21 நவம்பர் 2013

மூவேந்தரும் அகமுடையாரே!


மூவேந்தர்ன்னு சொல்லிக்கொள்ளும் தகுதி, மற்ற சாதிகளை விட அகமுடையாருக்கு அதிகம் உண்டு. ஏனெனில், ஓவ்வொரு நாட்டிலும் படையமைத்து அரசாண்ட இனத்தின் வம்சவாளிகள் அந்தெந்த ஊரிலேயே பல அடையாளங்களை மறைத்தும் தொலைத்தும் வாழ்வதுதான் நியதி. அப்படிப்பார்த்தால், சோழநாடு - பாண்டிய நாடு - சேரகொங்கு நாடு என எல்லா நாட்டிலும் (ஊரு விட்டு ஊரு இடம்பெயராமல்) பூர்வக்குடியாய் - சமூகத்தில் மேல்தட்டு மக்களாய் - வீரம்செறிந்த மக்களாய் - மற்றவர்கள் மதிக்கும்படி அந்தஸ்துமிக்க பெரிய கூட்டமாய், அப்போது முதல் இந்நாள் வரை இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பது அகமுடையார் இனம் மட்டுமே. தெற்கு மட்டுமல்ல, வடக்கு - மேற்கு - கிழக்கு - நடு யென்று எல்லா திசையிலும் அகமுடையார் மட்டுமே பூர்வக்குடி மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் கூட சிந்திக்க கூடிய விசயமே...
(பிரபு - பாரதி - குமார் என்கவுண்டர் கொலையை எதிர்த்து) அகமுடையார்களுக்கு என்று தனி அமைப்பு பேரவை இருக்கிறதே அவர்கள் போராடினார்களா? யென்று முக்குலத்து உறவு ஒருவர் கேட்கிறார்.

ஓ! அப்போ அகமுடையாருக்கு அமைப்பு இருந்தால், அகமுடையார் மட்டும் தான் போரடணுமா என்ன? அப்பறம் ஏன் முக்குலத்து அமைப்புகள் எல்லாம்? செத்தவன் அகமுடையனாக இருந்தால், அகமுடையார் அமைப்பு மட்டும்தான் போராடணும்ன்னு நினைக்கிறப்பவே உங்க நோக்கம் புரியுது.
காளையார்கோவிலில் நடைப்பெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலில் நடைப்பெற்ற கசப்பான ஒரு நிகழ்வால், பிரபு - பாரதி - குமார் யென்ற மூன்று இளைஞர்களை காவல்துறையே என்கவுண்டர் மூலம் கொலை செய்ததை எதிர்த்து இதுவரை யாராவது குரல் கொடுத்திருக்கிறார்களா? அப்போ, உனக்கு வந்தால் மட்டும்தான் ரத்தம்... எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. நல்லாருக்கு உங்க நியாயம். அகமுடையார் என்னைக்குமே ஒன்றாக இணைந்துவிட கூடாதுன்னு முனைப்பில் இருக்கும் எவனுக்கும் உட்பிரிவுன்னு பேச தகுதியே கிடையாது. இந்நேரம் அகமுடையாருக்குன்னு ஒரு தனிப்பெரும் அமைப்பு இருந்திருந்தால், அந்த மூவரின் குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடாவது கிடைத்திருக்கும். அந்த என்கவுண்டரை நடத்திய மறவரான வெள்ளைத்துரையை பற்றி பேசவிரும்பவில்லை; ஏனெனில், வெள்ளைத்துரை வெறும் அம்புதான் என்பதால். இங்க அகமுடையார் மட்டும்தான் உட்பிரிவு பார்க்கிறது போல, மாயையை உருவாக்க முயலும் எல்லோருக்குள்ளும் உட்பிரிவு பாசம் இருக்கத்தான் செய்கிறது. தேவைப்பட்டால், அதை நிரூபிக்கவும் முடியும். தேவையில்லாமல், மேலும் மேலும் எங்களை பேச வைக்க வேண்டாம். நீங்க என்ன எங்கள ஒதுக்குறது? எங்க ஊருல டெல்டா மாவட்டத்துல தேவன்னா யாருன்னு விசாரிச்சா தெரியும் அது அகமுடையார் தான்னு.

