்லெட், ஆண்ட்ராய்ட் - விண்டோஸ் மொபைல் என அனைத்து கீபோர்ட் மற்றும் கீபேட் லேஅவுட்கள் மூலமாக இணயத்தில் புரட்சி செய்யும் அனைத்து உறவுகளுக்கும் எம் இனிய ஆயுத பூஜை நல் வாழ்த்துகள்!

18 அக்டோபர் 2015

நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு...

கமல் - ரஜினிக்கு மாற்றாக தெளிவாக, "நடிகர் சங்கம்ன்னு இருந்தாலே போதும்!"ன்னு சொன்ன கவுண்டமணியும், "தன்னை யாரோ அடிச்சிட்டாங்க!"ன்னு 'கோ' பட அஜ்மல் மாதிரி மீடியாவுக்கு முன்பாக நடித்த விஷாலுக்கு மாற்றாக, "எந்த அசம்பாவிதமும் நடக்கல"ன்னு நேர்மையாக சொன்ன அதே அணியின் கருணாஸூம், திரையின் முன்பு காமெடியன்களாக தோன்றினாலும், திரைக்கு வெளியே பண்பட்ட பேச்சை வெளிப்படுத்தினார்கள்.

'தேவர் மகன்' நாசர், 'சண்டக்கோழி' விஷால், 'பருத்தி வீரன்' கார்த்தி, 'பசும்பொன்' பொன் வண்ணன் என திரையில் தேவர்களாக நடித்தவர்களோடு, கருணாஸ் யென்ற தேவரும் பஞ்ச பாண்டவர்கள் அணி சார்பாக வெற்றி!

நடிகர் சங்கத்தேர்தலில் உள்ள அரசியல்!

'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயரை கூட மாற்ற வக்கில்லாதவர்கள், விஷாலை தெலுங்கு ரெட்டியாரென சொல்வது சுத்த அயோக்கியத்தனம். விஷால் அணியினரான பாண்டவர் அணியில் உள்ள மற்ற நால்வரில் நாசர் - தமிழ் இசுலாமியர், கருணாஸ் - அகமுடைய தேவர், பொன் வண்ணன் - கொங்கு செட்டியார், கார்த்தி - கொங்கு வெள்ளாளர் என அனைவருமே தமிழர்கள் தானே?

சரத்குமார், ஏற்கனவே நாடார் கட்சிக்கு தலைவர். அவர் மனைவி ராதிகா கூட வீரவேசமாக 'என் கணவர் தமிழரென' உசுப்பேற்றி பேட்டி கொடுத்திருப்பதை காண முடிகிறது. ஆனால் ராதிகாவின் மற்ற இரு முன்னாள் கணவர்களும் தமிழரா என்பது ஊருக்கே தெரியும். மூன்றாவது கணவருக்காக தமிழச்சி வேடம் போடும் இந்த ராதிகா, சிங்கள-தெலுங்கு கலப்பு தானே? மேலும் சரத்குமார் அணியில் உள்ள ராதாரவியும் தெலுங்கு நாயக்கர் தானே? இரண்டு அணியிலும் தமிழ் + தெலுங்கு கூட்டணி இருக்கத்தானே செய்கிறது? அப்பறமும் ஏன் இந்த கூச்சல்?
தமிழ் நாடாரான சரத்குமாருக்கு முன்பாக இத்தனை ஆண்டுகளாக தெலுங்கு நாயக்கரான விஜயகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவராக ஏற்று கொண்ட தமிழ்தேசிய வாதிகளுக்கு, விஷால் மட்டும் ஏன் எதிரியானார்? யென்று மட்டும் புரியாத புதிராக இருக்கிறது. விஷால் மட்டும் தான் தெலுங்கரா?

தமிழ் தேவரான பாரதிராஜா அவரது படத்தில் அறிமுகபடுத்திய அனைத்து கதைநாயகிகளில் தமிழச்சி யாராவது உண்டா? பெரும்பாலும் மலையாளிகளுக்கு தானே வாய்ப்பளித்தார். அப்பறமென்ன, தமிழ் பாசத்தை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் திணிக்கிறார்? தமிழ் வெள்ளாரான இயக்குனர் சேரனும் தமிழரல்லாதவரையே அதிகம் அறிமுகம் செய்தார். அவரும் விஷாலை மொழி ரீதியாக தாக்கி பேசுகிறார் என்பது விசித்திரமாகவே இருக்கிறது.

தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக சரத்குமார் செய்த ஊழல்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இத்தனை ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்த பிறகும், தனக்கென ஒரு சாதிக்கட்சி உருவாக்கி அதன் மூலம் ச.ம.உ. ஆன பிறகும் இந்த பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லையென்றால் அது ஏனென்று யோசிக்க வேண்டிய விசயம் தானே? தே.மு.தி.க. ஆரம்பித்த உடன் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்த தெலுங்கரான விஜயகாந்த் இந்த விசயத்தில் பாராட்டுக்குரியவர்.

இதற்கிடையில், அந்தரங்க நண்பரான தமிழ் வேளாரான விஜயகுமாரோடு கூட வந்த கன்னடரான ரஜினி சொன்ன யோசனையான 'தமிழ்நாடு நடிகர் சங்க'மும், இந்தி தெலுங்கு பட உரிமைக்காகவும், ஸ்ருதி ஹாசனுக்காகவும், 'இந்திய நடிகர் சங்கம்' என்ற யோசனை சொன்ன, பாதி மலையாளியான கமல்ஹாசனும் நடிப்பை தொழிலாக செய்யும் நல்ல வியாபாரிகள் என்பதும் இன்றைக்கு பலருக்கும் புரிந்திருக்கும்.

இப்படியான சூழலில் தமிழர் சரத்குமார் செய்த தவறை தட்டிக்கேட்ட தெலுங்கர் விஷாலை பாரட்டுவதே சரியான மனுநீதி முறை. ஏனெனில், சக தமிழனின் தவறை தட்டிக்கேட்க வேறெந்த தமிழனுக்கும் திராணியில்லை என்றே இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். முதலில் ரெளத்திரம் என்ற அறச்சீற்றத்தை வளர்த்து கொண்டு, தமிழ் தேசியத்தை கையிலெடுங்கள்.

இந்த நடிகர் சங்க தேர்தலில் யார் வென்றாலும் எங்களை போல் இணையத்தில் செயல்படுவர்களால், சினிமா காரர்களுக்கு பாதிப்புதான் அதிகம். ஏனெனில் டோரண்ட்ல படத்தை டவுன்லோட் பண்ணி விமர்சனம் எழுதியே படத்தை காலி பண்ணுவோம். யாரா இருந்தாலும் நீங்க ஜெயிச்சு வாங்க. அப்பறமா, வச்சு செய்யுறோம்!

- இரா.ச.இமலாதித்தன்.

16 அக்டோபர் 2015

அக்டோபர் 24ம் தேதியே மருதுபாண்டியர்களின் நினைவேந்தல்!

மாமன்னர் மருதுபாண்டியரின் நினைவேந்தல் நிகழ்வை அக்டோபர் 24ம் தேதியையும் முன்னிலை படுத்தினால் நன்றாக இருக்கும். மேலும், வெறும் உணர்ச்சி பூர்வ வாசகங்களை மட்டும் பயன்படுத்தாமல், அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் ஒன்றிணைத்து மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கூட்டணியான வீரசங்கம் பற்றியும் பதாகை வாயிலாக பரப்புங்கள். தமிழரின் பாரம்பரிய போர் மரபான வளரி வீச்சு பற்றியும், ஜம்புதீவு பிரகடனம் பற்றியும் பதிவிடுங்கள். கொரில்லா போர்முறையை முதன்முதலாக பயன்படுத்திய போர் தந்திர நுட்பங்களையும், 1780 முதல் 1801 வரையிலான தங்களது ஆட்சிக்காலத்தில் மத வேறுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் செய்த திருப்பணிகளை பற்றியும் வெளியுலகிற்கு சொல்லுங்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

14 அக்டோபர் 2015

குடியையே கெடுத்து, குடியை தடுத்து!



குடியை வைத்து குடியையே கெடுப்பதும், அந்த குடியை தடுக்க விருதையும் கொடுப்பதும் தான், நாடுபோற்றும் நான்கு ஆண்டு சாதனை!

07 அக்டோபர் 2015

மன்னர் பரம்பரையென்ற மாயைக்குள் தமிழ் சாதிகள்!