வருகின்ற 30ம் தேதி பிரபு - பாரதி கொல்லப்பட்ட தினம்
மூன்று கொலைகளைப் பற்றி மூச்சு பேச்சு இல்லாமல் முடங்கி கிடந்த கூட்டமெல்லாம், இன்றைக்கு மூன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது. மூன்று மூன்றுன்னு பேசுற எவனாவது இதுவரைக்கும் அந்த கொலைகளுக்காக போராடி இருக்கானா? இல்லையே! ஏன்னா, அவனுக்கு இவன் கூட்டம் காமிக்க மட்டும்தான் தேவைப்படுறான். அந்த மூன்று கொலைகளுக்காக போராட கூட ஒருத்தன் வரமாட்றான். ஒருவேளை அப்படி அந்த மூன்று பேருக்காக சம்பந்தப்பட்ட ஒருத்தனான இவன் போராட முன்வந்தாலும் அவனை பிரிவினைவாதி யென்ற பட்டம் கொடுத்து ஒதுக்கிவிட நினைக்கிறதே ஒரு கூட்டம். அந்த மூன்று கொலைகளுக்கு எதிராக எந்த முன்முயற்சியும் எடுக்காத மற்ற இரண்டும், பிரிவினை பற்றி பேச அறுகதை அற்ற ஜெனமங்களே!


தன்னை தரக்குறைவாக பேசி கேவலப்படுத்த நினைக்கின்ற மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை விட, தன்னைப்பற்றிய உயர்வான விசயங்களை முன்வைத்து பேசுவதுதான் நம்மை பக்குவப்படுத்தும். அப்போது எதிரிகளைவிட துரோகிகளுக்கு தான் அதிகமாக கோபம் வரும்! தனித்துவமானவர்களை என்றைக்குமே தனிமைப்படுத்த முடியாது!

நான் அகமுடையார்ன்னு சொல்வதலோ, அகமுடையார் பற்றிய பதிவை பதிவதலோ, உங்களுக்குள் ஏற்படும் மனச்சங்கடங்களை பற்றி எனக்கு கவலையில்லை. மரியாதைக் குறைவான சில பதிவுகளால் அகமுடையார்களை கேவலப்படுத்த முயலும் துரோகிகளுக்கு, பதிலுக்கு பதில் கேவலமாக எழுத எனக்கு மனமில்லை. ஆனால், அகமுடையார் சார்ந்த விசயங்களையும், எனக்கு தெரிந்தவற்றையும் இங்கே நேரம் கிடைக்கும் போது பகிரலாமென்று இருக்கிறேன். அகமுடையார் பற்றிய பதிவுகளையே சகித்துக்கொள்ள முடியாதவன் முக்குலத்தோர் என்று சொல்லவே அறுகதை அற்றவன்! உட்பிரிவுன்னு ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு தனிமைப்படுத்த முயலும் சில சுயசாதிப்பிரிவு பற்றுள்ளவர்களையும் பற்றி எனக்கு கவலையில்லை.

ஏனெனில், நான் அகமுடையாராக இருப்பதால் தான், தேவனாகவும் இருக்க முடிகிறது. இதை புரிந்துகொள்ளாத குறைகுடமெல்லாம், உட்பிரிவுயென்று சொல்லிக்கொண்டு போகலாம். எதுவுமிங்கே நிரந்தரமில்லை.

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!

இன்னைக்கு பலபேரு இங்கே இணையத்தில் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை பிரிவினைவாதியென்று சொல்லி மகிழ்ச்சியடைகிறார்கள். களத்திலும் சரி, இணையத்திலும் சரி நான் செயல்பாட்டில் இருந்தவன்; இருக்கின்றவன் தான். அதைப்பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளவோ, மிகைப்படுத்தி பகிரவோ எனக்கு விருப்பமில்லை. ஆனால் இன்று இதை சொல்வதால் எனக்கு யாரும் விருது கொடுக்க போவதில்லை. ஆனால், என் பங்களிப்பை பற்றி இங்கே தெளிவாக்க விரும்புகிறேன்.

மேலும் இங்கு சிலர்... போற இடங்களையெல்லாம் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து கொண்டு செயல்வீரர்கள் போல காட்டிக்கொள்ள முனைகிறார்கள்.அவர்களை போல பெருமை பட்டுக்கொள்ள முடியாவிட்டாலும், என் பங்குக்கு இணையத்தில் இதுவரை நான் செய்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

01. இணையத்த்தை பொருத்தவரை ஆரம்பத்தில் தேவரினத்தை அடையாளப்படுத்திய ஒரே இணையம்: www.thevar.co.in என்பதே ஆகும். அப்போது அந்த இணையதளத்தில் கட்டுரை எழுதி பரமரித்தவர்களான திரு வெயிலணன், திரு. ஜெ.முத்துராமலிங்கம், திரு.முகுந்தன் உள்பட அனைவருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றபோதும், சிறியவனான எனக்கும் அவர்களுக்கு இணையான இடமளித்து என்னையும் எழுதவும் - அந்த இணைய தளத்தை பராமரிக்கவும் முழுசுதந்திரம் அளித்தனர். அப்போது முதல் இணைய செயல்பாட்டில் இருக்கின்றவன்.

02. இப்போதுள்ள ஃபேஸ்புக் - ட்விட்டர் போன்ற சமூகதளங்களுக்கு முன்னோடியாக இருந்த ஆர்குட் - கூகிள் பஸ் என்ற சமூக வலைதளங்களில் தேவரினம் சார்பாகவும், தேவரினத்திற்கு எதிரான ஆர்குட் கம்யூனிட்டிகளில் நடக்கும் விவாதங்களிலும் இரவு பகல் பாராமல் விவாதம் செய்தவன். அப்போது மிகபிரபலாக இருந்த வால்பையன் - ஆல் இன் ஆல் அழகுராஜா போன்றவர்களோடு தொலைபேசியின் வாயிலாக நேரடியாக தனி ஆளாக சண்டையிட்டவன்.

03. ஆர்குட் குழுமத்தில் அப்போதே 4000க்கும் மேற்பட்ட உறவுகளை உள்டக்கிய தேவர் குழும விவாதங்களில் பங்கெடுத்தவன். அந்த குழும உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு, 2009ம் ஆண்டு வாக்கிலேயே உடையாளூர் ராஜராஜ சோழன் சமாதிக்கு சென்று வணங்கி வந்த அணியில் இடம்பெற்று அதை இணையத்திலும் - யூட்யூபிலும் பகிர்ந்தவன். அப்போது இங்குள்ள பலருக்கு ராஜராஜன் யாரென்றும் தெரியாது. அவரது சமாதி எங்கிருக்கிறது என்பதும் தெரியாது.

04. பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால், www.thevar.co.in யென்ற இணையமும் அதிலுள்ள பதிவுகளும் முற்றிலுமாக இழந்தபின்னால், பேக்-அப் தேவைக்காக அனைத்து முக்கிய பதிவுகளையும் www.thevarthalam.blogspot.com வலைதளத்தில் சேகரித்து வைத்தவன். அந்த பதிவுகளே மீண்டுமொரு இணையதளத்தை உருவாக்கும்போது தேவைப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

05. அதன் பிறகு, திரு குவைத் பாண்டியன் பங்காளியின் பண உதவியோடு www.thevarthalam.com இந்த இணையதளத்தை உருவாக்க காரணமாக இருந்தவன். இன்று தேவருக்கான ஒரே இணையதளமாக இருக்கக்கூடிய தேவர்தளத்தின் பெயரை வைத்தவன். சிலர் மீதான மனக்கசப்பால் இப்போது தேவர்தளத்தின் செயல்பாட்டில் இல்லாதவன்.

06. தமிழ் விக்கிபீடியாவில் கள்ளர் - மறவர் களுக்கு தனித்தனி பக்கம் இருந்தபோதும், அகமுடையார்களுக்கு யென்று எந்த பக்கமும் அதுவரை இருக்கவே இல்லை என்ற ஆதங்கத்தோடு தனியாக http://ta.wikipedia.org/wiki/அகமுடையார் யென்ற பக்கத்தை உருவாக்கியவன். இன்றைக்கு அகமுடையாருக்கு என்று ஒரு பக்கம் இருக்கிறதென்றால் அதை உருவாக்கியவன் என்ற ஒற்றை சந்தோசமே எனக்கு போதும். ஏனெனில், அப்போதும் கள்ளருக்கும் - மறவருக்கும் தனித்தனி விக்கிப்பீடியா பக்கம் இருந்தது. ஆனால், அகமுடையாருக்கு யென்று ஒருபக்கத்தை உருவாக்க கூட மற்ற யாருக்கும் மனமில்லை.

07.. ஃபேஸ்புக்கில் Thevar-Mukkulathor யென்ற பக்கத்தை முதலில் உருவாக்கியவன். இதை தவிர இன்றும் ஃபேஸ்புக்கில் பல உறுப்பினர்களை கொண்ட பல ஃபேஸ்புக் ஃபேஜ்களான முகநூல் பக்கங்களை உருவாக்கி அதை செயல்பாட்டிலும் வைத்திருப்பவன்.

08. தேவர் ஜெயந்தி தடையை உடைப்போம் , திராவிடத்தை ஒழிப்போம் என்ற ஃபேஸ்புக் ஃபேஜ்களை உருவாக்கியவன். அந்த பக்கங்களை உருவாக்கியதோடு நின்றுவிடாமல், அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பல உறவுகளை அட்மினாக நியமித்தி அதிக உயிரோட்டத்துடன் தடைப்பற்றிய செய்திகளை பகிர காரணமாக இருந்தவன்.