தன்னை பெற்றெடுத்த தாய் தகப்பனை பெற்றெடுத்த தாய் வழி பாட்டன் உறவை கூட முழுமையாக தெரிந்து வைத்து கொள்ளாத சமூகத்திடம் வரலாறு பற்றிய அறிவை எதிர்பார்ப்பது கடினமான விசயம்.
குறிப்பிடதக்க சில சாதிகளை சார்ந்தவனோ, குறிப்பிட்ட சில பட்ட பெயர்களை உடையவனோ ஒருசில பகுதிகளை உள்ளடக்கிய சிற்றரசை ஆண்ட மன்னனாக இருந்திருக்கலாம். ஆனால், அதே சாதியில் வறுமையில் வாடியவர்கள், அந்த மன்னனின் ஆட்சிக்காலத்திலேயே வாழ்ந்திருக்க கூடும். இன்றைய காலக்கட்டத்தில், ஒரே பட்டமானது ஏழெட்டு சாதிகளுக்கு மேலாக இருப்பதை பார்க்கிறோம்.
கேட்டால் மன்னர் பரம்பரை, மயிரு பரம்பரைன்னு உளற ஆரம்பிச்சிடுவாய்ங்க... முடிந்தால், சொந்த சாதி சனத்துக்கு, இரத்த சொந்தங்களான பங்காளி குடும்பத்தில் கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தும் யாருக்காவது பொருளாதார உதவி செய்து மேலோக்கி வளர தோள் கொடுக்க முன் வரணும். அதெல்லாம் விட்டுட்டு, ஆண்ட பரம்பரைன்னு வெற்று கூச்சல் எதுக்கு? எவனாக இருந்தாலும், பிசி, எம்பிசி, எஸ்சின்னு எதாவதொரு கோட்டாவுல தானே அரசாங்கத்திடம் கையேந்தி வாழ்க்கையை நடத்துறீங்க. அப்பறம் என்ன டேஷ்க்கு அரச பரம்பரையென்ற அலப்பறையெல்லாம்... த்தூ.

- இரா.ச.இமலாதித்தன்

04 அக்டோபர் 2015

வாழ்த்துகள் இளையதளபதி விஜய்!

ஏறக்குறைய அனைத்து அஜித் ரசிகர்களும், தங்களால் முடிந்த அளவுக்கு எவ்வளவு கீழ்த்தரமாக வன்மத்தை வார்த்தைகளால் விமர்சனம் என்ற பெயரில் எழுதமுடியுமோ, அந்தளவுக்கு எழுதி விட்டார்கள். விஜய் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. ஆனால் ஒருவன் எப்போது தடுமாறி கீழே விழுவான்?என காத்திருந்து மேலேறி மிதிக்கும் கேவலமான செயல்களை வெறும் லைக்குக்காகவும், தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டவும் முயற்சிப்பதுதான், 'நடிகனின் ரசிகனல்ல; நல்ல மனிதனின் ரசிக'னென சொல்லிக்கொள்ளும் நபர்களின் செயலா?

ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றால் அது இயக்குனரின் திறமையென புகழும் அறிவுஜீவிகள், ஒருவேளை ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால் அது நடிகனை மட்டும் குறை கூறுவது எந்தவகையிலும் சரியென படவில்லை. பல அவமானங்களையும், பலரது விமர்சனங்களையும் தாண்டித்தான் இந்த உயரிய உட்ச நிலையை விஜய் அடைந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மீண்டும், தொடர்ச்சியாக மெகாஹிட் திரைப்படங்களை கொடுக்க, ரசிகனாக என் வாழ்த்துகள், இளைய தளபதி!

- இரா.ச.இமலாதித்தன்.

03 அக்டோபர் 2015

வரலாறு எனும் மாயை!

வரலாறு என்ற பெயரில் தங்களது பெயர்களின் மீதுள்ள இழிவை அழித்தொழிக்க புதுப்புது கதைகளை மேலோட்டமாக சொல்லி ஒருசில இனக்குழுக்கள் ஏதேதோ எழுதிக்கொண்டு பொய்யான பரப்புரை மாறிமாறி செய்து வருகிறது. அதையெல்லாம், தன் வரலாறு என்னவென்றே முழுமையாக தெரியாத ஒரு கூட்டம், தன் வரலாறும் களவு போகிறது என்பதை தெரியாமலே ஆமாமென தலையாட்டி கொண்டிருக்கிறது; தன் தலைக்குள் உள்ள அறிவை கொஞ்சம் கூட வரலாற்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யாமலேயே!