09. இதைத்தவிர www.nochchi.com யென்ற இணையத்தை உருவாக்கி, அதை தலித் அல்லாத தமிழ்சமுதாயத்திற்கான பொதுதளமாக பாவிக்க முயற்சி எடுத்து சில கட்டுரைகளை எழுதியவன்.

10. இணையத்தில் நுழைந்த நாள் முதல் வினவு - கீற்று உள்ளிட்ட பல தலித் சார்புள்ள இணையதளங்களில், தேவரினத்திற்கு எதிரான பதிவுகளுக்கு கண்டனத்தையும், தேவரினம் சார்பான என்னாலான கருத்துகளை பகிர்ந்து கொண்டிருப்பவன்.

11. இதைத்தவிர களப்பணியை விவரித்து சொல்ல விரும்பவில்லை. திருக்காட்டுப்பள்ளியில் - ஒன்பத்துவேலி கிராமத்தில் எரிக்கப்பட்ட தேவரின (கள்ளர்) வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் சொல்லப்போனவன். தடைப்போட பட்ட இந்த தேவர்ஜெயந்தியை பசும்பொன்னில் கொண்டாட நினைத்து ஸ்ரீதேவரை வணங்கி வந்தவன். என் உணர்வின் அடிப்படையில் அங்கே பசும்பொன்னில் களமாடிய செய்திகளை மற்றவர்கள் போல போட்டோ எடுத்து போட்டு பெருமைத்தேடிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், எனது உணர்வை என்னோடு பசும்பொன்னுக்கு வந்திருந்த முரளிநடராஜன், கணேசமூர்த்தி, ஜாக் துரைப்பாண்டியன் போன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.

12. பொதுவில் சொல்ல முடியாத இன்னும் பல விசயங்களை இணையத்திலும், வெளியிலும் களப்பணி ஆற்றிய என்னை, சிலர் திரைமறைவு வேலைகள் செய்து உட்பிரிவுவாதி யென்று பட்டம் கொடுக்கின்றனர். ஒரு வருடத்திற்கு உள்ளாக இணையத்தில் செயல்படும் பலர் போராளியாக உருவெடுத்துவிட்டதால், அவர்களுக்கு இந்த இமலாதித்தன் ஏளனமாக தெரியலாம். உட்பிரிவு பாசத்தோடு தனித்தனியாக குருப்பாக பேசி முடிவெடுத்து இணையத்தில் செயல்படும் அனைவரை பற்றியும் எனக்கு தெரியும். அவர்களால், நான் உட்பிரிவுவாதி என்று அவதூறு பரப்பப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. அவர்களை போன்ற இரட்டைவேடம் போடும் விலாங்கு மீன்களுக்காக என்றும் என் சுயத்தை இழக்கமாட்டேன்.

நான் முதலில் அகமுடையார். அதன்பிறகு தேவர். ஏனெனில், நான் அகமுடையாராக இருக்க முடிவாதலேயே தேவராகவும் இருக்க முடிகிறது.

- இரா.ச.இமலாதித்தன்.

19 நவம்பர் 2013

அகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல!

ஒரு வாரமாக உட்பிரிவு உட்பிரிவுன்னு பேசிக்கிட்டு இருக்காய்ங்க. என்னிலிருந்தே இதைப்பற்றிய ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உட்பிரிவு என்பது இல்லவே இல்லை. இந்த உட்பிரிவு என்ற சொல்லாடலை யார் உருவாக்கியது என்று தெரியவில்லை. மேலும், இந்த உட்பிரிவு என்ற சொல்லுக்கான அர்த்தம் நூறு சதவீதம் பொருத்தமாக இருக்குமா என்பது சந்தேகமே.

ஒவ்வொரு இனக்குழுக்களுக்கென்று தனித்தனியான ஒரு பாரம்பரியமும் - அடையாளங்களும் - சடங்கு முறைகளும் இருந்தபோதிலும், போர்க்குடி என்ற ஒற்றை அடையாளமே இம்மூவரையும் இணைக்க மூலக்காரணமாக இருக்கிறது.

முதலில் அகமுடையார் என்ற பற்று எனக்கு இருக்கும் பட்சத்தில் தான், அடுத்து முக்குலத்தோர் என்ற வட்டத்திற்குள்ளாகவே என்னால் வர முடியும். மேலும், தன் சுயசாதி மீதான பற்று இல்லாத ஒருவனால், மூன்று சாதிகளின் கூட்டுக்குள் எப்படி நுழைய முடியும்? ஏனெனில் சுயத்தை இழந்து இன்னொன்றை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விசயமல்ல. மேலும், தன் சுயத்தை இழந்து, இன்னொரு அடையாளத்தை பெறுவது ஒரு நிரந்தரமான அடையாளத்தை தரப்போவதில்லை. இம்மாதரியான பாரம்பரிய அடையாளங்களை இழப்பதும் கூட கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடக் கூடியதும் இல்லை. அப்படி நடக்க இன்னும் காலம் பிடிக்கலாம். அதுவரையிலும், தன் சுயத்தை இழக்காமல், ஒன்றிணைந்து செயல்படலாம். இதுவேதான் மற்ற இரு பிரிவுகளுக்கும் பொருந்தும்.

தன்னை உயர்த்தி பிடித்து, மற்ற இருவரும் எங்களுக்கு கீழேதானென்றும், நாங்கள் மற்ற இருவரையும் விட சிறந்தவர்களென்றும் சொல்வதும் தான் முதல் பிரச்சனையை உருவாக்குகிறது. நான் என்னதான் தேவன் தேவன்னு பேசினாலும், பலபேருக்கு நான் எப்போதுமே அகமுடையானாக மட்டுமே தெரிகிறேன். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், நான் முதலில் அகமுடையானாக பற்றோடு இருக்க முடிந்தால்தான், அடுத்து முக்குலத்தவனாகவும் மாறமுடியும் என்பது என் தீர்க்கமான முடிவு.

இங்கே பலர் ஒருதாய் பிள்ளையென்று ஒரு உதாரணத்தை சொல்கிறார்கள். அதைப்போன்ற கற்பனை கதைகளுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லையென்றே நினைக்கிறேன். ஏனெனில், முக்குலம் அனைவரும் ஒரே குடும்பமாக வாழலாம்; அதிலும் கூட்டு குடும்பமாகவே வாழலாம். அப்போதும் கூட, முதலில் எனக்கு என்னுடைய தந்தை தான் முக்கியம். அதன் பிறகுதான் சித்தப்பா - பெரியப்பா எல்லோரும் வருவார்கள். அப்படிப்பட்ட ஒற்றுமையே இப்போதைய தேவையாக இருக்கிறது. உள்ளொன்று வைத்து புறவொன்று வைத்து செயல்படும் போலியான ஒற்றுமையை விட இப்படி வெளிப்படையாக ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் செயல்படுவதுதான் நலமாக இருக்கக்கூடும். எனவே நான் முதலில் அகமுடையான். அதன் பிறகே மற்ற இத்யாதிகள் எல்லாம்.

இதை இங்கே பொதுவில் சொல்வதால், நான் பிரிவினைவாதி ஆக்கப்படலாம். மனதுக்குள்ளாக வைத்து மறைமுகமாக திரைமறைவு வேலைகளை செய்யும் கூட்டத்தை விட, அகத்தில் உள்ளதை அப்படியே புறத்திலும் செயல்வடிவம் காட்டுவதால் எனக்குள் எந்தவித குற்றணர்ச்சியும் எப்போதும் இருக்க போவதில்லை.

மற்றப்படி உங்களது புறக்கணிப்புகளும் - வசைச்சொற்களும் எனக்கு புதிதல்ல. புரிதலுக்கு நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

14 நவம்பர் 2013

இனி தேவரின அரசியல் எப்படி இருக்க வேண்டும்?



இன்றைக்கு நம்மினத்தவர்கள் பலரை நாம் மிகக்கடுமையாக விமர்சிப்பதற்கு ஒரே காரணம் வேறொரு சாதியோடு கூட்டணி வைத்ததால்தான் என்பது மற்ற எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் என் கேள்வி,

மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல் தடை மற்றும் ஸ்ரீ தேவர்ஜெயந்தி தடை, முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுசுவர் இடிப்பு, போலி என்கவுண்டர் துப்பாக்கிச்சூட்டில் பிரபு - பாரதி - குமார்  கொலை, திருநெல்வேலியில் மாமன்னர் பூலித்தேவன் நினைவேந்தலுக்கு தடை, திருநெல்வேலி - இராமநாதபுரம் - சிவகங்கை உள்பட பல மாவட்டங்களுக்கு 144 தடை, இதையெல்லாம் செய்வது யார்?

இந்த திராவிட அரசியல் தானே தமிழனையும், தமிழனென்ற அடையாளத்தையும் மறைமுகமாக அழித்து வருகின்றது. சாதி என்றோ தலைவன் என்றோ - எந்தவிதத்திலும் தமிழன் ஒன்றுபட்டுவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, தமிழனின் ஒவ்வொரு அடையாளத்தையும் ஒவ்வொன்றாக சிதைப்பது இந்த இல்லாத திராவிடத்தின் கேவலமான அரசியல் தானே? அந்த தீரா விடமான திராவிடத்தை அழிக்கவும், நம் பண்பாட்டு அடையாளத்தை காக்கவும், எந்த தேவரின அமைப்பு அரசியலில்  நேரடியாக களம் காண முயற்சி எடுத்துள்ளது?

நம் தேவரின அமைப்புகள், இல்லாத திராவிடம் என்ற மாயையை நம்பி, அந்நியர்கள் ஆளுமை நிரம்பிய திராவிட கட்சிகளான திமுகவிடமும் - அதிமுகவிடமும் தேர்தல் சமயத்தில் தஞ்சம் புகுந்தன என்பது கடந்தகால வரலாறு மட்டுமல்ல நிகழ்காலத்திலும் அதுவேதான் தொடர்கிறது. அப்படிப்பட்ட திராவிட கட்சிகளிடம் ஓரிரு தொகுதிகளுக்காக தானே, நம் தேவரின அமைப்புகள், நம்முடைய எண்ணிக்கையை காரணம் காட்டி, நம்மையும்  -  நம் வாக்கினையும் - நம் மானத்தினையும் அடகு வைத்திருந்தன.

பெரும்பான்மையான சமூகமாக தேவரினம் இருந்த போதும், ஓரிரு தொகுதிகளுக்காக இன்னமும் திராவிட மயக்கத்தில் இருக்கும் தேவரின அமைப்புகள், தைரியமாக தனித்து தேவரின அரசியல் செய்ய களம் காணவில்லையே ஏன்? தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் - 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. எல்லா தொகுதிகளிலும் தனித்து நிற்பது என்பது விழலுக்கு இறைத்து நீர்போல வீண் தான். எனவே, காலமறிந்து - களமறிந்து நிச்சயமாக வெற்றிவாகை சூடக்கூடிய தேவரினத்தவர்கள் அதிகம்வாழும் தொகுதியை தேர்ந்தெடுத்து, தேவரின அமைப்புகள் தேர்தலை சந்திக்கலாமே?

ஏற்கனவே, தேவரின அமைப்புகள் தனித்து நின்று தோல்வியை சந்தித்திருக்கலாம். அது பெரியவிசயமல்லவே. தோல்வியே சந்திக்காமல் அரசியல் நடத்த அனைத்து தேவரின தலைவர்களும், ஸ்ரீ பசும்பொன் முத்துராமலித்தேவர் கிடையாது என்பதுதானே எதார்த்தம். பெயரளவில் மட்டும் அடைமொழியாக "வாழும் தேவர்" யென்று சொல்லி பெருமைப்பட்டு கொள்ளலாமே தவிர, ஒருபோதும் தேவரைப்போல யாரும் ஆகிவிட முடியாது. ஏனெனில், பசும்பொன் ஸ்ரீ தேவருக்கு நிகர் தேவர் மட்டுமே; வேறு யாரும் இதுவரை தோன்றவும் இல்லை, இனி தோன்றப்போவதுமில்லை.

தேர்தலில் தோல்வியை சந்திப்பதால் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை இன்னும் பக்குவடுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் தளர்ச்சியை ஏற்படுத்திவிட கூடாது. தன்னைத்தானே "ஒட்டுமொத்த தேவரினத்தின் ஒரே தலைவர்" யென்று பிரகனபடுத்தி கொள்வதில் உள்ள கவனம், தேர்தல் சமயத்திலும் இருக்க வேண்டுமல்லவா?

ஒருவேளை தனியாக அரசியலில் களம் முடியாத பட்சத்தில், வழக்கம்போல அக்டோபர் மாதம் மட்டும் மாமன்னர் மருது பாண்டியர் நினைவேந்தலுக்கும், தேவர் ஜெயந்திக்கும் சிறப்பாக எதையாவது செய்துவிட்டு மற்ற 11 மாதங்களும் ஓய்வெடுத்து விடலாமே. அப்படியும் செய்ய முன்வரவில்லை. அப்பறம் ஏன் தேர்தல் சமயத்தில் மட்டும் ஜெயலலிதாவையோ - கருணாநியையோ சந்திக்க மெனக்கெட்டு கொண்டிருக்கிறீர்கள்?

திராணி இருந்தால், உங்களது சொந்த ஊரை உள்ளடக்கிய ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று வெற்றி பெற முயற்சிக்கலாமே? இல்லையெனில் தேவரின மக்கள் அதிகமாக வாழும் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, அங்கே தனித்து நின்று வெற்றியடையலாமே? என்னதான், திராவிட கட்சிகளிடம் கைக்கட்டி நின்றாலும், ஓரிரு தொகுதியைத்தானே ஒதுக்க போகிறார்கள். மண்ணின் மைந்தர்களான பெரும்பான்மை தேவரின மக்களின் கட்சி எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை திராவிடம் என்ன நிர்ணயிப்பது? பெரும்பான்மையான ஓட்டுவங்கியை கொண்டுள்ள தேவரினமக்களின் அரசியலை, தேவரின அமைப்புகள் கையில் எடுக்க ஆளுமை இல்லாதவரை திராவிடத்தின் காலில் விழுந்தே கிடக்கவேண்டும் என்பதே நியதி.

தமிழ் சாதிகள் எப்போதுமே ஒன்றுபட்டு விட கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருக்கும் திராவிடத்தை முதலில் வேரறுக்க வேண்டும். தமிழ் சாதிகள் ஒன்றுபட்டு விட்டால், திராவிடம் என்ற மாயை செல்லாக்காசாகி விடும் என்பது திராவிட கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால், திராவிடத்தை எதிர்ப்போரை, 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் தற்காலிகமாக ஆதரிக்கலாம். பிறகு தேவரின அரசியலில் நம்மை வலுப்படுத்திக்கொண்டு, இரு எதிரிகளோடும் நேரடியாக மோதிப்பார்க்கும் விதமாக, தனியாகவே தேர்தலை சந்திக்கலாம். எது வசதி என்பது தேவரின அமைப்புகளின் கையில்தான் இருக்கிறது. அதை விட்டுவிட்டு, நமக்குள்ளாகவே சண்டையிட்டு முட்டிமோதி கிடப்பது ஒட்டுமொத்த தேவரினத்தின் ஒற்றுமைக்கு களங்கத்தை தான் ஏற்படுத்துமே தவிர ஒருபோதும் எந்தவித பெருமையையும் தந்துவிடாது.

ஏனென்றால், எதிரிகளை விட துரோகிகளாலே வீழ்த்தப்பட்ட இனம் தேவரினம் என்பதற்கு எடுத்துக்காட்டே ஸ்ரீ பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவரும் - மாமன்னர் மருது பாண்டியர்களும் தான் என்பது நமக்கு தெரிந்த வரலாறு. எனவே, கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒன்றுபட்டு அரசியல் செய்வோம்! அரசையும் அதிகாரத்தை கைப்பற்றுவோம்!

- இரா.ச.இமலாதித்தன்

தேவருக்கு முதுகளத்தூர் முடிவல்ல!

மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த சூட்சுமமான உபாயங்களைப் புரிந்துகொண்ட தேவர் “நான் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் கலந்துகொள்கிறேன்” என்று தெளிவுபடுத்துகிறார்.

“இன்று நடப்பது அரசியல்ரீதியான பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தை; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, கையொப்பம் இட்டு அறிக்கை கொடுப்பதே பொருத்தம்; நாளைக்குப் பொதுப் பேச்சுவார்த்தை என்று கூட்டி அதில் யார் யார் அக்கறையும் ஆர்வமும் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாரும் கையொப்பம் இடுவோம்; அறிக்கை கொடுப்போம்” என்பதே தேவரின் நிலைப்பாடாக இருந்தது.

அன்று நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் ஆவணமும் வழக்குமன்றத்தில் தேவர் அளித்த வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்துகின்றன. உண்மைகளும் நடந்த நிகழ்ச்சிகளும் இவ்வாறு இருக்க, நூல் மதிப்புரையில் ஆசிரியர், “மறவர்கள் சார்பாக முத்துராமலிங்கத் தேவர் கலந்துகொண்டார்” என்று எப்படி எழுதினார் எனத் தெரியவில்லை. நூலாசிரியருக்குச் சார்பு நிலை இருக்கலாம்; சார்புநிலை இருப்பதால் தானே ஒரு நூலை எழுதுகிறார். ஆனால், மதிப்பீடு செய்கிறவருக்கு ஏன் சார்புநிலை? அல்லது ஏன் கவனமின்மை?

முதுகுளத்தூர் கலவரம் பற்றி, ஒருசார்பான நூல்களும் கருத்துகளுமே வந்துகொண்டிருக்கின்றன. இவை உண்மையை வெளிக்கொணரும் முயற்சியாக இல்லை. முதுகுளத்தூர் கலவரம் குறித்து எழுதும் போதெல்லாம் தேவரை விமர்சித்து, சாதித் தலைவர் என்று சாயம்பூசி, தவறான அடையாளங்களைக் காட்டுவதால் கலவரத்தின் சரியான பின்னணி என்ன என்பது கண்டுணரப்படாமலே போய்விடுகிறது.

இது சாதிக் கலவரம் அல்ல; தேவரின் அரசியல் புகழை, வெற்றிகளை மாசுபடுத்த உருவாக்கப்பட்ட “அரசியல் கலவரம்” என்று ஆராய்ந்து எழுதினால், அது, தோழர் இமானுவேல் சேகரனின் படுகொலையை நியாயப்படுத்துவதாக ஆகிவிடாது. தோழர் சேகரனின் படுகொலை படுமோசமான நிகழ்வு; ஏற்றுக்கொள்ளவே முடியாத பயங்கரம். வரலாற்றை ஆராய்கிறவர்கள் இது ஏதோ தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள்மீது முக்குலத்து மக்கள் கிளர்ந்து நடத்திய சாதிக்கலவரம் என்று மட்டுமே அணுகிப் பார்க்கும்போது பல உண்மைகள் மறைந்துவிடுகின்றன;

பல கேள்விகளுக்கு விடையும் கிடைப்பதாக இல்லை. காஷ்மீர் பிரச்சினை, நேதாஜி மரணம், காமன்வெல்த் வலையில் இந்தியா சிக்கிக்கொண்டிருப்பது போன்றவை குறித்தும், அமெரிக்க, ஆங்கில ஏகாதிபத்தியங்களின் ‘செல்லப்பிள்ளை’யாகவே பண்டித நேரு நடந்துகொள்கிறாரே என்றும் தேவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் நிகழ்த்திய பேருரைகள் ஆளும் காங்கிரஸ்காரர்களை அச்சத்தில் ஆழ்த்தின. நேருவின் விசுவாசிகளுக்கு, விசுவாசமாக இருந்தால் பதவிகளில் தொடரலாம் என்று ஆசைப்படுகிறவர்களுக்குத் தேவரின் அனல் பேச்சுகள் உவப்பாயில்லை. தேவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கைப் பார்க்கும்போது அவரை நாடாளுமன்றத்தில் நுழையவிடாமல் தடுக்க முடியாது என்று உணர்ந்த அன்றைய ஆளும் காங்கிரஸ், வேறு ஒரு மாற்று வழி பற்றி யோசித்தது. அதுதான் சாதிச்சாயம் பூசப்பட்ட, தேவரை அதில் வம்புக்கு இழுத்த ‘முதுகுளத்தூர் கலவரம்’ என்ற அவல நாடகம்.

தாழ்த்தப்பட்ட தோழர்கள், பெருமக்கள் பல விஷயங்களைப் பரிசீலித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். என்னதான் காங்கிரஸ் பேரியக்கம் சோஷலிஸம், சமத்துவம் பேசினாலும் அது அடிப்படையில் ஒரு முதலாளித்துவ இயக்கமே. பல நேரங்களில் அண்ணல் காந்தியடிகளையே மறுதலித்த இயக்கம்; பெருந்தலைவர் காமராஜர் பதவியிலிருந்து விலகியபோது, அந்த இடத்தில், எல்லா வகையிலும் மாண்புகள் நிறைந்த, எளிமையின் ஏந்தலாக வாழ்ந்து காட்டிய கக்கன்ஜியை வைத்து அழகுபார்க்க நினைக்காத இயக்கம். பாமர மக்களுடன் தொடர்பு இல்லாதவரும் வெறும் ‘கோப்புகளு’டன் மட்டுமே தொடர்புகொண்டிருந்தவருமான பெரியவர் பக்தவச்சலத்தை உட்கார வைத்த இயக்கம்; அதனாலேயே மீள முடியாத பெரிய சரிவை ஏற்படுத்திக்கொண்ட இயக்கம்.

மதுரை விமான நிலையத்துக்கும் மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்துக்கும் தேவரின் பெயர் வைக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தவுடன், அதற்குப் போட்டியாகத் தோழர் சேகரனின் பெயர் வைக்க வேண்டும் என்று அறிக்கைவிடுவது மேலும் மேலும் பிளவைத்தான் உருவாக்கும். யாரோ சில அரசியல் புதுக்கட்சிப் பிரமுகர்களின் ஆர்ப்பாட்ட, அவசர அறிக்கைகளுக்குள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல், சார்புநிலைப்படாமல், நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும். நடுநிலைச் சிந்தனைதான் நாட்டின் நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும். தாய்நாடுதான் நமக்குப் பெரிது; ‘தலைவர்கள்’ அதற்குப் பின்னர்தான்!

நன்றி: மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை & காலச்சுவடு